முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2005 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சில பட்டாம்பூச்சிகளின் பருவகாலங்கள்...

சிறகடிச்சுக்கிட்டுதான் இருந்தோம்! கொரங்குபெடல் சைக்கிளிலும் ரைட்டாதப்பா கட்டங்களிலும் படிக்கட்டு சறுக்கலிலும் கோணமூக்கனின் காக்காகடிக்கும் தெருப்பயகளுடம் ஐஸ்பாய்க்கும் அம்மாப்பா விளையாட்டுக்கும் இதுக்குமுன்னால யாருமே திட்டுனதில்ல தம்மு தும்முன்னு நடக்காதே... அடக்க ஒடுக்கமா ஒக்காருடி.. எப்பப்பாரு என்னடி இளிப்பு? அத்தனை அசைவுகளுக்கும் திருத்தம் சொல்லறாங்க நாங்க இதுவரை பறந்ததை ரசிச்சவங்க டீவிசானலை திடீரென மாத்தறதும் நான் தலைகுனிந்து விரல்நகம் கடிப்பதும் எங்க வீட்டின் புதுப்பழக்கம் ச்சே! அம்மாதான் இப்படின்னா இந்த அண்ணனுக்கென்ன? முன்னமாதிரி விளையாடவராம தள்ளித்தள்ளிப்போறான் கொரங்கு... பசங்ககூட சேரக்கூடாது சரி.. அப்பாவின் கழுத்தையுமா பிடிச்சு தொங்கக்கூடாது? இப்போதெல்லாம் பழகிக்கொண்டோம் சட்டையை முன்னால் இழுத்துப்பிடித்துக்கொள்ள சில பார்வைகளை தாண்டிவரும்போது யாரு கேட்டா இந்த சனியனை இப்போ வரலேன்னு? அய்யயோ அங்க்கிள்! நாங்க போறோம்... அம்மா சொல்லியிருக்காங்க I should not talk to Strangers!

ஸ்ஸ்சப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே!

பழம்தின்னு கொட்டையப்போட்ட பெரியவக எல்லாம் இங்க நின்னு ஆடி நூறும் இருநூறூமா செஞ்சுரிகள போட்டுத்தாக்கிக்கிட்டு இருக்கற இந்த சபைல வெறும் அம்பதுகே பதிவு போடறதெல்லாம் கொஞ்சம் 'கங்குலி'த்தனமா இருந்தாலும் அரிப்பு யாரைவிட்டது சொல்லுங்க?! ஆமாங்க... இதுதான் எனது 50வது பதிவு! போட வருசம் ஜனவரில ஆரம்பிச்சது. கிட்டத்தட்ட ஒரு வருசம் முடியப்போகுது! ரவிசாஸ்திரிய மிஞ்சற ஒரு முடிவோட படுநிதானமா கட்டையப்போட்டுக்கிட்டு இருக்கேன்! ஆடிக்கும் அம்மாவாசைக்கும் எட்டிப்பார்த்து எழுதிட்டுபோற என் அக்கவுண்டை என்னைக்கு ஃப்ளாகரே பொறுத்துக்கமுடியாம என் கடவுச்சீட்டை காணாமடிக்கப்போகுதோ தெரியலை! எனக்கெல்லாம் போனவருசம் வரைக்கும் வலைன்னா அது மெயிலு பார்க்கறதுக்கும், தினமலர், தந்தி, மாலைமலர், தினகரன், குமுதம், விகடன்னு எங்கனயாவது தமிழ் எழுத்து தெரிஞ்சா மேயறதுக்கும்தான்னு ஒரு பொழப்பத்த பொழப்பு ஓடிக்கிட்டு இருந்தது. எங்கனயோ ஏதோ ஒரு சைட்டுல ஒரு சுட்டியை தட்ட அது ஒரு ஃப்ளாகரு பக்கத்துக்கு போயிருச்சுங்க! அது அடாத மழையிலும் விடாது பதியும் அண்ணன் பத்ரியோடதுதான்! :) பார்த்தவொடனே புல் அரிச்சிருச்சி! அந்த பதிவுல ஒரு சைடா பார்த்

புதூர் குஞ்சாளு - சிறுகதை

“ஒரு நூறு ரூபா இருந்தா போயிட்டு வந்துரலாண்டா! ஆனா அது ஒரு மணி நேரத்துக்குதான்” "ஏண்டா எல்லாம் தெரிஞ்ச மாதிரி புளுகுற? யாரு சொன்னா உனக்கு?" "நம்ப மெக்கானிக் கணேசன் தாண்டா... அவன் பிரண்டு போயிருக்கானாம்... ஆனா நைட்டு 9 மணிக்கு மேலதானாம்! வீட்டுமுன்னாலயே ஒருத்தன் ஒக்கார்ந்திருப்பானாம். அவன் கிட்ட காசு குடுத்துட்டு சொன்னா போதும். போயிரலாம். ஆனா கண்டிப்ப்பா ஹெல்மெட் வாங்கிட்டு போகனுமாம்!" "டேய்... பார்த்த மாதிரி பேசாத.. இந்த வேலையை பண்ணறான்னா அப்பறம் எதுக்கு தெனமும் ரோடு ரோடா பூ வித்துக்கிட்டு அலையறா?" "போடா சும்பை... அதெல்லாம் ஒரு செட்டப்புக்காகதான். அப்பதான் எவனும் கேக்கமாட்டான். போலீஸிம் புடிக்காது. புருசனும் இல்லை. அப்பறம் ஏன் கலர் பொடவை கட்டறா? பூ விக்கறவ ஏன் லோஹிப்பு கட்டிக்கிட்டு விக்கனும்?" "அதுக்காக ஒடனே ரேட்டுன்னு சொல்லிடறதா? புருசன் இல்லாததால பூ வித்து சம்பாதிக்கறா. வெள்ளைப்பொடவை கட்டுனா யாரும் பூ வாங்க மாட்டாங்க.. அதுனால கலர் பொடவை கட்டிக்கிட்டு சுத்துறா. இதை வச்சி எப்படிரா இப்படி சொல்லுற? நீயும் போனதில்