முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனக்கென்ன?

இறக்கிப்போட்ட ஜீன்ஸின் மேல் ஜாக்கி பட்டை உன்னுது இறுக்கிப்போட்ட அர்ணாகொடியுள் எலாஸ்டிக்போன சுடர்மணி என்னது எல்லோபோர்டு பல்லவனுக்கு மூணுரூவா மொய்யி ஏசிபோட்ட வோல்வுக்குள்ள ”புல்ஸிட் ட்ராபிக்”குங்கற நீய்யி வெறிக்க வெறிக்கப் பார்த்தே பூத்த கண்கள் என்னுது ரேபனை கழட்டுன ஒடனே சுருக்கும் கண்கள் உன்னுது ”லதாவை நான் காதலிக்கறேன்”னு இன்னம் செவுத்துலதான் எழுதறேன் “ரெடி ஃபார் அ டேட்?”னு நீ ஃபேஸ்புக்குல எழுதற உனக்கும் எனக்கும் மாசக்கடைசியில் ரெண்டு சைபரே வித்தியாசம் டேபிள் தொடச்சுப்போகையில் நீ உதிர்க்கும் ”தாங்ஸ்”சில் நிக்குது உன் மனிதாபிமானம் கூடவே உன்தரத்தில் என் இடமும் ஆனாபாரு... நீயே உன் கம்ப்பூட்டரை துண்டுதுண்டாய் தின்னும்வரை உன் வெளிக்கியை ட்ராக்ட்ராப்பை ட்ராஸ்பின்னில் போடும்வரை நான் நானாகவே வேண்டுமுனக்கு இன்னனும் தெளிவில்லை சமூகத்துல தனிச்சுப்போவது நீயா நானான்னு நிச்சயம் தெரியுமெனக்கு பதில் தெரியும் நாளில் வெளிப்படுமென் வன்மம் உனதுபோல பூசிமெழுகி இருக்காது! எனக்கென்ன... ஏக்கம் எனக்கொன்னும் புதுசில்லை ***** கதிர் இங்கே ! - வேறென்ன? பழமைபேச

ஸ்டேட் ஃபர்ஸ்ட்லெல்லாம் இங்கனதான் படிக்கறாங்க!

ஏழாப்பு C பிரிவு கல்வியால் மட்டுமே.. இருளில் இருந்து வெளிச்சத்துக்கு... என்னக் கொடுமை மணி இது!? நான் வழக்கம் போல 12 மார்க்குதான்... நீங்க எவ்வளவு? கூட்டாளி/சேக்காளி/க்ளாஸ்மேட்டு/பிரண்டு.... அது ஒரு கனாக்காலம்! ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது!

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங