முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2005 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சில பட்டாம்பூச்சிகளின் பருவகாலங்கள்...

சிறகடிச்சுக்கிட்டுதான் இருந்தோம்! கொரங்குபெடல் சைக்கிளிலும் ரைட்டாதப்பா கட்டங்களிலும் படிக்கட்டு சறுக்கலிலும் கோணமூக்கனின் காக்காகடிக்கும் தெருப்பயகளுடம் ஐஸ்பாய்க்கும் அம்மாப்பா விளையாட்டுக்கும் இதுக்குமுன்னால யாருமே திட்டுனதில்ல தம்மு தும்முன்னு நடக்காதே... அடக்க ஒடுக்கமா ஒக்காருடி.. எப்பப்பாரு என்னடி இளிப்பு? அத்தனை அசைவுகளுக்கும் திருத்தம் சொல்லறாங்க நாங்க இதுவரை பறந்ததை ரசிச்சவங்க டீவிசானலை திடீரென மாத்தறதும் நான் தலைகுனிந்து விரல்நகம் கடிப்பதும் எங்க வீட்டின் புதுப்பழக்கம் ச்சே! அம்மாதான் இப்படின்னா இந்த அண்ணனுக்கென்ன? முன்னமாதிரி விளையாடவராம தள்ளித்தள்ளிப்போறான் கொரங்கு... பசங்ககூட சேரக்கூடாது சரி.. அப்பாவின் கழுத்தையுமா பிடிச்சு தொங்கக்கூடாது? இப்போதெல்லாம் பழகிக்கொண்டோம் சட்டையை முன்னால் இழுத்துப்பிடித்துக்கொள்ள சில பார்வைகளை தாண்டிவரும்போது யாரு கேட்டா இந்த சனியனை இப்போ வரலேன்னு? அய்யயோ அங்க்கிள்! நாங்க போறோம்... அம்மா சொல்லியிருக்காங்க I should not talk to Strangers!

ஸ்ஸ்சப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே!

பழம்தின்னு கொட்டையப்போட்ட பெரியவக எல்லாம் இங்க நின்னு ஆடி நூறும் இருநூறூமா செஞ்சுரிகள போட்டுத்தாக்கிக்கிட்டு இருக்கற இந்த சபைல வெறும் அம்பதுகே பதிவு போடறதெல்லாம் கொஞ்சம் 'கங்குலி'த்தனமா இருந்தாலும் அரிப்பு யாரைவிட்டது சொல்லுங்க?! ஆமாங்க... இதுதான் எனது 50வது பதிவு! போட வருசம் ஜனவரில ஆரம்பிச்சது. கிட்டத்தட்ட ஒரு வருசம் முடியப்போகுது! ரவிசாஸ்திரிய மிஞ்சற ஒரு முடிவோட படுநிதானமா கட்டையப்போட்டுக்கிட்டு இருக்கேன்! ஆடிக்கும் அம்மாவாசைக்கும் எட்டிப்பார்த்து எழுதிட்டுபோற என் அக்கவுண்டை என்னைக்கு ஃப்ளாகரே பொறுத்துக்கமுடியாம என் கடவுச்சீட்டை காணாமடிக்கப்போகுதோ தெரியலை! எனக்கெல்லாம் போனவருசம் வரைக்கும் வலைன்னா அது மெயிலு பார்க்கறதுக்கும், தினமலர், தந்தி, மாலைமலர், தினகரன், குமுதம், விகடன்னு எங்கனயாவது தமிழ் எழுத்து தெரிஞ்சா மேயறதுக்கும்தான்னு ஒரு பொழப்பத்த பொழப்பு ஓடிக்கிட்டு இருந்தது. எங்கனயோ ஏதோ ஒரு சைட்டுல ஒரு சுட்டியை தட்ட அது ஒரு ஃப்ளாகரு பக்கத்துக்கு போயிருச்சுங்க! அது அடாத மழையிலும் விடாது பதியும் அண்ணன் பத்ரியோடதுதான்! :) பார்த்தவொடனே புல் அரிச்சிருச்சி! அந்த பதிவுல ஒரு சைடா பார்த்

புதூர் குஞ்சாளு - சிறுகதை

“ஒரு நூறு ரூபா இருந்தா போயிட்டு வந்துரலாண்டா! ஆனா அது ஒரு மணி நேரத்துக்குதான்” "ஏண்டா எல்லாம் தெரிஞ்ச மாதிரி புளுகுற? யாரு சொன்னா உனக்கு?" "நம்ப மெக்கானிக் கணேசன் தாண்டா... அவன் பிரண்டு போயிருக்கானாம்... ஆனா நைட்டு 9 மணிக்கு மேலதானாம்! வீட்டுமுன்னாலயே ஒருத்தன் ஒக்கார்ந்திருப்பானாம். அவன் கிட்ட காசு குடுத்துட்டு சொன்னா போதும். போயிரலாம். ஆனா கண்டிப்ப்பா ஹெல்மெட் வாங்கிட்டு போகனுமாம்!" "டேய்... பார்த்த மாதிரி பேசாத.. இந்த வேலையை பண்ணறான்னா அப்பறம் எதுக்கு தெனமும் ரோடு ரோடா பூ வித்துக்கிட்டு அலையறா?" "போடா சும்பை... அதெல்லாம் ஒரு செட்டப்புக்காகதான். அப்பதான் எவனும் கேக்கமாட்டான். போலீஸிம் புடிக்காது. புருசனும் இல்லை. அப்பறம் ஏன் கலர் பொடவை கட்டறா? பூ விக்கறவ ஏன் லோஹிப்பு கட்டிக்கிட்டு விக்கனும்?" "அதுக்காக ஒடனே ரேட்டுன்னு சொல்லிடறதா? புருசன் இல்லாததால பூ வித்து சம்பாதிக்கறா. வெள்ளைப்பொடவை கட்டுனா யாரும் பூ வாங்க மாட்டாங்க.. அதுனால கலர் பொடவை கட்டிக்கிட்டு சுத்துறா. இதை வச்சி எப்படிரா இப்படி சொல்லுற? நீயும் போனதில்

தமிழ்ப்பதிவுகளில் நல்லதொரு மாற்றம்!

கொஞ்சநாளாகவே பதிவுகளில் அடிதடி, வசவுகள், தனிமனிதத்தாக்குதல்கள் என்று படிச்சு படிச்சு ஓய்ஞ்சுபோய் இருக்கறப்ப இந்த இரண்டு பதிவுகளை படிக்கும்போதே அவ்வளவு சந்தோசமா இருக்குங்க! 1. http://veeravanniyan.blogspot.com/2005/11/blog-post_07.html வீரவன்னியன் : கருத்துகளை எதிர்கருத்துகளுடன் மோதிக் கொள்வோம். அனைவரது பதிவுகளையும் மதிப்போம். ஒவ்வொருவருக்கும் தனித் திறமை இருக்கத் தான் செய்கிறது. ரஜினிராம்கி : Veeravanniyan, I second your post. I think, we are sailing on the same boat. Let us continue to be a good friend. All the Best! 2. http://sivapuraanam.blogspot.com/2005/11/blog-post_17.html மலேசியா ராஜசேகரன் : உங்களைப் போன்ற இளஞர்களின் முயற்சியும் துடிப்பும் பாரட்டப் பட வேண்டியவை. ஆதரிக்கப் பட வேண்டியவை. உங்களுக்கும் உங்கள் முனைப்பான நண்பர்களுக்கும் எதிர் புரத்தில் நின்று தர்க்கம் செய்ய எனக்கு மனமில்லை. அது என் முதிர்ச்சிக்கும் அழகில்லை. ஆதலால், உங்கள் நண்பர்கள் பலரது மனதையும் புண்படுத்துமாறு அமைந்த என் எழுத்துக்களுக்காக நான் இங்கு நிபந்தனை அ

ஹாரிபாட்டரும் மாயத்தீக்கோப்பையும் என் மருவாதியும்!

ந மக்கு நேரமே சரியில்லைங்க! எந்த நேரத்துல பயத்தை பத்தி எழுதுனனோ தெரியலை வாழ்க்கைல எல்லாமே ஒரு மார்க்கமாவே நடக்குது! சொந்தக்கார பயக ஊருல இருந்து வந்திருக்காங்களே.. அவிங்களை பேங்களூரு சுத்திக்காட்டலாம்னு ஒரு நல்லெண்ணம் இருந்திருந்தா ஒழுங்கா MG Roadக்கு கூட்டிட்டுபோயி வண்ணக்கோலங்கள் காட்டிட்டு(இன்னைக்கு வெள்ளிக்கிழமை வேற! ) அப்படியே ஒரு அஞ்சுநக்கி( அதாங்க 5 ரூபா கோன்ஐஸ்...) வாங்கிக்குடுத்து அப்படியே பஸ் ஏத்தி அனுப்பியிருக்கலாம்! அதை விட்டுட்டு புதுசா ஒரு கடைவீதி ஒன்னுல நிறைய தியேட்டரு எல்லாம் இருக்கு வாங்கப்பு காட்டறேன்னு PVRக்கு கூட்டிக்கிட்டு போனனுங்க. அங்க போயி வழக்கம் போல வாசப்படில கொஞ்சநேரம் ஒக்கார்ந்து தரிசனம் பார்தோமுங்களா( என்னண்ணே இது? எல்லா புள்ளைங்களும் பத்தாத துணியே போட்டிருக்காளுங்க..! ) அப்பறம் வழக்கம் போல BOSEக்கு போயி ஹோம்தியேட்டரு டெமோ பார்த்தோமுங்களா.. அதுக்கப்பறம் அப்பிடியே திரும்பாம இன்னும் ஒரு ஃப்ளோரு மேல போனதுதாங்க தப்பு! "அண்ணே கடையெல்லாம் நல்லாத்தான் இருக்கு! அப்பிடியே ஏதாவது படமும் பார்த்திறலாம்!"னானுவ! சிவகாசி இல்லை(எல்லாம் விதியப்போவ்!) ..மஜா

மாப்பூ...! வச்சிட்டான்யா ஆப்பூ...!!

உ ங்களுக்கு தைரியம்னா என்னன்னு தெரியுமா? பயப்படாததுமாதிரி நடிக்கறதுதான் அப்படின்னு நம்ப அண்ணாத்தே கமலு குருதிப்புனல்ல சொல்லுவாரு பார்த்திருக்கீங்களா? அது அப்படியே சரின்னு வச்சிப்போம். ஆனா பயம்னா என்னன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா? இந்த கேள்விக்கு ஆயிரம் விடைகள் இருக்குங்க! எல்லாத்தையும் எடுத்துப்போட்டு அலசி ஆராய்ந்து பிரிச்சி மேய்ந்து கடைசியா என்ன கிடைக்குதுன்னு பார்த்தா அதுவும் ஒரே வார்த்தைதாங்க. அறியாமை!! அதுதாங்க பயம்! என்ன உதாரு ரொம்ப விடறானேன்னு பார்க்கறீங்களா? எல்லாம் ஒரு அனுபவம்தாங்க! மனசுக்குள்ள பெரிய பிஸ்த்துன்னு நினைப்பு இல்லைன்னாலும் தெரிஞ்சதை சொல்லறதுல்ல தப்பில்லைதானுங்களே? எனக்கு இந்த பேய் பிசாசெல்லாம் இருக்கா இல்லையான்னு தெரியாதுங்க! நம்பிக்கையும் இல்லை. கல்யாணமாகி 2 வருடங்கள் ஆனதுக்கப்புறமும்! ஆனா கல்யாணத்துக்குப்பிறகு டார்வின் கொள்கைல முழுநம்பிக்கை உண்டு..("T.Nagar போத்தீஸ்க்கு போலாம்னா ஏன் கொரங்கு மாதிரி முழிக்கறீங்க...?!") அதுனால அதப்பத்தியெல்லாம் பயமே இல்லை. ஆனா பயப்படுறவங்களைப்பார்த்தாதான் நமக்கு கொஞ்சம் பேஜாருங்க! விசயம் ஒன்னுமே இர

Appun, Give me a Rocket!

உங்கள்ல எத்தனை பேரு கவருமெண்ட்டு ஆசுபத்திரிக்கு போயிருக்கீங்க? அட, நோயாளியா இல்லைங்க! கையில நாலு ஆப்பிளோ ஆரஞ்சுப்பழமோ இல்லை நீல்கிரிஸ் பேக்கரி பிரட்டையோ வாங்கிக்கிட்டு தெரிஞ்சவங்க சொந்தக்காரங்கன்னு படுத்திருக்கறவங்களை பாக்கறதுக்காவது?! ஒரு முறை போயிட்டுவந்திங்கன்னா இந்த ரெண்டுல ஒரு எண்ணம் நிச்சயமா மனசுல தோணலாம்! இடிஞ்சு விழுகறமாதிரியான பழய கட்டடத்துல 100 படுக்கைகளை நாலா பக்கமும் போட்டு மூலை முக்குல எல்லாம் வெத்தலை எச்சில் துப்பிவச்சி, எப்பவும் சொதசொதன்னு இருக்கற கதவில்லாத பாத்ரூமுக்குள்ள இருந்து 24 மணிநேர பிரீ சர்வீசா வீச்சம் ஆசுபத்திரி பெனாயிலு வாசத்தையும் தாண்டி வீசியபடி இருக்க உள்ள போறதுக்கும் வெளில வர்றதுக்கும் தனித்தனியா அஞ்சோ பத்தோ ஆளுக்கேத்தபடி லஞ்சம் கொடுத்தபடியும் உள்ள வந்தாலே இருக்கற ஆரோக்கியமும் போயிரும்போல இருக்கற நெலைல படுத்திருக்கற பரிதாப ஜீவன்கள் எல்லாம் எப்படி பொழைக்குமோங்கற கவலை ஒன்னு.. இல்லை கொஞ்சம் அன்னாடங்காச்சிங்களோட எகானாமி வெவரம் தெரிஞ்சவங்களா இருந்தா அடுத்தவேளை சோத்துக்குமட்டும் வழியிருக்கற ஜனங்களுக்கு இருதயம் கிட்னி பெயிலியர்னு ஏதாவது பணக்காரவியாதி வந்தா

கருத்து சுதந்திரம்னா என்னாண்ணே?

அப்பாவி: கருத்து சுதந்திரம்னா என்னாண்ணே? அறிவுப்பசி அண்ணாசாமி: சோக்கா கேட்ட அப்பாவி.. பாயிண்டு பாயிண்டா சொல்லறேன் கேட்டுக்க... 1. "அதுவா? எனக்கு பிடிச்ச கருத்தை சொல்லறதுக்கு உனக்கு முழுசுதந்திரம் இருக்குன்னு அர்த்தம்" அப்படின்னு எழுதிவச்சிகிட்டு, F9/11 படம் எடுத்தவரு அது அவரோட சொந்தபடத்துல சொன்ன சொந்த கருத்துக்கள் அப்படிங்கறதை விட்டுட்டு என்னமோ புஷ்சு வீட்டு வரவேற்பறைல கக்கா போயிட்டு சும்மா வந்துட்ட மாதிரி சொல்லறதுதான் கருத்துச்சுதந்திரம்னு நம்பவைக்கறது! நாம நகைச்சுவையா பத்தி பத்தியா எழுதினாலும் அது மத்தவங்களுக்கு நகைச்சுவைதான்னும் அதுக்கு மத்தவங்க யாராவது கருத்து சொன்னா ஒடனே நகைச்சுவை முகத்தை கலைச்சுட்டு சீரியசா அதுபத்தி விவாதிக்கனும்னு நம்பறது. அதையே ஒருத்தரு "இந்த நகைச்சுவை மூன்றாம் தரமா இருக்கு! " அப்படின்னு ஒரு கருத்தை சொன்னா "இதையெல்லாம் நகைச்சுவை இல்லைன்னு சொன்னா உனக்கு மூளைக்கோளாரு! " அப்படின்னு பின்னூட்டம் வந்தாலும் ஒன்னும் சொல்லாம அதை அப்படியே வச்சிருக்கறது! 2. சேரும்போது மட்டும் நாம எழுதறது நாலு பேரு கவனத்துக்கு போகனும்ற &qu

நான் பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை!

பே சுவதே புரியும் பொழுது முகத்திலிருக்கும் இரு பட்டாம்பூச்சிகளுக்கு ஏனிந்த விளக்கவுரை வேலையென கேட்டபோது மனசிலொரு கிறுகிறு விடுமுறையில் தூதாக பட்டாம்பூச்சிகள் வீடுவரைவருமா எனக்கேட்டு அனுப்பிய பட்டாம்பூச்சி வாழ்த்துஅட்டை புடவைகளுக்கடியில் பத்திரமாய் என்னைவிட மாநிறமா எனக்கையோடு கையொற்றி முதன்முதலில் தொட்டபொழுது முன்உணராத பட்டாம்பூச்சிகள் என் அடிவயிற்றில் பிறந்தநாள் பரிசென நீ பிடித்துவந்து நாம் பறக்கவிட்ட விரல்நுனிக்கு வர்ணம்கொடுத்த நீலம்தெளித்த பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சிகளும் இப்படித்தான் கலவிக்கொண்டே பறக்குமென நீ சொன்னதை உணர்ந்ததினம் நம் கலவியின் உச்சகணம் சிலநாட்களே வாழ்ந்துமடியும் பட்டாம்பூச்சிகளுக்குள் பிரிவுத்துயர் இல்லையென விட்டுச்சென்ற கசந்த அந்த கடைசி முத்தம் மன்னிக்கவும், நான் இப்பொழுது பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை

எதுவரை...

தனித்திருக்கிறேன் விழித்தும் தானிருக்கிறேன் பசித்தும்கூட இருக்கிறேன் நட்பென்ற உறவினை காதலெனும் உணர்வுகளால் அடித்தெழுத இயலவில்லையென சொல்லிச் சென்றவள் நீ உன் உறவுகளுக்கு நீ நேர்மையாயிருக்க என் உணர்வுகளுக்கு நான் தனித்திருக்கிறேன்!

துருப்பிடிக்கற உடம்பு

ஒ ரு நாளைக்கு 10மணிநேரம் நாங்க உழைக்கற கடின உழைப்பை(!?) பாராட்டி ஊக்குவிக்கற(ம்ம்ம்.. இந்த பொழப்புக்கு ஊக்கு விக்கறதே மேல்..) வகையிலும் மனசுக்கும் உடலுக்கும் ஒரு புத்துணர்ச்சி அளிக்கனும்கற நல்லெண்ண அடிப்படையிலும் எங்க ஆபீசுல எங்களையெல்லாம் ஒருநாள் இன்பச்சுற்றுலாவுக்கு கூட்டிக்கிட்டு போனாங்க போனவாரம்! ஒரே தமாசுதான் போங்க அன்னைக்கு முழுசும்! வருசம் முழுசும் ஒரே எடத்துல ஆடாம அசங்காம ஒக்கார்ந்து பென்ச்சு தேச்சிட்டு அது எப்படி ஒரே நாள்ள ஒடம்பும் மனசும் சீரான நெலைக்கு வரும்னு யாரும் கோயிஞ்சாமித்தனமா(அப்பாடா! நாமளும் சொல்லியாச்சு..! ) கேக்கப்படாது! HR ஏதாவது குடுத்தா அனுபவிக்கனும். ஆராய்ஞ்சா அப்பறம் வருத்தமாயிரும்! :) நியாயமா பார்க்கப்போனா நாம இங்க தமிழ்மணத்துல ஆபீசு நேரத்துல கொட்டற உழைப்புக்கு காசி அண்ணன்தான் நம்பளை இப்படி எங்கயாச்சும் கூட்டிக்கிட்டுபோகனும். நாம அத்தனைபேரும் ஒன்னுசேர்ந்தா சார் தாங்குவாரான்னு தெரியலை... சரி பொழச்சுப்போறார் விடுங்க. ஆரம்பத்துல சென்னை ECRதான் இதுக்கெல்லாம் சரியான இடம். இங்க பெங்களூருல போய் என்னத்த ரிலாக்ஸ் ஆகறது அப்படின்னு ஒரு சங்கடமாத்தான் கெளம்பு

இருவகை இந்தியா

நினைவு தெரிந்த நாளில் இருந்து எனக்கு தெரிந்த இந்தியா என்றால் அது கீழே உள்ளது தான். எந்த நாட்டிற்க்கும் இல்லாத அமைப்பாய் ஒரு அன்னையின் உருவகமாக இரு கைகளையும் நீட்டி வாரியணைக்க அழைக்கும் படியாய் இருக்கும். ஒவ்வொரு நாட்டும் ஒவ்வொரு இந்தியா இப்போது. அன்னாட்டுக்கும் இந்தியாவுக்கும் உள்ள அரசியல் உறவுகளைப்பொறுத்து! ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ வரைபடத்தையே மற்றநாடுகள் பயன்படுத்தவேண்டும் என்ற வரையரைகள், சட்டதிட்டங்கள் ஏதாவது உள்ளதா? ம்... என்னவாயிருந்தாலும் தலையில்லாத தாயைப்பார்க்க கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது!

தப்புன்னா திருத்திக்கனும்...

இத்தனைநாள் எழுதற பதிவுகளுக்கு வண்ணமா நல்ல நல்ல படங்களை கூகுளில் இருந்து உருவிப்போட்டபோது ஒன்னும் தெரியலை! ஆனா நேத்து ஆபீசுல Intelectual Property பத்தி ஒரு கூட்டத்துக்குபோன பிறகுதான் செய்யற தவறு புரிஞ்சது. அதனால இனிமேல் பதிவுகளோட போடற படங்களுடன் நன்றி (அ) source எனப்போட்டு கூட சுட்டியைக்கொடுக்கறதுதான் சரியான வழின்னு தெரியுது. இதுக்கும் மேல ஏதாவது விசயம் இருந்தா தெரிஞ்சவங்க சொல்லுங்க. திருத்திக்கலாம்! மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுசன்... மன்னிப்பு கேக்கத்தெரிஞ்சவன் அதைவிட பெரிய மனுசன்... அதுனாலதான்... ஹிஹி... அது சரி.. இந்த படம் எப்படி இருக்கு? (Picture Source: www.msgr.ca/msgr-humour/penance%2011.htm )

ஓட்டைப்பெட்டிக்குள் என் நேற்றைய உலகம்!

ம ழைச்சேறின் கலவை தெறிக்கும் குழம்பிய சகதியில் சடுதியில் திருஷ்டியாகிப்பின் காற்றில் ததும்பிப்பிறந்து ஈர்ப்பின் விசையில் கீழாக ஓசையற்றுப் பயணத்துவங்கி மாசற்ற மாசுகளின் மீட்சியின் விளிம்பில் மரிக்கத்துவங்கும் துகள்களின் தெரிப்பில் ஜீவன் அடக்கும் பொங்கிய குமிழிகளின் ஆயுளின் நீளமாய் வாழ்வைக்கரைக்கும் ஒரு துளி சகதியின் பழுப்பு வர்ணமாய்... அடச்சே... இந்த கோணங்கி புஸ்தகத்த இனி தொடக்கூடாது! சரிங்க.. நேராவே சொல்லிடுறேன்! பழுப்பேறிப்போன ஒரு அட்டைப்பொட்டி வீட்டை சுத்தம் பண்ணும்போது கிடைச்சதுங்க! திறந்து பார்த்தால் ஒரு வீரத்தமிழனின் வாழ்வியல் காவியத்தினை படைக்க உறுதுணையளிக்கும் சான்றுகள் (மறுபடியும் பார்றா...! ) என்னோட கஜானா பொட்டிதாங்க அது! படிக்கற வயசுல ஏதேதோ சேர்த்துவச்சிருக்கேன்! ஒவ்வொன்னையும் எடுத்துப்பார்த்தா ஆனந்தக்கண்ணீரும், திகைப்பும், அதிர்ச்சியும், புன்முறுவலும் மாறிமாறி வருது! (ம்ம்ம்.. சிவாஜிக்கு அப்பறம் நவரசத்தையும் காட்ட நம்பள விட்டா வேறே யாரு இருக்கா? ) மொதமொதல்ல வாங்குன ஃபியூமா ஷூவோட சிம்பலும் சைசும் போட்ட சின்ன அட்டை! ஒரு பெரிய சண்டைக்கு அப்பறம் ரொம்பநாளா

பொட்டிய கட்டறேனுங்க!

ஆஹா! ஒரு வாரம் ஓடிப்போச்சு! உங்களோட உற்சாகமான பின்னூட்டங்களும் கருத்துக்களூம் நெஜமாவே ரெண்டு டம்ளர் ராகிக்கஞ்சிய மோருல கரைச்சு கல்லுப்பு போட்டு வெங்காயத்தை கடிச்சுக்கிட்டு குடிச்சப்புல ஜில்லுன்னுதான் இருக்கு! இந்த வாரம் நாமன்னு ஆனதுக்கப்பறம் நல்ல விசயமா எழுதனுமேன்னு நினைச்சதுல வெளைஞ்ச மலரும் நினைவுகள் தாங்க இதெல்லாம்! சொல்ல வந்த கருத்தும் இதுதாங்க.. நிஜமாவே வாழ்க்கையை பத்தி சொல்லிக்குடுக்கறதுக்கு நம்பளைசுத்தி எப்பவும் ஒரு நாலுபேராவது இருக்காங்க... கடவுள் என்னைக்கும் மனுசங்களை நேரா சந்திக்கறதே இல்லை! அதுக்குபதிலா சகஜீவனுங்களைத்தான் அவரோட தூதுவராகவும் அவங்களிடம் கிடைக்கும் படிப்பினைகளைத்தான் அவரோட நற்செய்திகளாகவும் அனுப்பறாரு! இல்லைன்னா நாமெல்லாம் எந்த பாடசாலைல போய் படிச்சு இதெல்லாம் தெரிஞ்சிக்கறது? ஆனாலும் ஒருவேளை இது என்னைக்கும் இலவசகல்வியா இருக்கறதால நாமதான் சரியா கருத்தா படிக்கறதில்லையோ என்னவோ?! நட்சத்திரவிதிப்படி எல்லா நாளும் எழுதனும்னாலும் வெள்ளிக்கிழமை மட்டும் முடியலைங்க..( மதியக்கா.. மன்னிச்சிருங்க! ) அன்னைக்கு ஆபீசுல ஒரு சர்வரு புட்டுக்கிட்டதுல நம்பளபோட்டு ஃபுல்நைட்டு பெண்டை நிம

எமிலி என்றொரு தோழி

தோ ழி அப்படின்னு ஒருத்தி இல்லாத வாழ்க்கைய ஆம்பளைங்க எல்லாம் கொஞ்சம் கண்ணை மூடிக்கிட்டு மனசுக்குள்ள கற்பனை செஞ்சு பாருங்க! கள்ளிச்செடிகளும், கண்ணுக்கெட்டியவரை மணற்பரப்புமாய் தீச்செடுக்கும் ஒரு வெட்கையான பாலைவனம் மனசுல வருதா? இல்லைன்னா மனசுல ஒரு மூலைல சின்னதா இருக்கற சந்தோச ஊற்றுல ஒரு கார்க்கை வைச்சு அடைச்சாமாதிரி ஒரு வறட்சியான வெறுமை தொண்டைய கவ்வுதா? ஆஹா..அப்படின்னா நீங்க நம்ப கட்சி! தோழிங்கறவங்க யாராவேனா இருக்கல்லாம்! கிளாஸ்மேட்டு, ரயில்சினேகம், பக்கத்து வீட்டு பத்தாவது படிக்கற ரெட்டை ஜடை வாலு, ஆபீசுல கூட வேலை செய்யற மாமி... ஏன்? அம்மா, தங்கச்சியா கூட இருக்கலாம். பார்த்தவுடனே மனசுல ஒரு உற்சாகம் வருதா? அன்னைக்கு நடந்தது எல்லாம் ஒன்னு விடாம சொல்லனும்னு தோனுதா? மனசுக்கு வருத்தமா ஏதாவது இருந்தா வெட்கப்படாம நாம் சொல்லவும் சலிச்சுக்காம அவங்க கேப்பாங்கன்ற நம்பிக்கையும் வருதா? உரிமையோட கோவிச்சுக்க முடியுதா? ஆம்பளைங்கற ஈகோவ தூக்கி ஓரமா வச்சிட்டு(ரொம்ப செரமமான வேலையையா இது! ) சகமனுசின்ற உணர்வோட அவங்களோட இருக்க முடியுதா? அப்பன்னா அவங்க தோழிதான்! எனக்கெல்லாம் இப்போதைக்கு இத்தனை நாள்

மனசுக்கு நேர்மையாய்...

கூ ரான் அப்படிங்கறதுதான் அவனோட பேருங்க. எனக்கு பத்தாவது படிக்கறதுல இருந்து பழக்கம். அவனுக்கு ஏன் கூரான்னு பட்டப்பேரு வந்ததுன்னு இன்னைக்கு வரைக்கும் தெரியாது. எங்க காலனி கிரிக்கெட் டீம் பக்கத்து காலனி கிரிக்கெட் டீமோட ஒருமுறை கார்க்பால் பெட்மேட்ச் வைச்சபோது ஆன பழக்கம். அவன் படிச்சதும் எங்க பள்ளிக்கூடத்துலயேதான். நல்லா பேட்ஸ்மேன்னு சொல்ல முடியாதுன்னாலும் காட்டடி மன்னன். மிடில் ஆர்டர்ல இறக்கிவிட்டா குறைஞ்சபட்சம் 25 ரன்னு கேரண்ட்டி! நல்ல கீப்பிங்கும் செய்வான். ஆனா இதையெல்லாம் மிஞ்சி அவன்கிட்ட இருந்த திறமைன்னா ஸ்கோரு ஏத்தறதும், டீமு தோத்தே ஆகனும்ற நிலமைல எதயாவது சொல்லி சண்டை போட்டு மேட்சையே கலைக்கறதுதான். அவன் இருந்தானாவே மேட்சுக்கு 2 சண்டை உறுதி! மேட்சுல தோத்துட்டா ஒரு புது கார்க்பாலை தோத்த டீம் ஜெயிச்ச டீமுக்கு தரனும். அதை கூட சகிச்சுக்கலாம். ஆனா தோத்த டீம் கேப்டன் ஸ்கோர்கார்டுல கையெழுத்து போடனும். அதுதான் தாங்க முடியாத அவமானமா இருக்கும். ஜெயிச்சவனுங்க சுத்தி நிக்க தோத்தவனுங்க மொகத்துல கடுப்போட எதுனால தோத்தோம்னு ஒரு அனாலிசிஸ்ல இருக்க கேப்டன் போய் கையெழுத்து போடனும். போட்டுட்டு