முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2006 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

க.க:5 - காதலிக்க நேரம் உண்டு! காத்திருக்க இருவர் உண்டு!!

எ ன்னது?! ஒரு வார கேப்புல சன்னமா பொண்ணை பேசி முடிச்சிட்டீங்களா? நிச்சயம் வரைக்கும் போயாச்சா? ரெண்டு வீட்டுலையும் கைய நனைச்சிட்டீங்களா?! கல்யாண தேதிக்கு இன்னும் அஞ்சாறு மாசம் இருக்கா? என்னப்பு... சொல்லவேல்ல? சரி விடுங்க.. சொந்த பந்தங்க மட்டும் கூடி மேட்டரை முடிச்சிருப்பீங்க... கல்யாணத்துக்காவது மறக்காம பத்திரிக்கை வைங்க! நமக்கெல்லாம் அடிக்கடி இந்த கல்யாணவீட்டு போட்டோவுலையும் வீடியோவுலையும் லைட்டா பல்லைக்காட்டிக்கிட்டு, 101 ரூவா வைச்ச கவரை கமுக்கமா மாப்ளை கைல அழுத்திட்டு, நமக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலீசு வாழ்த்தான "Many more Happy returns of the Day" அப்படிங்கறதை ஜாக்கிரதையா தவிர்த்து, கேனத்தனமா "மச்சி! கடைசில நீயும் கவுந்துட்டயா"ங்கற மாதிரி ஏதாவது பெனாத்தி, வீடியோல விழுகறதெல்லாம் நமக்கு சர்வசாதாரணங்கற மாதிரி ஒரு லுக்கோட, கொஞ்சம் முறுக்கிக்கிட்டு வெரைச்சா மாதிரி நின்னு வந்ததுக்கான எவிடென்சு காட்டலைன்னா சமுதாயத்துல திடீர்னு நம்ம பெரபலம் கொஞ்சம் கொறைஞ்சுட்டாப்புல ஒரு நெனைப்பு வந்துரும்! அதுக்காகத்தான்! மத்தபடி மூனுவேலை மூக்குப்பிடிக்க மொசுக்கறதுக்கு இல்லைங்...! ஆக ம

கெரகம் முடிஞ்சது! அடுத்தது க.க தான்... :)

ந ண்பர்களுக்கு, என் நலன் மீது அக்கறை கொண்டு "எதற்காக அப்படியொரு பதிவு எழுதினீர்கள்? இளவஞ்சியா இப்படி?" என அக்கறையோடு விசாரித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்! உங்கள் தனிப்பட்ட மடல்களுக்கு என்னுடைய பதிலாக இதனை வைத்துக் கொள்ளுங்கள். குசும்பன் அவர்களுடைய பதிவில் அதற்கான விளக்கங்களை அளித்து விட்டேன்! "இதெல்லாம் உங்களுக்கு தேவையா? நீயும் இப்படியா?!" என்பது முதற்கொண்டு இடித்துரைத்த நண்பர்களுக்கும், உங்கள் மீது தவறான அபிப்பிராயம் கொண்ட நண்பர்களுக்கு உங்கள் நிலைப்பாடு புரியவேண்டும் என கேட்டுக் கொண்டதற்காகவும் அவர்களுக்கு இட்ட பதிலினை இங்கேயும் இடுகிறேன்! "இளவஞ்சி சரியாகத்தான் செய்திருக்கிறான்" அல்லது "ச்சே..இவனும் இவ்வளவுதானா?!" என்ற எந்த நிலைப்பாட்டை படிக்கும் நீங்கள் எடுத்தாலும் எனக்கு மகிழ்ச்சி! அவ்வளவே! இதற்குப் பிறகு என்னிடம் இதைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை! சொல்லவும் மாட்டேன்! ஆகவே... அடுத்தது க.க தான்! பயப்படாதீகப்பு! :) **** "குசும்பனுக்கும் PKSக்கும் சில விளக்கங்கள்... குசும்பன் /PKS, முதலில் ஒரு நாய் வண்டியை எடுத

நண்பர்களுக்கு ஒரு செய்தி...

நண்பர்களுக்கு, எனது கடைசி இரண்டு பதிவுகளுக்கான சுட்டிகள் ஆட்சேபகரமான வார்த்தை பிரயோகங்களுக்காக தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவைகள் அனைத்தும் வலைப்பதிவாளர் என்ற வகையிலான எனது கருத்துக்களே தவிர தமிழ்மணத்தின் இணை-நிர்வாகி என்ற வகையில் எழுதப்பட்டவைகள் அல்ல! எனது கருத்துக்களில் உண்மையிருக்கிறது என நான் நம்புவதாலும், எழுதப்பட்ட வகையில் என் தவறுகளை மறைக்க விரும்பாததாலும் அந்த பதிவுகளை அப்படியே விட்டு வைக்கிறேன். எனவே, தமிழ்மணத்தின் உறுப்பினர் என்றவகையில் அதன் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இந்த முடிவினை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். எனது கருத்துக்களையும், உணர்வுகளையும் புரிந்துகொண்டு ஆதரவளித்த நண்பர்களுக்கும், தவறுகளை கடிந்துரைத்த நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்! படம் கொடுத்து உதவிய குழலிக்கும் என் நன்றிகள்! :)

ஒரே ஒரு நாயும் சிறைபட்டுள்ள கண்ணாடிக்கூண்டும்...

கண்ணாடிக்கூண்டுக்குள் சிறைபட்டுள்ள ஒரு நாயின் சில பரிதாபப் புலம்பல்கள்... "ஐயையோ! அங்கே ஒரு நாய் என்னைப்பார்த்து குரைக்கிறது!" "பயமா இருக்கே! என் காதுக்கு அருகில் வந்து தன் கோரப்பற்களை காட்டி இளிக்கிறது!" "ச்சே! அங்கே ஒரு நாய் கொஞ்சம்கூட லட்ஜையே இல்லாமல் அடிக்கடி தன் பின்புறத்தை தரையில் உரசிசொறிந்து தன் பொச்சரிப்பை தணித்துக்கொள்கிறது!" "அங்க பார்த்தியா! தேவையானால் நக்கவும், தேவைப்படாத போது எச்சில் உமிழ்வும் பயன்படும் நீண்டு வளந்த என் அழகான நாக்கைப் பார்த்து அந்த நாய்களுக்கு ஒரே பொறாமை" "தமாசையா தமாசு! அங்க ஒரு நாய் "தனக்குத்தானே திட்டத்தில்" தனக்குத்தானே நக்கிக்கொள்கிறது!" "ச்சீச்சீ! ஷேம்.. ஷேம்.. பப்பி ஷேம்! எந்த நாய்களுக்கும் விரைகளே இல்லை!" என்னங்க.. கேட்கவே பரிதாபமாக இருக்கிறதா? கண்ணாடிக் கூண்டுக்குள் சிறைபட்ட நாய்க்கு சுற்றிச்சுற்றி பார்ப்பதெல்லாம் நாய்களாகவே தெரியாமல் வேறென்ன தெரியும்? தனக்கு காயடிக்கப்பட்டுள்ளதைக் கூட உணராமல் "குரைப்பது" மட்டுமே தொழில் என "சொல்லிக்கொடுத்து" வளர்க்கப்பட்ட ந

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க

க.க: 4 - புள்ள புடிக்கலாம் வாங்கப்பு!

யா ருங்க அங்க?! ஆரம்பிக்கும் போதே "யோவ்! என்னைய்யா தலைப்பு இது! கெரகசாரம்"னு கொரலு விடறது? இதென்ன அவ்வளவு ஈசியான சமாச்சாரம்னு நினைச்சிட்டீங்களா? இங்க மட்டும் ஏனோதானோன்னு இருந்து கோட்டை விட்டுட்டீங்கன்னா அப்பறம் வாழ்க்கை முழுக்க தமிழ்மணமும் தேன்கூடும்தான் கதி! ஏஞ்சொல்லறேன்னா புள்ளைங்க படிச்சு முன்னேற்ற வேகத்துக்கும், அவங்க வெவரமாகற லெவலுக்கும், இருக்கற மெதப்புக்கும் போற போக்கைப் பார்த்தா இந்த வடிவேலு சரளாக்காவை புடிச்சமாதிரி, மனசுக்குப் புடிச்ச பொண்ணு வீட்டு முக்குல மறைவா நின்னுக்கிட்டு வெளில வாரப்ப ஒரு கரூர் கமுக்காளத்தை போர்த்தி அப்பிடியே தூக்கிக்கிட்டு வந்து தாலி கட்டுனாத்தான் உண்டுபோல! அதுக்கப்பறம் வாங்கப்போற விழுப்புண்களை வைகைப்புயலே தாங்கும்போது நமக்கென்னங்க?! சரிங்க! வீட்டுல சொல்லீட்டிங்க! அவங்களும் நாலாபக்கமும் தகவலை பரப்ப ஆரம்பிச்சிருப்பாங்க! நீங்க என்ன செய்யப்போறீங்க?! வேண்டிய மாற்றங்கள் எல்லாம் செஞ்சு பார்க்க பளிச்சுன்னு மாறுனீங்களே! அதற்கு ஆதாரம் வேண்டாமா? அதனால இப்போ செய்ய வேண்டியது மேலும் பளிச்சுன்னு இருக்கறமாதிரி ரெண்டு போட்டோ எடுக்கறது! நீங்க ஆரம்பக்கால

க.க:3 - பலியாடுகளிடம் தேவையான சில மாற்றங்கள்...

ஆ கக்கூடி மனதளவில் ரெடியான மக்கா எல்லாம் அடுத்து என்னத்தை இவன் மண்டைல வைச்சுக்கிட்டு நம்ப மண்டைல கரண்டி விட்டு கலக்காத கொறையா கொழப்பப் போறானோன்னு வந்திருக்கீக! ஆமா! அடுத்தது என்னன்னு நீங்க நெனச்சிருக்கீங்க?! என்னப்பு மோட்டு வளைய பார்க்கறீங்க? என்னது யோசிக்க முடியலையா? அதான் கல்யாணத்துக்கு தயார்னு தெளிவா அறிக்கை விட்டுட்டுத்தானே இங்க வந்தீங்க? இதோட வாழ்க்கைல யோசிக்கறதை மறந்துடுங்க! முயற்சி செஞ்சாலும் முடியாது! அவ்வளவு பவர்புல் நீங்க எடுத்திருக்கற இந்த முடிவு! :))) ச்சும்ம்மா உட்டாலங்கடீங்க! சரி, நீங்க OK சொல்லிட்டீங்க! உங்க வீட்டாரெல்லாம் சந்தோசமா பயலுக்கு கோட்டி தெளிஞ்சிருச்சின்னு சந்தோசப்பட்டுக்கிட்டு "கல்யாணம் வரைக்கும் இவனை இப்படியே வைச்சிரு மாரியாத்தா"ன்னு பணமுடியெல்லாம் கூட போட்டிருப்பாங்க! உங்களைச் சுத்தி உங்க வாழ்க்கையை நல்ல விதமாக அமைத்துக்கொடுக்க நலம் விரும்பிகள் அப்பா, அம்மா, அக்கா, தாய்மாமான்னு இத்தனை பேரு துடியா இருக்காங்க! சரி! நீங்க என்ன செய்யப்போறீங்க? உங்களை எப்படி நீங்க உங்க கல்யாணத்துக்காக தயார்படுத்திக்கப் போறீங்க? இத்தனை நாள் வாழ்ந்த பேச்சுலர் வாழ்

க.க:2 - மக்கா! நீ மனசளவிலும் தயாரா?

ம்! முன்னுரைன்னு அலப்பரை எல்லாம் ரொம்ப வெயிட்டா விட்டாச்சு! சரி ஆரம்பிக்கலாம்னு நெனைச்சா கண்ணுக ரெண்டும் மயமயங்குது! அதுக்காக விட்டுட முடியுமா என்ன? அதனால மொதல்ல கல்யாணம்னா என்னங்கறதுல இருந்தே ஆரம்பிக்கலாம்! இந்த கல்யாணம்கறது எப்படி ஆரம்பிச்சிருக்கும்? ஆதிகால மனுசன் அவனாகவோ இல்லை ஆப்பிளை தின்றோ இனக்கவர்ச்சி வந்து இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிச்ச காலத்துல கல்யாணம்கற ஒன்னை நெனைச்சுப் பார்த்திருப்பானா?! இல்லை அதனால இப்படி வாழ்க்கைல மூனுல ரெண்டு பங்கு ஒரு மண்டைக் கொடைச்சல்ல ஓடப்போகுதுன்னு தெரிஞ்சிருந்தா அந்த ஆப்பிளைத்தான் கடிச்சிருப்பானா? அது கொரங்கா இருந்தப்பவோ இல்லை மனுசனா இருந்தப்பவோ, எப்ப கூடி வாழும் இயல்புங்கறதை கண்டுபிடிச்சானோ அப்ப வந்திருக்கலாம் இதுக்கு அச்சாணி! எப்ப ஒரு பொருளை தன்னுடையது என உணரும் அறிவை பெற்றானோ அப்போது போடப்பட்டிருக்கலாம் இதற்கான விதை! ஒரே இனம் அப்படிங்கற உணர்வு எப்போது வந்திருக்கும்? உணவுக்கும் உறைவிடத்துக்குமான போராட்டங்களில் வலுசேர்க்க "நீயும் நானும் ஒன்னு! அதனால ஒன்னா சேர்ந்து எதிரிகளை எதிர்ப்போம் வா!" அப்படிங்கறதுல இந்த சூட்சமம் அடங்கியிருக்கலாம்!

கல்யாணமாம் கல்யாணம்! - ஒரு முன்னுரை!

" மா ப்ள.. வீட்டுல பொண்னு பாக்கறோம்னு ஒரே தொல்லைடா... மனசே சரியில்லை! ஒரு தம் போட்டுட்டு வருவமா?" "மாம்ஸ்.. இந்த பொண்னு பார்க்கற மேட்டரைப்பத்தி என்ன நினைக்கற?! ஒரே கொழப்பமா இருக்கு.." "டேய் மக்கா.. கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீக! அப்பறம் என்ன மாதிரி குத்துதே குடையுதேன்னு பொலம்பாதீக.. சொல்லிட்டேன்" "வீட்டுல நிம்மதியா ஒரு 5 நிமிசம் இருக்க முடியலைடா! இம்சை தாங்கலை! இவளை கட்டிவைச்ச எங்க அப்பன் மட்டும் இப்ப கைல கெடைச்சா.." "டேய்.. என்னடா இது.. ஆறு மாசம்கூட ஆகலை.. அதுக்குள்ள டைவர்சு கீவர்சுன்னு பெரிய வார்த்தையெல்லாம் விடற? கிறுக்கா புடிச்சிருக்கு?!" மக்கா! இதெல்லாம் கூட்டாளிக கூட பொங்க போடறப்ப அடிக்கடி கேக்கறமாதிரி இருக்கா? இந்தக் காலத்துல வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கூட கல்யாணம் நடந்து அதை ஒலகமே சேர்ந்து கூடிக் கும்மியடிச்சு கொண்டாடுது! ஆனா பயபுள்ளைங்க நாம கல்யாணம் கட்டறதுன்னா மட்டும் எத்தனை கொழப்பம்? எத்தனை சிக்கல்! ஏண்டாப்பா இப்படி? கை நெறைய சம்பாதிக்க தெம்பிருக்கு! ஆபீசு அரசியல்ல பிண்ணிப் பிணைஞ்சு போராடி மேல வர