முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காசியண்ணன் புண்ணியத்தில் ஒரு பதிவு!

அண்ணன் காசியின் ஐடியா படி இந்த உருப்படி இங்கே... பெரியவங்க பலபேரு டீடெயில்லா ஆராய்ஞ்ச உணர்ந்த தெளிந்த தகவல்களை போட்டிருக்காங்க. இராம. கி அய்யா எல்லாம் படிச்சா மலைப்பா இருக்கு! நான் என் வழக்கப்படி (அதாங்க... தான்தோன்றித்தனமா... )அடிச்சு விட்டிருக்கறேன். காசியண்ணன் கும்பலோடு கும்பலா என்னுதையும் போட்டிருந்தா எம்மானம் நின்னிருக்கும். இப்ப தனியாப்போட்டு என் அறிவையெண்ணி மக்கா நீங்க தலைதலையா அடிச்சுக்கப் போறீங்க! தெரியுதில்ல அப்பறம் என்னத்துக்குலே எழுதனன்னு ஆசிப்பு அண்ணாச்சி மாதிரி ஆளுங்க வருவாய்ங்க! அதுக்கெல்லாம் வெட்கம் மானம் ரோசம் பார்த்தா அப்பறம் நான் எப்பத்தான் புதுப்பதிவு போடறது?! எனவே, படிச்சு களிங்க :) 1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்? இல்லை என்றே நினைக்கிறேன். சங்கத்தமிழில் இருந்து நவீன இலக்கியம் வரைக்கும் இவ்வளவு இருக்கு இல்லை என்பதான தரவுகளை விடுங்கள்! பழந்தமிழ் வார்த்தைகளை தேடித்தெரிந்துகொள்

நியதிகளும் வாழ்வும்...

மீண்டும் ஒரு காதல் கதை... அடையார் பஸ் டிப்போவின் எதிரில் இருக்கும் பஸ்ஸ்டேண்டை கடக்கும்போது ஒரு ஆட்டோவினைச் சுற்றி கொஞ்சம் மக்கள்ஸ். அருகில் போய் எட்டிப்பார்த்தால் ஓங்குதாங்கான ஆறடியில் இருந்த ஒரு விரைத்தவனைப் பிடித்து ஐந்தடியில் பூஞ்சையான ஒரு மனுசர் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பலமாக அடித்துக் கொண்டிருத்தார். உடம்பெல்லாம் வெறுப்பாக ஒரு அம்மாள் அழுதுகொண்டும் திட்டிக்கொண்டும் பக்கத்தில்! ஆட்டோவினுல் ஒரு பெண் சிறுவயசு குழந்தையோடு! அந்த அம்மாள் ”உனக்கெல்லாம் சூடுசொரனையே கிடையாதா? இந்த அநியாயமெல்லாம் அடுக்குமா? உங்குடும்பம் வெளங்குமா? நீயெல்லாம் புழுத்துப்போய்தான் சாவப்போற...”ன்னு சரமாரியாக காறித் துப்பிகொண்டிருதார். ஆறடி மனுசன் அடிகளையும் மகாகேவலமான வசவுகளையும் எந்தவித எதிர்ப்புமின்றி வாங்கிக்கொண்டு ஆட்டோவினுள் இருந்த பெண்ணையே விட்டேத்தியாக பார்த்துக்கொண்டிருந்தான். அப்பெண்ணோ எந்தவித படபடப்புமின்றி “அப்படித்தான்னு சொல்லுங்க! இவங்க என்னத்த செஞ்சுருவாங்கனு பாக்கலாம்”னு ஒருகையில் குழந்தையையும் மறுகையில் ஆறடியின் கையையும் பிடித்துகொண்டு முகம் நிறைய வீம்புடன் சொல்லிக்கொண்டிருந்தாள்.