முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆனந்தவிகடனும் ஒரு விமர்சன எரிச்சலும்

இந்த வார விகடனில் (அண்ணாச்சி: அதென்ன இந்தவார விகடன்? அட்டையக் கிழிச்சா வாராவாரம் அதே விகடன் தான் டே! ) சில எரிச்சலூட்டும் பகுதிகள். கவர்ஸ்டோரில ஆரம்பிக்குது உப்புக்காகிதம் வைச்சு மூஞ்சுல தேக்கற மாதிரியான எரிச்சல்! திமுக மகளீர் மாநாடு மூலம் போட்டி கனிமொழிக்கும் கயல்விழிக்குமாம்! ஊருல யாருக்குமே தோணாத பத்தவைக்கற நேக்குல இப்படி ஒரு கட்டுரை. இதை இப்படி எழுத விகடன் எதுக்கய்யா? பருத்திவீரன் படத்துக்கு விமரிசனமாக எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு அப்படியே விட்டுட்டால் அறிவுசீவி விமர்சனமாக இருக்காதேன்னு சன் டீவி விமர்சன பன்ச் மாதிரி “க்ளைமாக்ஸ் வக்கிரம்”னு ஒரு பிட்டை போட்டது நினைவிருக்கலாம். இப்போ இந்தவாரம் 32 நபர்களால் ஒரு அபலைப்பெண் பலாத்காரப்படுத்தப்பட்டதை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடகம் பற்றிய ஒரு கட்டுரை. “உறைய வைக்கும் பூடகமான பலாத்கார காட்சிகளைக் கொண்டது” அப்படின்னு விமர்சனம். ஆனால் இதில் வக்கிரம் என்ற் வார்த்தையே காணோம்! அதென்னய்யா அமீர் எடுத்தால் வக்கிரம்! இன்னொருத்தரு எடுத்தால் சமூக அவலங்களைக் காட்டும் படைப்பா? என்ன விமர்சனமோ! என்ன அளவுகோலோ!! அடுத்தது, வலைப்பதிவுகளில் வந்த விமர்சன

கர்நாடகா பயணமும் என் புகைப்படப் பெட்டியும்...

போனவாரம் சில புகைப்பட ஆர்வலர்களுடன் கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டே, திபெத்தியர்களின் வாழ்விடமான குஷால்நகரில் உள்ள கோல்டன் டெம்ப்பிள் (இரண்டாம் முறை) சென்றுவர வாய்ப்பு கிடைத்தது. நாதன் , PeeVee , ஆதி போன்ற போட்டோகிராபி பிஸ்த்துகளுடன் நம்ப பின்னவீனக் கவிஜர் லக்குவனர் , எலக்கியவாதி மோகன் தாஸு , லக்குவனாரின் நண்பர் வினோத் மற்றும் சில நண்பர்களுடன் பயணம். வெள்ளி இரவு சென்ட்ரலில் ஆரம்பித்த அலப்பரை மீண்டும் திங்கள் அன்று சென்னை வந்து சேரும்வரை ஓயவில்லை :) நீண்ட நாட்கள் கழித்து ஒரு மனநிறைவான பயணம். என்ன... கற்றறிந்த சான்றோர்கள் கூட இருந்ததால் பால்ய நண்பர்களுடனான பயணங்களில் பேச்சுவாக்கில் கெட்டவார்த்தைகளை அள்ளியிறைப்பதில் கிடைக்கும் சந்தோசம் மட்டுமே அன்றைக்கு இல்லை.. :) ) மாண்டியா வரை மைசூர் எக்ஸ்பிரசில் பயணம். பிறகு அங்கிருந்து இரண்டு நாளைக்கு ஒரு டாடா சூமோ பேசிக்கொண்டு அங்கிருந்து தென்னூரு ஏரி.. அங்கிருந்து மேல்கோட்டா... அப்படியே மைசூர் வழியாக குஷால்நகரில் ராத்தங்கல். காலையில் தங்கக்கோவிலில் நடந்த விழாவில் சிறப்பழைப்பாளார்களாக பங்கேற்பு(ஹிஹி... ) மதியமாக கிளம்பி மைசூரை ச்சும்மா பேருக்குத்தொட்டு

அடங்கியிருக்கும் டோண்டு... அடங்க மறுத்து எல்லை மீறும் உண்மைத்தமிழன்!!!

இருவருமே நீளமாகத்தான் வைத்திருக்கிறார்கள் என்றாலும் உண்மைத்தமிழன் மட்டும் ஏன் இப்படி?! ஹிம்... :( ========= இராயல், இப்ப நம்பறீங்களா? இப்படி எல்லைமீறுவதன் மூலம் தமிழ்மணத்தை இடதுபுறம் தள்ளுவதை கண்கூடாக பாருங்கள்! இதன்மூலம் மொத்த தமிழ்மணத்தினையும் அவர் இடதுசாரி சிந்தனைகளுக்கு சிம்பாலிக்காக தள்ளுகிறார் என நாம் ஏன் குற்றம் சாட்டக்கூடாது? :)