முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2005 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேறவழி? கொஞ்சநாளைக்கு பொழச்சுபோங்க மக்கா!

புது வேலை! புது ஊரூ!! கலக்கறே இளவஞ்சி!!! ஆமாங்க.. நமக்கு வேற ஊருக்கு மாத்தலு ஆயிருக்கு. என்ன ஒரு அநியாயம் பாருங்க! ஒரு கம்பெனியவிட்டு போனா அவங்க கொடுத்த பொருளுகளையும் திரும்பக்கொடுக்கனுமாம். அந்த பழக்கம் நம்ப பரம்பரையிலயே இல்லைன்னு எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். காதுல போட்டுக்காம லேப்பு-டாப்ப புடுங்கிட்டாங்க! நான் செஞ்ச ஆபீசு வேலைய மதிக்கலன்னாலும் தமிழு எலக்கியத்துக்கு தமிழ்மணம் மூலமா( சாருவோட அந்த மூலம் இல்லைங்க..!) நான் செஞ்ச சேவைய மதிச்சாவது விட்டுருக்கலாம்... சரிவிடுங்க... போற எடத்துல நம்பள நம்பி எப்ப அந்த மடிக்கணினிய குடுக்கறாங்களோ அந்த அவருல இருந்து மறுபடியும் ஆரம்பிக்கபோது நம்ம பங்களிப்புன்னு இந்த எடத்துல சொல்லிக்கொள்ள விரும்பறேன்! (என்னடா இழுவை.. மேட்டருக்கு வாடா!!) அதனால நம்ப தலை கொஞ்சநாளைக்கு இங்க தெரியாது! (இல்லைன்னா மட்டும் தெனமும் இங்க தெரியுதான்னு எதிர்கொரலு விடாதிங்க...! சும்மா ஒரு பில்டப்பு! ) நிம்மதியா நல்ல நல்ல பதிவுகளை போடுங்க.. சந்தோசமா நல்ல நல்ல பதிவுகளை படிங்க... (என்னோடதை சொல்லலீங்க... ஹிஹி...)

இறந்துபோன அப்பாவுடன் ஒருநாள்

எங்கள் தாத்தாவுக்கும் முந்தய காலத்தில் செய்யப்பட்ட, எண்ணைப்பிசுக்கின் பளபளப்போடு மங்கிய கருஞ்சிவப்பில் இருக்கும் தேக்குமர நாற்காலியில் புது வெள்ளத்துணியை விரித்து அதில் விரைத்துவிட்ட உடலை சற்றே வளைத்து முதுகிற்கு கீழாக இரு தலையணைகளை வைத்து அமர்த்திவைக்கப்பட்டிருக்கிறது என் அப்பாவின் உடல். எங்கள் குடும்பத்தில் தவறிய ஆண்கள் அனைவரும் இதுவரை அமர்ந்த அதே நாற்காலியில் அதே திண்ணையின் நடுவில் இப்போது என் அப்பாவும்! அவர் தலைக்கு நேர்மேலாக அப்பாவின் அப்பா இறந்தபோது இதேநிலையில் எடுக்கப்பட்ட புகைப்படம். அதில் தலை தொங்காமல் இருக்க விலாஎழும்பிலிருந்து தாடைக்கு முட்டுக்கொடுக்கப்பட்ட குச்சி தெளிவாய் தெரியும் செல்லரித்த பகுதிகளையும் தாண்டி. அப்பாவின் உடலை கொண்டுவருவதற்கு முன்பே ஊரிலிருக்கும் பெரியப்பா திண்ணைக்கு முன்னால் ஒரு பத்து அடி இடைவெளிவிட்டு முப்பதுக்கு நாற்பது அடியில் சாமியானா போட்டு அதை மடக்கு நாற்காலிகளால் நிரப்பியிருந்தார். என் அப்பாவுக்கு ஒரு நாலுவயதுதான் அதிகம் இந்த பெரியப்பாவுக்கு. படித்தகாரணத்தால் வெளியூருக்கு வேலைக்கு அப்பா வந்துவிட விவசாயத்தை கவனிக்க ஊரோடு இருந்துவிட்ட 7 சகோதரர்

தவிர்த்த அழைப்புகள்

அவசியம் வரணும் நீங்க...! நான் இல்லாமலா? அவசியம் வரேங்க...! உங்களைத்தான் ரொம்ப எதிர்பார்த்தேன்...! ஸாரி வரமுடியலை..! கிழிக்க மனமின்றி சேர்ந்துவிட்ட அழைப்பிதழ்கள் தேங்கிக்கிடக்கின்றன அசட்டுப்புன்னகையோடு வாயளவில் உறவாடும் வெற்று வார்த்தைகளைப்போலவே மேஜைமீதும் மனதிலும்

இளவஞ்சியின் தத்துவமுத்துக்கள்

1. வாழ்க்கைல யாரோ ரெண்டுபேரு மட்டும் அப்படி இப்படி புரட்டிட்டு மடிப்பு களையாம அலமாரிக்குபோற Hindu பேப்பரா இல்லாம காலைல இருந்து சாயந்தரம் வரை வர்றவங்க போறவங்க படிச்சு படிச்சே கிழிஞ்சிபோற டீக்கடை தினத்தந்தியா ஒரு 4 பேருக்கு உபயோகமா இருக்கறது எவ்வளவோமேல்! 2. ஆண்டவன் கெட்டவங்களுக்கு விதவிதமா பேண்ட் குடுப்பாரு. ஆனா பெல்ட்டு குடுக்காததால அடிக்கடி அவுந்துடும். நல்லவங்களுக்கு ஒரே ஒரு அண்டர்வேரு தான் குடுப்பாரு. இறுக்கமா கட்டிக்கறதுக்கு நாடாவோட! (எங்கயோ கேட்டமாதிரி இருந்தா நான் பொறுப்பல்ல!) 3. நகர வாழ்க்கைல பிஸ்சாவும் ஃபாஸ்ட்புட்டும் சாப்டுட்டு அடுத்தநாள் காலைல நியூஸ்பேப்பரையோ குண்டு புக்கையோ எடுத்துகிட்டு போய் ஒன்னரை மணிநேரம் முக்கியும் தோல்வியடையறவனைவிட, கிராமத்துல கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு விடிகாலைல போறபோக்குல காட்டுல கக்காபோறவந்தான் குடுத்துவச்சவன்! 4, காலங்காத்தால கார் எடுத்துகிட்டு 10 கிலோமீட்டர் தூரம் பீச்சுக்கு போய் அங்க ஒரு கிலோமீட்டர் நடக்கறதுக்கு, வீட்டசுத்தியே ஜிம்மிய கூட்டிகிட்டு 4 ரவுண்டுவர்றது ஜிம்மிக்கும் நல்லது. நம்ம மணிபர்சுக்கும் நல்லது, 5. நல்ல வேளை! நாம எல்லாம் இந்தியால பொற

லூசுப்பய சச்சின்!

இது விமரிசனம் இல்லைங்க.. வயித்தெரிச்சலு... கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம். TVல தான் சீரியல் எல்லாத்துலயும் ஆம்பளையும் பொம்பளையும் கூடிக்கூடி அழுவறாங்கன்னு நொந்துபோயி ஒரு படத்துக்கு போலாம்னு நெனைச்சு நம்ப இளயதளபதி படமாச்சே அப்படின்னு எனக்கும் பொண்டாட்டிக்கும் சேர்த்து 120 ரூபாயிக்கு டிக்கெட்டு எடுத்து போனா... நம்ப பொழப்பு நாறப்பொழப்பு ஆகிடுச்சுங்க! கடைசி வரைக்கும் ஒரு 80 பக்க நோட்டகூட காட்டாம ஒரு காலேஜ் கதை. அதுவும் எங்க? இத்தனை நாள் நம்ப ஹீரோங்க எல்லாம் ஆடிப்பாடறதுக்கு மட்டும் போன ஊட்டில. விஜயும் ஜிலினியா டிசோசாவும்(பேர எழுதறதுக்குள்ள ஜன்னி வந்துடும் போல) படம் முழுக்க ஒரு ஜோல்னாப்பைய தோல்ல தொங்கவிட்டுகிட்டு இருக்காங்க. அதுக்குள்ள என்ன வச்சிருக்காங்களோ அவங்களுக்கே வெளிச்சம். நாயகி மழைல நனையற அழகைப்பார்த்து ஹீரோக்கும், ஹீரோ குடை மடக்கற வீரத்தைப்பார்த்து ஹீரோயினுக்கும் புடிச்சுபோயிடுதாம். இந்த காலத்து காலேஜ் பசங்க பார்த்தா பின்னாடி சிரிச்சிட்டு போவாங்க! படம் ஆரம்பிச்சதுல இருந்து கடைசி சீன்ல கோவை ஏர்போர்ட் வரை பின்புலத்துல பைப்புல பொகை பொகை