முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடுத்தது புடிச்ச பதிவொன்னும் போடனுமாமில்ல?!


பதிவுலக நண்பர்களுக்கு எப்படித்தான் நன்றி சொல்லறதுன்னு தெரியலை! என்னத்த எழுதறதுன்னு தெரியாம கோட்டி புடிச்சபடி நம்ம மக்கா எல்லாம் பேரரசு கிட்ட மாட்டுன பரத் குத்துப்பாட்டுக்கு ஆடுற கணக்கா கணக்கு வழக்கில்லாம வகைதொகையில்லாம அடிச்சாடுறதை காதுகளில் பொகையோடு படிச்சபடி இருக்கற என்னைய கூப்புட்டு புடிச்ச படம் போடுங்க.. புடிச்ச பதிவு ஒன்னு சொல்லுங்கன்னு சொல்லி என் வயத்துல பாலை வார்க்கறாக. அதை சாக்கா வைச்சே இந்த வருசம் ரெண்டு பதிவு தேத்திட்டேன்! :) இருந்தாலும் இந்த தொடர் வெளாட்டுக்குன்னு எழுதறது நெசமாவே தாவு தீருது!

அழைப்பு வைத்த தருமிசாருக்கு நன்றிகள்! போனவருசம் நான் எழுதுனதுல எனக்குப்பிடிச்சது எதுன்னு சொல்லனுமாம்.

எனது மூன்றாண்டு கால பதிவுலக வாழ்க்கையை திரும்பிப்பார்த்தால் என் எழுத்துப் பணிக்கான (ஹிஹி.. ) கடின உழைப்பு என்பது கழுத தேஞ்சு கட்டெரும்பு ஆன... வேணாம் ரொம்ப பழசு... புரட்சித் திருமா தேய்ஞ்சு நடிகர் திருமா ஆன... வேணாம் வெவகார மேட்டரு... என்னாத்துக்கு எதுக மொகன? நேராவே சொல்லிடறேன்... 2005ல 50 பதிவுக... 2006ல 32 பதிவுக.. 2007ல 21 பதிவுக.. என்னா ஒரு வேகம்.. முன்னேத்தம் பாருங்க... இதுல இந்த வெளங்காத பதிவையும் ஞாபகம் வைச்சுக்கூப்பிட்ட வலைஞர்களுக்கு நன்றி!

எழுதுனதே 21! அதுல பாதி புகைப்பட பதிவுகள். இதுல எது எனக்குப்புடிச்ச பதிவுங்கறதெல்லாம் கொஞ்சம் ஓவரான கேள்விதான். இருந்தாலும் சுயபீத்தலுக்கு ஒரு வாய்ப்பு கெடச்சதை விட்டுட முடியுமா?

போன வருசம் மே மாசம் எழுதுன ரிசர்வேஷன் கதைதான் எனக்கு ரொம்ப பிடிச்சது. ஏன்னு சொல்லத் தெரியலை. ஆரம்பத்துல இருந்து கடைசி வரை அதை ஒரே ஃப்ளோல ஒரே சிட்டிங்கல மத்த எல்லாப் பதிவுக மாதிரிதான் அதையும் எழுதுனேன். இருந்தாலும் சொல்ல வந்த விசயத்தை குழப்பமில்லாம தெளிவா சொல்லமுடிஞ்சதுதான் அதில் எனக்கு கிடைச்ச சந்தோசம்னு நினைக்கறேன். :)

இக்குளியூண்டு பதிவு போடறதுக்கு எனக்கே ஒரு மாதிரி இருக்கு! அதனால எயித சரக்கில்லாத நேரத்தில் கைகொடுக்கும் புகைப்படத்தில் ஒன்றையும் மேல போட்டுகிறேன். இவிங்கெல்லாம் என்னோட மணப்பாறை சகாக்கள். ஜிம்மி உட்பட... "ஐஸ்பாய் வெள்ளாடலாம் வாங்கண்ணே"ன்னு கூப்டுகினு போயி முதுக பலுக்கிட்டானுவ...


அடுத்து கூப்பிட விரும்பும் 5 பேரு:

1. சுதர்சன் கோபால் - தம்பி இப்போல்லாம் இங்கிலீசு பிளாகு மட்டுந்தேன் எயிதுவேன்னு விடற பன்னாட்டு தாங்கலை! விட்டுருவமா?

2. ஜீரா - ஆளு ஸ்விஸ் போயி கொளுக்மொளுக்னு அம்சமா ஆயிட்டாப்புல.. சும்மாவே இந்தாளோட ஆட்டம் பெங்களூரூ தாங்காது!

3. ராமச்சந்திரன் உஷா - யக்கோவ்.... இப்ப நீங்க இருக்கறது துபையா.. மஸ்கிட்டா? அபிதாபியா?

4. துளசியக்கா - நீங்க எழுதறது எல்லாமே புடிச்ச பதிவுதான்.. இருந்தாலும் இதச்சொல்லி ஜகா வாங்காதீங்க...

5. இகொ - இன்னேரத்துக்கு இவரை பலபேரு கூப்பிட்டிருப்பாய்ங்க.. இருந்தாலும் என் சார்புல நானும்...


அவ்ளவ்தான் மேட்டரு!

கருத்துகள்

  1. ஆனாலும் வலைப்பதிவில் ரொம்ப ஆக்டிவா இல்லைன்னு காமிக்க எம்புட்டு கஷ்டப்படறீருய்யா!!

    //2. ஜீரா - ஆளு ஸ்விஸ் போயி கொளுக்மொளுக்னு அம்சமா ஆயிட்டாப்புல..//

    அவரு என் கிட்ட நெதர்லாந்துன்னு இல்ல சொன்னாரு! :)

    //ராமச்சந்திரன் உஷா - யக்கோவ்.... இப்ப நீங்க இருக்கறது துபையா.. மஸ்கிட்டா? அபிதாபியா?//

    அவங்க இருக்கிறது மோடியகம் அப்படின்னு இல்ல சொன்னாங்க.

    //துளசியக்கா - நீங்க எழுதறது எல்லாமே புடிச்ச பதிவுதான்.. இருந்தாலும் இதச்சொல்லி ஜகா வாங்காதீங்க...//

    நான் இவங்களை புடிச்ச படம் பதிவுக்கு கூப்பிட்டேன். அதே இன்னும் வரலை.

    //5. இகொ - இன்னேரத்துக்கு இவரை பலபேரு கூப்பிட்டிருப்பாய்ங்க.. இருந்தாலும் என் சார்புல நானும்...//

    கடைசியில் இ.வா. நாந்தேன் மாட்டுனேனாக்கும். சரி போடறேன். விரைவில். ஆனா அப்பவாவது வந்து 'படிச்சுட்டு' பின்னூட்டம் போடணும் சொல்லிட்டேன். :))

    பதிலளிநீக்கு
  2. தங்கள் உத்தரவின் படி என் 2007 பதிவுகளைப் பற்றிப் போடத் தொடங்கியாயிற்று . (ஆமாம் தொடங்கத்தான் செஞ்சிருக்கேன், இன்னும் முடியலை!)

    பதிலளிநீக்கு
  3. இளா,

    நன்றின்னேன்!

    இகொ,

    நான் வலைப்பதிவில் நெம்ப ஆக்டிவ்வா இருக்கேன்னு காட்டறதுக்காக இப்படி எழுதுனா நீங்க இல்லைன்னு காமிக்கறதுக்குன்னு சொல்லறீங்க! :) என்ன ஒலகமப்பா இது?!

    கூப்பிட்டவுக பத்தின மேலதிக தகவல்களுக்கு நன்றி. உங்க சைடு வர்றேன்...

    பதிலளிநீக்கு
  4. \\இருந்தாலும் சொல்ல வந்த விசயத்தை குழப்பமில்லாம தெளிவா சொல்லமுடிஞ்சதுதான் அதில் எனக்கு கிடைச்ச சந்தோசம்னு நினைக்கறேன். :)\\

    ரைட்டு தல ;))

    பதிலளிநீக்கு
  5. தல நம்ம இளா அண்ணே சொன்ன பதிவையும் படிச்சேன்.

    ஆனா பாருங்க எனக்கு பிடித்த பதிவு அந்த ஒரு புள்ளி பதிவு தான். அதிலும் உங்களின் தனித்துவம் இருக்கும் தல.:)

    பதிலளிநீக்கு
  6. வஞ்சியாரே போட்டாச்சு.
    மோடியின் ராஜ்ஜியத்தில் இருந்து,
    உஷா

    பதிலளிநீக்கு
  7. நான் விரும்பிப் படித்தது பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்தான்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது

கல்யாணமாம் கல்யாணம்! - ஒரு முன்னுரை!

" மா ப்ள.. வீட்டுல பொண்னு பாக்கறோம்னு ஒரே தொல்லைடா... மனசே சரியில்லை! ஒரு தம் போட்டுட்டு வருவமா?" "மாம்ஸ்.. இந்த பொண்னு பார்க்கற மேட்டரைப்பத்தி என்ன நினைக்கற?! ஒரே கொழப்பமா இருக்கு.." "டேய் மக்கா.. கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீக! அப்பறம் என்ன மாதிரி குத்துதே குடையுதேன்னு பொலம்பாதீக.. சொல்லிட்டேன்" "வீட்டுல நிம்மதியா ஒரு 5 நிமிசம் இருக்க முடியலைடா! இம்சை தாங்கலை! இவளை கட்டிவைச்ச எங்க அப்பன் மட்டும் இப்ப கைல கெடைச்சா.." "டேய்.. என்னடா இது.. ஆறு மாசம்கூட ஆகலை.. அதுக்குள்ள டைவர்சு கீவர்சுன்னு பெரிய வார்த்தையெல்லாம் விடற? கிறுக்கா புடிச்சிருக்கு?!" மக்கா! இதெல்லாம் கூட்டாளிக கூட பொங்க போடறப்ப அடிக்கடி கேக்கறமாதிரி இருக்கா? இந்தக் காலத்துல வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கூட கல்யாணம் நடந்து அதை ஒலகமே சேர்ந்து கூடிக் கும்மியடிச்சு கொண்டாடுது! ஆனா பயபுள்ளைங்க நாம கல்யாணம் கட்டறதுன்னா மட்டும் எத்தனை கொழப்பம்? எத்தனை சிக்கல்! ஏண்டாப்பா இப்படி? கை நெறைய சம்பாதிக்க தெம்பிருக்கு! ஆபீசு அரசியல்ல பிண்ணிப் பிணைஞ்சு போராடி மேல வர