முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொல்லைப்பற்றி சில சொற்கள்



நீயும் நானும் எழுதியதாலேயே
அவைகள் மீது உரிமையில்லை
உன்னாலும் என்னாலும் அறியப்படாததாலேயே
அவைகள் ஒன்றும் அந்நியமில்லை

புதிதாய் ஒன்று புலப்படும்பொழுது
கிடைக்கும் ஒரு விட்டுப்போன உறவு
திடும்மெனத்தான் ஆகிறது
அவைகளுடன் அறிமுகங்களும்

காராபூந்தியும் வறுகடலையுமாய்
ஆறாம் ரவுண்டில் வாயிலெடுதாற்போல
சில அருவருப்பாய்...

நல்ல கலவியின் நடுவில்
கைக்கெட்டாத முதுகின்பரப்பில்
உணரும் கொசுக்கடியாய்
சிலது எரிச்சலாக...

நண்டூருது நரியூருதின் போது
குழந்தையின் உடம்பில்
பொங்கும் தொற்றுக்களிப்பின்
இனிமையை போல சிலது...

எதுவாய் இருப்பினும்
ஞாபகதிரட்டில் அவைகள்
சிலநாள் முன்வரிசையில்
முன்னாள் காதலிகளின்
பெயர்களைப்போல...

கபாலத்தை கசக்கி
இதயத்தை ஊடுருவி
அகத்தில் ஆழ்ந்தும்
கிடைக்காத ஒன்று
எங்கோ எதற்க்கோ
அலைந்த சோர்வின்
வெறுமையின் போதில்
பளீரென கண்முன்...
கொடுப்பினைதான் இது...

அல்பமாய் இருப்பினும்
நம்பாப்பாவை கொஞ்ச
கிடைத்தது நேற்றொன்று
நன்றாக இருக்கிறதா சொல்...
"ஜிஞ்ஜிக்குஜிக்கா ஜீ..."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு