முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2006 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெஞ்சு மேல குந்திக்கிட்டு - பாகம் 2

கைப்புள்ளையின் முதல் பதிவின் பாகம் 2! கீழே இருந்து வாங்கப்பு!!! ________________________________________ Posted At: Friday, January 20, 2006 4:59 PM Posted To: KEC General Conversation: Can we have better coffee vending machines? Subject: RE: Can we have better coffee vending machines? Yes certainly they should have, as infy is a global company!!!!!!!!!!!!!!!! Perhaps after tasing the coffee and tea here the client might want to outsource their coffee and tea facility to Infy ________________________________________ Posted At: Friday, January 20, 2006 4:53 PM Posted To: KEC General Conversation: Can we have better coffee vending machines? Subject: RE: Can we have better coffee vending machines? wil our dear cows /buffaloos........................................etc hav onsite oppurtunities as they wud surely want to know this in the interview............... ________________________________________ Posted At: Fri 1/20/2006 4:44 PM Posted To: KEC General Conversation: Can we have better

'பத்து'ப்பாட்டும் எட்டுத்'தொகை'யும்

ஆன்மீகமும் அருமை தமிழிலக்கிய பாடல்களும் அதன் பொருள்விளக்கமும் என்று நிஜமாகவே மணந்துகொண்டு இருக்கும் தமிழ்மணத்தில் தமிழுக்கு தொண்டு செய்யாமல் இருந்துவிட்டால் அதன் பிறகு நான் வலைப்பதிந்து என்ன பயன்? ராகவன், குமரன்... உங்களது பதிவுகளுக்கு இப்படியும் ஒரு கெட்டவிளைவு இருக்குமா என்ற பேரதிர்ச்சி உங்களை தாக்காமலிருக்க கந்தன் உங்களுக்கு அருள்புரிவாராக... பெரிய மனசுவைச்சு மன்னிச்சுருங்க.. மயிலாரை விட்டு கொத்த விட்டுராதீகப்பூ!!! 'பத்து'ப்பாட்டு ராகம்: கபோதி தாளம்: லோக்கல் ஏஞ்சோக கதைய கேளு வலைக்குலமே!!! நாலுநாளா வீட்டுக்குள்ள இருக்கமுடியல கிச்சனோட கப்புரொம்ப தாங்கமுடியல ஊருக்குபோன பொண்டாட்டிய திட்டமுடியல எச்சத்தட்டு பாத்திரத்தை கழுவமுடியல ஈமொய்க்க தட்டுங்க காய்ஞ்சுகெடக்குது காபிடம்ளருல கரப்புங்க ஓடியாடுது கரண்டில காளானு பூத்துக்கெடக்குது ஆகமொத்தம் அடுப்படியே ஆடிக்கெடக்குது மொதநாளு சாம்பாரு காரசாரங்க அடுத்தநாளு ரசம்கூட ஓக்கேதானுங்க நூடுல்ஸு ரெண்டுவேள பேஜாராச்சுங்க தேடிவந்த பிஸ்ஸாவும் பீச்சிருச்சுங்க ஊத்தறப்போ தோசமாவு வட்டமாச்சுது எடுக்கறப்போ ஃபெவிக்காலு தோத்துப்போச்சுது அல்பஆனியனால கண்ணுகரெ

ஒரு உயிரிழப்பும் பொதுஜன பார்வையும்

உங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு எப்பொழுதெல்லாம் வரும்? சும்மா கவுண்டமணியண்ணன் தமாசுக்கு சிரிக்கறதெல்லாம் சொல்லாதீங்க! அதுகூட ஒருவிதமா அண்ணன் சொல்லறதை யோசிச்சோ இல்லை அவரு சொன்னவிதத்தையும் உடம்பை திருப்பறதுலையும் வைத்தோ வருகிற சிரிப்பு! யாராவது கொய்யான் மாட்டுனா ஒரு சிரிப்பு வருமே அதுவான்னு கேக்கறீங்களா? இந்த வார குமுத்துல ஒரு மேட்டரு. ஒருத்தரு 10 ரூவா நோட்டுல ஒரு பக்கத்துல "திருப்பிப்பார்க்காதே"ன்னு எழுதியிருந்ததை படிச்சிட்டு படக்குன்னு திருப்பிப்பார்க்க அங்க "இப்பத்தாண்டா சொன்னேன் வெண்ண.."ன்னு எழுதிருந்ததாம். படிச்சிட்டு பகீர்னு சிரிச்சிட்டேன். இதுவும்கூட நான் சொல்லற ரகத்துல வராது. நான் சொல்லறது சும்மா கண்ணுல தண்ணிவர கழுத்து நரம்பெல்லாம் இழுக்க உடம்பெல்லாம் சிலிர்க்க சிரிக்கறது?! உருண்டு புரண்டு சிரிக்கமாட்டோம்! ஆனா அடக்கவே முடியதபடிக்கு ஒரு சிரிப்பு! ஏதாவது ஞாபகம் வருதா? எனக்கு இந்தமாதிரி சிரிப்பெல்லாம் ஏதாவது விபத்து நடந்துச்சுன்னா வருங்க! சரியான சேடிஸ்ட்டுன்னு திட்டாதிங்க! எனக்கும் காரணம் தெரியலை! நாம கவுண்டமணி-செந்தில் அடிஉதைகளையும் டாம்&ஜெர

என் பயணங்களில் இரயில்...

பரதேசம் பலகண்ட பழுத்த பெருசொன்று பெருமூச்சுடன் பல்குத்துகிறது பிளாட்பாரத்தில் நீண்டு கிடக்குது இரயில் தண்டவாளத்தில் தலைவரை ஏற்றிவிட தோரணங்களுடன் தொண்டர்கள் ஓடும் இரயிலுக்கு டாட்டா காட்டும் சிறார்கள் ஊரின் பிரிவுத்துயர் பெயர்ப்பட்டியலில் தொலைகிறது இருபத்தியாருக்குள் நாலைந்து 'F'கள் குப்பைத்தொட்டிக்குள் வாலருந்த நாயொன்று அப்பர்பர்த்தில் ஏறும் அம்சமான பெண்ணொருத்தி மனசின் நிராசைகள் கண்களின் தெறிப்பில் ஆற்றினில் அகப்பட்ட நிலா கச்சாயம் கடிக்கும் பசங்களுடன் எதிரே கட்டுச்சோறு குடும்பி விரும்பிய பஜ்ஜியை வாங்க மறுக்கும் மனசு அரவாணிகளுக்கு ஐந்து ரூபாய் விதவைக்கோட்டாவில் வெள்ளுடை கேட்கீப்பர் வண்ணக் கொடிகளோடு பச்சைக் கொடியசைப்புக்கு இரயில் மட்டும் போகிறது உபயோகமாய்த்தான் இருக்கிறது வீச்சமடிக்கும் கழிவறை மலஜலம் கழிக்கவும் மனவிகாரம் கிறுக்கவும் கடந்து வந்த ஊர்களின் கலாச்சாரப் பதிவுகள் கொடுத்த காசுக்கு எனக்காக பின்னோக்கி ஓடுது மரங்கள் கூடவே வருகுது நிலா என் பயணம் புரியவில்லை நகரத்திலிருந்து நகரத்திற்கு விரைகிறது என் வண்டி இடைப்பட்ட தூரங்களில் வாழ்க்கை இருக்குமென மருகும் என் மனதுடன்