முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காமம் தெளிதல் 2 :- அகத்தூய்மை

”கொட்டற பனில இன்னும் என்னங்கடா வெட்டிப்பேச்சு? நாளைக்கு காலேஜ் போகவேண்டாமா? நெஞ்சுல சளி கட்டுனா மூனு நாளைக்காவது கஷ்டம்ல? ரவுண்ட்ஸ் எல்லாம் நான் பார்த்துக்கறேன். நேரமா போய் படுங்கப்பா…” ஒரே நிமிடத்தில் இப்படி அன்பு, அக்கறை, கண்டிப்பு, தோழமை எல்லாம் கலந்து எங்களை திட்டமுடியும்னா அது கோபி அண்ணாவால் மட்டும்தான் முடியும். இதற்கு பதில் எங்களிடமிருந்து என்ன வரும் என்பதும் அவருக்கு தெரிந்தே இருக்கும். ஒரு மாதிரி கோரசாக “தோ.. அஞ்சு நிமிசம்ணே… போயிடுவோம்” என்று நாங்க சொல்லி முடிக்கறதுக்கும் அவர் “ம்ம் சீக்கிரம் போங்கடா.. வீட்டுல திட்டுவாங்கல்ல” என்று சொல்லியபடி திரும்பி ரோட்டை பார்த்தபடி அடுத்த ரவுண்ஸ் நடப்பதற்கும் சரியாக இருக்கும். அந்த அஞ்சு நிமிசங்கறது கூடக்குறைய ரெண்டுமணி நேரமாவது ஆகும். அது அடுத்து தொடர்ந்துவரும் அவரவர் வீட்டாரின் அன்பு மேலிடும் அழைப்புகளை பொறுத்தது. நாங்க நெதமும் பொங்கல் போடுமிடம் ரொம்ப தூரமெல்லாம் இல்லைங்க. எங்க காலனியே நேர்கோடுகளாக நாலு தெருக்கள்தான். தெருவுக்கு ஒரு சைடுல 30 வீடாச்சும் தேறும். தெருக்கள் சேரும் ஒரு பக்கம் சின்ன மெயின் ரோட்டில் இணைந்து அது வடக்காக அவனாச

காமம் தெளிதல் :- பிரிவுத்தணல்

“ டே ய்… எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்க… ஒரு ஸ்டாப் கிட்ட இப்படித்தான் பேசுவயா? “சார் சும்மா ஜாலிக்கு க்ளாஸ்ல ஜோக்குக்கு சொன்னேன் சார். அதுக்குப்போய் உங்க கிட்ட பிராது செய்யறாங்க… இதெல்லாம் கூட இல்லைன்னா எப்படி சார் எப்பவுமே சீரியசா க்ளாஸ்ல ஒக்கார்ந்திருக்க முடியும்?” என்னா மயிரு எழவெடெடுத்த ஜோக்கு? தராதரம் இல்லாம? லேடிடா அவங்க… ஏதோ நேரம் இங்க வேலைக்குன்னு வர்றாங்க… நீயும் ஒரு வேலைக்கு போகனுன்னுதானே இங்க படிக்கற? சொல்லிக் கொடுக்கறவங்க மேல ஒரு மரியாத வேண்டாமா? லேடிஸ்கிட்ட எப்படி பேசனுங்கறதே தெரிலன்னா நீயெல்லாம் எப்படிடா உனக்குன்னு ஒரு மரியாதைய பின்னாடி தேடிப்ப?” மேட்டர் பெரிசா ஒன்னுமில்லைங்க. மேற்கண்ட இனியது கூறலில் முதலாவது எங்க பேராசிரியர். பதில் சொல்வது நான். எங்களுக்கு பகுதிநேரமாக வகுப்பெடுக்க வந்த அவருடைய சக பேராசிரியர் பொண்ணை லைட்டா கலாய்ச்சதுக்கு அவங்க ஓன்னு அழுதுக்கிட்டு வந்து இவராண்ட புகார் கொடுத்துட்டாங்க. அதுவும் சப்பை கலாய்ச்சல். என்னை விட அஞ்சு வயசுதான் அதிகமா இருக்கும். அவங்களை மேடம்னா கூப்பிட முடியும்? அவங்க வந்த மூனு மாசத்துலயே நாங்க அவங்ககிட்ட கத்துக்கறது

பெண்ணியமும் So called சராசரி பெண்களும்...

சுரேஷ் கண்ணன் அவர்களது முகநூலில் ஒரு ஸ்டேடசுக்கு எழுதிய பதில். படித்தால் அது ஏறக்குறைய நீயா நானா நிகழ்ச்சியை ஒட்டியே அமைந்திருந்தது. இங்கே சேமிக்க என்றெல்லாம் ஜல்லியடக்க மாட்டேன். பதிவாக போடவேண்டும் என ஆசை. அம்புட்டுத்தான். இது என் பார்வை மட்டுமே. அவர்பதில் கிடைத்தால் கோர்க்கிறேன். ---------+++++---------- வண்ட்டேன்... இங்கே அனைத்து சேனல்களும் yupptv.comல் காசுகட்டி காணக்கிடைக்கின்றன. நான் பார்ப்பது என்னவோ இரண்டே நிகழ்சிகள் தான். நீயா நானா & கொஞ்சம் நடிங்க பாஸு :) // அறியாமையே பேரின்பம் ரீதியில் சில பெண்கள் பேசினார்கள் // எப்படிங்க இப்படியெல்லாம் தீர்மானிக்கறீங்க!? அறியாமைக்கும் தெரியாமைக்கும் நிறைய வேறுபாடு இருக்குங்க. பெண்ணிய இயங்கங்களும் இலக்கியங்களும் களப்பணியாளர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். தெரியவேண்டிய அவசியத்துக்கான வாழ்க்கை முறையிலும் அவர்கள் இல்லை. அதனால் அது அறியாமை ஆயிருமா? so called சராசரி பெண்கள் - இனி இவர்களை உங்கள் வார்த்தையிலேயா சராசரிகள் என குறி

அன்னயும் ரசூலும்

உ ங்களுடைய சொந்த ஊர் ஏன் உங்களுக்கு பிடித்திருக்கிறது? திருச்சி மலைக்கோட்டை கோவிலின் உச்சியில் படிகளில் அமர்ந்து திருச்சியை பார்க்குமிடம் உங்களுடன் ரகசியமாய் கைகோர்த்து வந்தவரால் பிடித்திருக்கக்கூடும். கோவை கிராஸ்கட் ரோடு சேட்டுக்கடை பானிபூரியின் சுவை ஜமா சேர்ந்த நண்பர்களால் சிறப்புற்றிருக்க கூடும். ஸ்ரீரங்கம் கூட வாத்தியாரும் நீங்களும் பிறந்த ஊர் என்பதற்காகவே ஒட்டிப்போக வாய்ப்புண்டு. ரசூலுகுக்கு கொச்சின் ஏன் பிடிக்கும் என்பதற்கு நட்பு தவிர வேறு காரணியில்லை என்றுதான் தோன்றுகிறது. வேறு வழியும் இருந்திருக்காது போல. இரண்டாம் திருமணம் முடித்த அப்பா பெண்டு பிள்ளைகளோடு வேறு ஊரில் ஜாகையாயிருக்க கொச்சினில் ரசூலும் அவன் அண்ணனும் மட்டுமே திரைச்சீலைகள் பிரிக்கும் ஒரே அறை வீட்டில் பொங்கித்தின்று வாழும் வாழ்க்கை. வயதுக்கு வந்த பிரமச்சாரி அண்ணன் தம்பிகள் இரண்டுபேர் ஒரே வீட்டில் இருக்கையில் பழகும் முறையை கவனித்திருக்கிறீர்களா? கண்களில் நீர்முட்டி வலியினை சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை. சந்தோசமாக இருக்கும் பொழுதில் கட்டிப்பிடித்து உச்சிமுகர தேவையில்லை. பிரச்சனைகளை மணிக்கணக்கில் பேசிப்பேசி மாய வேண