
அப்பாவி: கருத்து சுதந்திரம்னா என்னாண்ணே?
அறிவுப்பசி அண்ணாசாமி: சோக்கா கேட்ட அப்பாவி.. பாயிண்டு பாயிண்டா சொல்லறேன் கேட்டுக்க...
1. "அதுவா? எனக்கு பிடிச்ச கருத்தை சொல்லறதுக்கு உனக்கு முழுசுதந்திரம் இருக்குன்னு அர்த்தம்" அப்படின்னு எழுதிவச்சிகிட்டு, F9/11 படம் எடுத்தவரு அது அவரோட சொந்தபடத்துல சொன்ன சொந்த கருத்துக்கள் அப்படிங்கறதை விட்டுட்டு என்னமோ புஷ்சு வீட்டு வரவேற்பறைல கக்கா போயிட்டு சும்மா வந்துட்ட மாதிரி சொல்லறதுதான் கருத்துச்சுதந்திரம்னு நம்பவைக்கறது! நாம நகைச்சுவையா பத்தி பத்தியா எழுதினாலும் அது மத்தவங்களுக்கு நகைச்சுவைதான்னும் அதுக்கு மத்தவங்க யாராவது கருத்து சொன்னா ஒடனே நகைச்சுவை முகத்தை கலைச்சுட்டு சீரியசா அதுபத்தி விவாதிக்கனும்னு நம்பறது. அதையே ஒருத்தரு "இந்த நகைச்சுவை மூன்றாம் தரமா இருக்கு! " அப்படின்னு ஒரு கருத்தை சொன்னா "இதையெல்லாம் நகைச்சுவை இல்லைன்னு சொன்னா உனக்கு மூளைக்கோளாரு! " அப்படின்னு பின்னூட்டம் வந்தாலும் ஒன்னும் சொல்லாம அதை அப்படியே வச்சிருக்கறது!
2. சேரும்போது மட்டும் நாம எழுதறது நாலு பேரு கவனத்துக்கு போகனும்ற "தெளிவான" நோக்கத்தோட தமிழ்மணத்துல சேர்ந்துட்டு, அவங்க ஏதாவது சட்டதிட்டம்னு கொண்டுவந்து இந்த விதிகளின் படிதான் இங்க உனக்கு இடம்னு சொன்னா உடனே "ஐயையோ! என் எழுத்து சுதந்திரம் போச்சே! " அப்படின்னு என்னவோ weblog account டையே முடக்கி வைச்சாப்படி "தெளிவில்"லாம கூவறது.
3. இருக்கறவரைக்கும் சகட்டுமேனிக்கு எல்லா பதிவுகளையும் போட்டு தாக்கிட்டு அதுக்கு எப்பவும் போல வழக்கமான பின்னூட்டங்களான " அண்ணே.. கலக்கீட்டிங்க...", "பின் முதுகை சொரிஞ்சிட்டீங்க", "மூக்கை நோண்டிட்டீங்க"ன்னு வர்ற நாலஞ்சு பின்னூட்டங்களை வச்சிகிட்டு "பாருங்க.. நான் யாரும் வருத்தப்படறமாதிரி எங்கயும் எழுதலை"ன்னு தன்னிலை விளக்கமும் குடுத்துக்கிட்டு, விலக்கிவைச்சப்பறம் "அங்கதம்"னா என்ன அப்படின்னு விளக்கமா எல்லாருக்கும் சொல்லித்தர்றது...
4. அந்த " அண்ணே.. கலக்கீட்டிங்க..." பின்னூட்டத்தையும் அனானிமசா இவ்வளவு நாள் போட்டுட்டு, அங்க பொலம்பற பதிவுலயும் போய், "நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்கண்ணே! உங்களுக்காக நான் ஒரு திரட்டி ஆரம்பிக்கறேன்"னு அனானிமசாவே பின்னூட்டம் போட்டு அங்கதம் சொல்லித்தந்த அண்ணன் புண்ணுலயே அங்குசம் பாய்ச்சி தமாசு பன்னறது.
5. எழுதற வரைக்கும் எந்த வரைமுறையும் இல்லாம "அமெரிக்காவுல அப்பிடி சுதந்திரமா எழுதறாங்கோ.." "சப்பானுல இப்படி அளவுகோலே கிடையாது", "உகாண்டால பேனாவுக்கு தடையே கிடையாது"ன்னு கூவிட்டு "நாம எழுதறதுக்கு என்ன அளவுகோல்?" அப்படின்ற கேள்வியே நெனப்புல வராம அம்மா, அக்கா, சாதி, மதம்னு அத்தனையும் இழுத்துப்போட்டு நாறடிச்சுட்டு, "தயவு செய்து இந்தமாதிரி பண்ணறவங்க கவனிங்கன்னு" சொன்னா.. அதையும் உப்புமா பதிவுன்னு சொல்லிட்டு கடைசியா பச்சை வெளைக்க அணைச்சவுடனே "நீ விளக்கை அணைக்கறதுக்கு என்னா அளவுகோல் வச்சி இப்படி புடுங்குன?" அப்படின்னு திடீர்னு அளவுகோல் மேல கரிசனம் காட்டி அறிக்கை விடறது
6. எழுதுன அத்தனையும் மத்தவங்க பதிவுகளையே போட்டுத்தாக்கிட்டு, கடைசியா சொந்தமா ஒரே ஒரு பதிவை போடறபோது பச்ச பல்பு ஃபியூசு போனது தெரிஞ்சு மண்டை காய்ஞ்சபடி ஓய்ஞ்சுபோறது
7. "எதிர்மறை கருத்துக்களே இருக்க கூடாதா? அப்படின்னா இது என்ன எழுத்து சுதந்திரம்?" கேள்வி கேக்கற அதே நேரத்துல "அவங்க எடம்னு தெரிஞ்சு தானே வந்தோம்? அவங்க சொல்லறதையும் கொஞ்சம் கேக்கலாமே?" ன்னு யாராவது சொன்னா "ஜால்ராவ நிறுத்து பெருசு.."ன்னு இவ்வளவு நாள் மத்தவங்களுக்கு போட்ட ஜால்ராவ மறந்து சொல்லறது.
8. குஷ்பு சுந்தரை இல்லாம தலகாணிய கட்டிப்புடிச்சுட்டு தூங்கறதால தமிழ் பெண்களின் கற்புக்கு ஆபத்தா? திருமா கனடவுல வேலங்குச்சிவச்சி ஏன் பல்லு வெளக்கலை? புருசன் பொண்டாட்டி சண்டையோட குடும்பம் நடத்தறவங்க எல்லாம் எப்படி ஒரு விபச்சாரி எழுதுன புத்தகத்தை வச்சி குடும்பம் நடத்த பழகிக்கனும்? இணையத்துல செருப்பால அடிக்கறது எப்படி? ன்னு பலதரப்பட்ட இம்சைகளையும், கூச்சல்களையும் கேட்டுக்கேட்டு நொந்துபோய் "சரி, நம்ப வேலையையாவது நாம பார்ப்பம்"னு ஒதுங்கிப்போறவங்களைப்பார்த்து கருத்துச்சொல்லாத கோயிஞ்ச்சாமிகள்னு சொல்லறது
9. சாவுச்சேதிகளை கூட விடாம பத்தி பத்தியா அங்கதம் பண்ணிட்டு, அங்கதம் பத்தி விளக்கமா வகுப்பும் எடுத்துட்டு "கொடுக்கற தானியத்துல ரெண்டு கொறச்சிக்கங்க.. "ன்னு சொன்னா "அதெப்படி நிர்வாகியா இருந்துக்கிட்டு நீ அங்கதமா எழுதலாம்? இப்படி சொல்லறதுக்கு எவ்வளவு கொழுப்பு உனக்கு?"ன்னு கேக்கறது.
10. இணையதளம்கறது இந்த உலகத்துக்கே வாசல்கறதை மறந்துட்டு எழுதற எழுத்துமேல நம்பிக்கை வைக்காம தமிழ்மணம் மட்டும்தான் தமிழு இலக்கியத்துக்கே வாசல்னு நம்பறது. "இருக்கறவனுக்கு ஒரு எடம்.. இல்லாதவனுக்கு இந்த ஒலகமே மடம்"னு போய் அடுத்த வேலையை பார்க்காம அதையே புடிச்சுகிட்டு இந்த மாதிரி பதிவு போட்டு தொங்கறது.
இது போதுமா? இல்லை இன்னும் கோஞ்சம் சொல்லவா?? "
============
கடைசி பக்கத்தில் தாரள மார்புகளை காட்டும் நடிகையின் படத்தையும், முதல் பக்கத்தில் நாலு பெண்கள் ஒரு டீக்கடையில் சிங்கிள் சாயாவும் ஒரு வடையும் தின்னும் படத்தை அரை பக்கத்துக்கு போட்டு "சீர்குலையும் தமிழ்க்குடும்பங்கள்" னு கலாச்சார அதிர்ச்சி கட்டுரை வெளிவந்த தமிழ்முரசின் 7ம் பக்கத்து விளம்பரத்துக்கு அடியில் ஒரு செய்தி...
"கருத்துச்சுதந்திரம் பற்றி கருத்துச்சொல்லிய அண்ணாசாமியின் கை உடைப்பு! அப்பாவி கைது!!"