ரெண்டு காலையும் விரிச்சு மல்லாக்கப்படுத்து வானத்தப் பார்க்கறதுல எவ்வளவு சொகம்!
மக்கா சரக்கும் நான் ஃபாண்டாவும்னு ஒரு மணி நேரம் நல்லாத்தான் போச்சு. அப்பறம் போட்டமுய்யா கடலுக்கு சோறு... எக்கி எக்கி வாந்திதான்... அலையாட்டத்துல பெருங்கொடலு தொண்டைவரைக்கும் வந்து இனிமே ஏதாவது திம்பயா?”ன்னு கேட்டுட்டு போயிருச்சுங்கப்பு! ரெண்டுதபா வந்தா சரியாகிருமாம்! அது சரி!
குதியாட்டம் ஆரம்பம்! :) நானுங்கூட ஜெட்டியோட நல்லா டைவெல்லாம் அடிச்சனுங்க.. போட்டா புடிக்கத்தான் ஆளில்ல... :( உண்மையில் அழ்மன விருப்பம் என்னன்னா அம்மணக்கட்டையா நடுக்கடல்ல ஊறனுங்கறதுதான். அதுக்குள்ள மக்கா இங்கன சுறா வந்தாலும் வரும்னு பிட்டை போட்டுட்டானுவ... நானும் சுறாவின் மனநலம் கருதி என் ஆசையை மீண்டும் தள்ளிப் போட்டுட்டேன்! :(
அமோகமான நாலு மணிநேரத்துக்கப்பறம் அடிச்சுப்போட்டாப்புல கரைவந்து விழுந்தோம். மீன் புடிச்சு ரிடர்னான ஒரு படகு...
என்னத்த புடிச்சுக்கினு வந்தாய்ங்கன்னா...
சங்கரா.... சங்கரா மீன் கொழம்பு வைப்பதெப்படின்னு பதிவு போடறவுகளுக்கு என்னாண்ட இருந்து ஒரு கிலோ மீனு அன்பளிப்பேய்! :)
நாம ஏற்கனவே மாநிறத்துக்கும் மேல் கலர். இருந்தாலும் லைட்டா ஸ்கின் டேனிங் செஞ்சுக்கலாம்னு கரைலயே நண்டு, நத்தைகளோடு ரெண்டுமணி நேரம் உருளல். கண்டதையும் பேசிக்கினு அப்பப்ப வந்துபோறா அலைகளால் புரண்டு படுத்துகினு லைப்பு நல்லாத்தான் இருந்தது :) அப்பறமா சாயந்தரம் கரைல விநாய்கரு கரைக்கறாங்கன்னு கேள்விப்பட்டு அங்கே ஆஜர்...
உங்க ஆளு ஒகேனக்கல்லு பிரச்சனைல இப்படியா அந்தர்பல்டி அடிக்கறது?! - தப்புதாங்க.. அவருக்கு “நாதாரித்தனம் செஞ்சாலும் நாசுக்கா செய்யனும்”னு தெரில... இடம் பொருள் ஏவல் தெரியாம வழக்கம் போல உண்மையா பேசி மாட்டிக்கினாருதான். ஆனா அந்தர்பல்டி அடிச்சுட்டாருன்னு இவரை கேக்கறதை விட ”எலும்புகளை உடைத்தாலும் ஒகேனக்கல் திட்டத்தை நடத்தியே தீருவோ”முன்னும் அப்பறமா ”அடுத்த கவருமெண்டு வர்றவரைக்கும் தள்ளி வைக்கறோமு”ன்னும் சொல்லிட்டு இப்ப இதைப்பத்தி மூச்சுகூட விடாம இருக்கற முதல்வர் கலைஞரைப் பார்த்து இக்கேள்விய கேக்கறதுதானுங்களே கரெக்கிட்டா இருக்கும்?!
கெஸ்ட் ரோல்ல நடிச்ச ஒரு படத்துக்கு 60கோடி ரூவா வியாபாரங்கறதெல்லாம் பிராடுத்தனம் இல்லையா?! - இருக்கலாங்க... லாபம் வரும்னு நம்பி வாங்கறாங்க.. நட்டம் வந்தா வயித்துல அடிச்சிக்கறாங்க. கார்ப்பரேட்டு, வினியோகிஸ்தருங்க, தியேடரு லீசுன்னு பல வியாபாரிங்க உலவற எடத்துல அவரும் சரக்கு விக்குது. கேட்ட விலை கிடைக்குதுன்னு ஒரு வியாபாரியாத்தான் இருக்காரு. இருந்தாலும் சரக்கு மதிப்புக்கு மேல விலைவைச்சு விக்கறது தப்புத்தாங்க...
ஒரு கன்னட ஆளு இங்க வந்து இப்படி தமிழர்களோட உணர்வுகளோட வெளையாடறாருன்னு உனக்கெல்லாம் சொரணையே இல்லையா?! - அப்படியா? அவரு கன்னடத்துலயே வருத்தம் தெரிவிச்சிருந்தாலும் நான் அவரை அப்படியெல்லாம் பிரிச்சு நினைச்சதே இல்லைங்க... இது என்னோட விக்னெசுதாங்க.. என்ன செய்ய?
ஒரு சினிமாக்காரனுக்கு எதுக்கய்யா நாட்டுல இத்தனை முக்கியத்துவம்?! - அதேதாங்க எனக்கும் புரியல. அவரு சினிமாக்காரருதான். அவருக்கு எதுக்கு இத்தனை முக்கியத்துவம்?
இத்தனைநாள் பஞ்ச் டயலாக்குல அப்பாவி ரசிகர்களை தூண்டிவிட்டுட்டு இப்பத்திக்கு அது ஜஸ்ட் டைரக்டரு வைச்ச வசனம்னு ஜகா வாங்கறது அசிங்கமா இல்லை?! - அசிங்கமாத்தாங்க இருக்கு. அவரே சொல்லறது மாதிரி அவரு நல்லதும் கெட்டதும் செய்யற ஜஸ்ட் ஒரு மனுசருந்தாங்க. இப்படி ஊர் நிலவரம் தெரியாம வசனம் பேசுனது தப்புத்தாங்க.
சிரஞ்சீவில இருந்து இத்துப்போன கார்த்திக் வரைக்கும் கட்சி ஆரம்பிச்சுட்டாங்க... உங்க ஆளு என்னடான்னா... - விடுங்க.. அவருக்கு அது சரியா வரலை. சறுக்குதுன்னு தெரிஞ்சப்பறமும் அவருகிட்ட நான் அதை எதிர்பார்க்கறதில்லை...
இதெல்லாம் இப்ப எதுக்குடா இப்ப நீட்டி வாக்குமூலம் மாதிரி முழக்கறன்னா கேக்கறீங்க? நாலு நாளைக்கு முன்னாடி குசேலன் குடும்பத்தோட பார்த்தனுங்க.. படம் பப்படம் தான். நயந்தாரா சீனு கேவலந்தான். வடிவேலு சகிக்கலதான். பசுபதிக்கான கதைல அவரை பின்னால தள்ளுனது அலும்புதான். திரைக்கதைய வல்லாங்கு செஞ்சது வாசுவின் மகாமகா தப்புத்தான். இருந்தாலும் ரஜினி எங்க நிக்கறாருன்னா அந்த கடைசி 15 நிமிசத்துலங்க. அதுவரைக்கும் ஒரு காண்டுலயே படம் பார்த்துக்கிட்டு இருந்தவன் சடன்னா மனநிலை தலைகீழா உணர்வுக்குவியலா மாறிப்போயி கண்ணுல தண்ணி கரைபுரண்டோட அந்த 15 நிமிசம் அடடா! வேணாங்க... அதை வார்த்தைல விளக்க முடியாது. சந்தோசமா கண்களைத் துடைத்துக்கொண்டேன்.
சந்தோசம் எதுக்கா? இத்தனை களேபரங்களுக்கு அப்பறமும் நான் மாறிவிடவில்லை. மனதில் ஒரு குழப்பமும் இல்லை. இன்னமும் நான் ரஜினி ரசிகன் தான். நெஞ்சு நிமிர்த்தி சொல்லறேன்.
இதுக்கு மேலும் நான் ரஜினி ரசிகன் தான்! :)
*****
சில காலங்களாக மறுபடியும் என் அலும்பு ஆரம்பித்திருந்தது. எலக்கியத்தை கலையை பரிச்சயம் செய்துக்கொண்டு சாரசரி உலகைப்பார்ப்பதில் நாம் ஒருபடி மேலே இருப்பதாக நெனைப்பு வருவது உவப்பாக இருப்பதால் அதில் இனிமேலும் கொஞ்சமாவது அறிவை வளர்த்துக்கலாம்னு கஜினிமுகம்மது கணக்காக மீண்டும் முடிவெடுத்து, ஹிக்கின் புக் லேண்ட் எல்லாம் போய் புத்தகங்களாக அள்ளிட்டு வந்தும், பாரிஸ் கார்னரில் இத்துபோன திருட்டு டிவிடிக்களாக வாங்கிக்குவித்தும் ஒரே அலப்பரை. நைட்டானா... லீசுநாளானா போதும்... மெத்தைலை சாஞ்சுக்கினே நொறுக்ஸ்சோடு புத்தகத்துக்கு 10 பக்கங்களாக மாத்திமாத்தி படிப்பதென்ன? ஹெட்போனை மாட்டிக்கிட்டு லேப்டப்புல அவார்டு படமா பார்த்து தள்ளறதென்ன?
டெய்லர் கடை வரைக்கும் போகனும்? போலாமாங்க?
சாரிடா.. ஐயாம் டேக்கிங் சிவியர் ரெஸ்ட் அண்ட் பிஜி இன் ரீடிங்....
யப்பா.. க்ரையான்சுக்கு ஏம்பா க்ரையான்சுன்னு பேரு?
போய் அந்தண்ட வெள்ளாடு பாப்பா... அப்பா ஆபிஸ் வேலையா படம் பார்த்துக்கிட்டு இருக்கறேன்...
கதிர் வெளையாடறான் பாருங்க. கொஞ்ச நேரம் கூட இருங்க..
அடடா.. ரெண்டு நாளு எனக்குப்பிடிச்சதை செய்ய விடறயா? எப்பப்பாரு டிஸ்டர்ப் செஞ்சுக்கிட்டு..
அப்படியா சேதி? அப்ப அய்யா எப்ப ஃப்ரி ஆவிங்க?
ம்? கதவுல எழுதிப்போடறேன். தெரிஞ்சுக்கினு உள்ள வாங்க...
கவலையே படாதீங்க.. அதை நானே செஞ்சுடறேன்.
எங்கூட்டம்மாவும் எம்புள்ளையும் என்ன செஞ்சாங்களா? இதைத்தான்!
நல்லவேளை! மண்டைல இடம் இல்லாததால “மொட்டை”க்கு இடம் இல்லை. ”பாஸ் இன்” கூட ஓகே! ஆனா ”பாஸ் அவுட்” கீழாக இருக்கற சிரிப்பல்லுகளை பார்த்தாத்தான் கிலி கெளம்புது.
ராசா வேசம் கலையறதுக்குள்ள கலைச்சிற வேண்டியது தான்....
*****
மனசுக்கு நேர்மையாய் கூரான் செத்துப்போய் சில மாதங்களாகிறது. மற்றவர் வடிவமைத்ததே வாழ்க்கையென வாழ்ந்துகொண்டிருக்கும் எம்போன்றவர் மத்தியில் உனக்கு பிடித்தபடி நினைத்தபடி சில தினங்களேனும் நீ வாழ்ந்திருக்கக்கூடும். எங்களுக்குக் கிடைக்காத அந்த திருப்தியோடு... போய் வா நண்பா! :)
சறுக்குமிடம் காமம் எனில் நண்பன் சிறைக்காலம் முடிந்து விடுதலையாகி சில மாதங்களாகிறது. 5 வருட சிறை அனுபவத்தில் அவன் பெற்றது பல புதிய ஆய்வுக்கட்டுரைகளும் மேலும் சில புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்பீட்டு உரிமைகளும் என கேள்விப்பட்டேன். வாழ்வில் சில கறைகள் அழிவதில்லை என்றாலும் வாழ்வையே அழித்து விடுவதில்லை போல. வளமாய் வாழ வாழ்த்துக்கள் நண்பா! :)
*****
விகடன் விமர்சனம், குமுதம் பேட்டி, வலைப்பதிவுகள்னு சரமாரியாக நடிகர் ஜே.கே. ரித்தீஸ் அவர்களைத் தூக்கி வைத்து கொண்டாடும் அவலநிலையை நாம் இப்போதெல்லாம் காணவேண்டியிருக்கிறது. ஆனால் பாட்டு, நடனம், வசனம்னு அனைத்து துறைகளிலும் அவரை களத்தில் வீழ்த்திய சாம் ஆண்டர்சன் அவர்களது “யாருக்கு யாரோ?” (Step Nee) என்ற திரைக்காவியத்தினைப்பற்றி எந்தவொரு விமர்சனமும், பேட்டிகளும் வராத நிலையை அண்ணன் சாம் அவர்களை இருட்டடிப்பு செய்யும் ஒரு தீய முயற்சியாகவே கருதவேண்டியுள்ளது. இருந்தாலும் இதனை எனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகக் கருதி சாம் அவர்களது திறமைகளை எடுத்தியம்புவதை ஒரு கடமையாகவே கொள்கிறேன்.
மொக்கைப்பட போட்டியில் குசேலனையே விஞ்சி நிற்கும் யாருக்கு யாரோ என்ற படத்தின் ஆங்கில காப்ஷனான STEP NEE என்பதன் அர்த்தத்தை கீழ்கானும் படத்துண்டில் கிளைமேக்ஸ் காட்சியாக அவர் வைத்திருந்ததைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் அவருடைய மற்ற திறமைகளையும் இங்கே கண்டு களிக்கலாம். அதனையும் மீறி முழுப்படமும் வேண்டுவோருக்கு தேடினாலும் கிடைக்காத திருட்டு விசிடியாக என்னிடமிருந்து பெறலாம். அண்ணன் சாம் அடுத்தப்படத்தினை முழுநீள ஆக்ஷன் படமாக எடுத்து அந்தத்திறனிலும் JKR அவர்களை களத்தில் வீழ்த்த ஆண்டவனை வேண்டுகிறேன். (கோடம்பக்க அண்டங்காக்காவின் அதிரடி கிசுகிசு: அண்ணன் சாம் ஆண்டர்சன் இந்த பெயரை வைத்துக் கொண்டுள்ளதே நாளப்பின்ன ஆஸ்கர் அவார்டு வாங்கும்பொழுது அவர்களுக்கு பெயரைச்சொல்லி கூப்பிட சிரமமில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்! )
*****
விடுதலையான டேவிட் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்? செத்துப்போன நாவரசுசின் வீட்டினர் இப்பொழுது எப்படி இருக்கின்றனர்?
மூன்று பிள்ளைகள் பொண்டாட்டியோடு தற்கொலை செய்துகொண்ட ஸ்டாலினின் சென்னை நண்பரது வழக்கு என்ன ஆனது?
சங்கராச்சாரியுடன் வழக்கில் மாட்டிய அப்பு எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்?
சிலுக்கின் தாடிக்கார நண்பர் இப்பொழுது எப்படி இருக்கிறார்?
கும்பகோணம் தீவிபத்து பள்ளியின் தாளாளர் தற்போது வருமானத்துக்கு என்ன செய்கிறார்?
பணமுடையில் பாதியில் நின்ற கோழிகூவுது விஜியின் தந்தை கட்டிக்கொண்டிருந்த கல்யாண மண்டபம் கட்டிமுடிந்து விட்டதா?
அயோத்திகுப்பம் வீரமணியின் இரு மனைவிகளுக்கு இடையே இருந்த சொத்துப்பிரச்சனை தீர்ந்து விட்டதா?
நாட்டு ரகசியங்களை ஜெராக்ஸ் போட்டு விற்ற திடீரென காணாமல் போன ரா உயரதிகாரி உயிருடன் இருக்கிறாரா? கொல்லப்பட்டு விட்டாரா?
ரபி பெர்னார்டு இப்பொழுது எங்கே இருக்கிறார்?
'ஙே' ராஜேந்திரக்குமார் என்ன ஆனார்?
லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவின் முன்னாள் முதல் கணவர் போதையின் பிடியில் இருந்து மீண்டுவிட்டாரா?
சீவலப்பேரி பாண்டியை சுட்ட போலிஸ் அதிகாரி இன்னும் இருக்கின்றாரா?
உதவி இயக்குனரான நாகேஷின் மகன் ஆனந்த்பாபு மீண்டும் ஏன் லைம்லைட்டில் காணவில்லை?
மீனா தன் முதல் ஜோடியான மனோரமாவின் மகனிடம் நட்பு முறையிலாவது பேசுவார்களா?
தமிழ்க்குடிமகனின் அன்றாட அலுவல்கள் என்னென்ன?
பிரிந்து சென்ற கலைஞரின் முன்னாள் கார் டிரைவர் இப்பொழுது எப்படி இருக்கிறார்?
ஆட்டோ சங்கர் வழக்கில் அப்ரூவர் ஆனவர் இப்பொழுது பிழைப்புக்கு என்ன செய்கிறார்?
ஜீவி, ரிப்போர்ட்டர், நக்கீரன் வாங்குவதை நிறுத்திவிடலாம் தான்! அப்பறம் இந்த கேள்விகளுக்கெல்லாம் எனக்கு யார் பதில் சொல்லுவது?!
*****
பாவிகளே... உங்கள் பயத்தினின்று விடுதலை அடைய உங்களை.. உங்களை மட்டுமே நம்புங்கள்! - சரி ஆண்டவரே! நான் எங்கே இருக்கிறேன்? - வேறெங்கே? இருட்டினில்தான்! ஹாஹ்ஹா...
I am a man who walks alone
And when Im walking a dark road
At night or strolling through the park
....
....
....
....
Fear of the dark, fear of the dark
I have a constant fear that someones always near
Fear of the dark, fear of the dark
I have a phobia that someones allways there
- Iron Maiden - Fear Of The Dark
எனக்கான வாடகையை என் சமூகமே செலுத்தும்படி நான் பெரிய மனது கொண்டு அனுமதித்திருக்கிறேன்... நீங்கள்?
You dress me up, I'm your puppet
You buy me things, I love it
You bring me food, I need it
You give me love, I feed it
And look at the two of us in sympathy
With everything we see
I never want anything, it's easy
You buy whatever I need
But look at my hopes, look at my dreams
The currency we've spent
(Ooooh) I love you, oh, you pay my rent
- Pet Shop Boys - RENT
*****
ஆடுகள் தங்களை ஆடுகள் என உணரும் பொழுது மந்தையை விட்டு விலகுவதில்லை. மாறாக ஆடுகளுக்குரிய வாழ்க்கையை எவ்வித குற்ற உணர்வுமின்றி சந்தோசமாக வாழத் துவங்குகின்றன.