சிறகடிச்சுக்கிட்டுதான் இருந்தோம்!
கொரங்குபெடல் சைக்கிளிலும்
ரைட்டாதப்பா கட்டங்களிலும்
படிக்கட்டு சறுக்கலிலும்
கோணமூக்கனின் காக்காகடிக்கும்
தெருப்பயகளுடம் ஐஸ்பாய்க்கும்
அம்மாப்பா விளையாட்டுக்கும்
இதுக்குமுன்னால
யாருமே திட்டுனதில்ல
தம்மு தும்முன்னு நடக்காதே...
அடக்க ஒடுக்கமா ஒக்காருடி..
எப்பப்பாரு என்னடி இளிப்பு?
அத்தனை அசைவுகளுக்கும்
திருத்தம் சொல்லறாங்க
நாங்க
இதுவரை பறந்ததை ரசிச்சவங்க
டீவிசானலை திடீரென மாத்தறதும்
நான் தலைகுனிந்து
விரல்நகம் கடிப்பதும்
எங்க வீட்டின் புதுப்பழக்கம்
ச்சே! அம்மாதான் இப்படின்னா
இந்த அண்ணனுக்கென்ன?
முன்னமாதிரி விளையாடவராம
தள்ளித்தள்ளிப்போறான் கொரங்கு...
பசங்ககூட சேரக்கூடாது சரி..
அப்பாவின் கழுத்தையுமா
பிடிச்சு தொங்கக்கூடாது?
இப்போதெல்லாம் பழகிக்கொண்டோம்
சட்டையை முன்னால் இழுத்துப்பிடித்துக்கொள்ள
சில பார்வைகளை தாண்டிவரும்போது
யாரு கேட்டா இந்த சனியனை
இப்போ வரலேன்னு?
அய்யயோ அங்க்கிள்! நாங்க போறோம்...
அம்மா சொல்லியிருக்காங்க
I should not talk to Strangers!
நீங்க நல்லா எழுதிருக்கீங்க. கலக்கல் இளவஞ்சி
பதிலளிநீக்குநல்லா எழுதிருக்கீங்க இளவஞ்சி
பதிலளிநீக்கும்..ம்..ம்ம்..கொஞ்சம் விஷயம் இருக்கு. ஆனா இளவஞ்சியின் 'முத்திரை'..? அது சரி, எல்லாத்திலயும் அது கட்டாயம் இருக்கணுமா, என்ன? அப்புறம்,இது வெறும் போஸ்ட் ஆஃபீசா ஆயிடுமே!
பதிலளிநீக்கும்..ம்..ம்ம்..கொஞ்சம் விஷயம் இருக்கு. ஆனா இளவஞ்சியின் 'முத்திரை'..? அது சரி, எல்லாத்திலயும் அது கட்டாயம் இருக்கணுமா, என்ன? அப்புறம்,இது வெறும் போஸ்ட் ஆஃபீசா ஆயிடுமே!
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇளவஞ்சி அற்புதமான கவிதை.
பதிலளிநீக்கு//யாரு கேட்டா இந்த சனியனை
இப்ப வரலைன்னு//
நுட்பமான உணர்வுகளை துல்லியமாக சொல்லியிருக்கிறீர்கள்....
வாழ்த்துகள்.
உங்கள் படைப்புகளில் இதைத்தான் மிகச் சிறந்ததாக கருதுகிறேன்
//படம் நல்லா இருக்கு :-)//
பதிலளிநீக்குபடமும்
சிவா, ஞான்ஸ், தருமி, ராசா, முத்துகுமரன்
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!
Arumai Arumai!!
பதிலளிநீக்கு