முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எட்றா வண்டியெ - வா.மு.கோமு

வா.மு.கோமுவின் புத்தகத்தை படித்துவிட்டு மனுசன் மனசுக்குள்ள அவரு பேனாவ உட்டு ஆட்டிட்டாப்லன்னு சொல்லி சிலாகிக்கறதும் வாழ்க்கைல சோக்களிகளோட மொத பீருக்கு அப்பறம் இதான் மப்புதூக்கறதான்னு தெரியாம அலங்கமலங்க கொஞ்சகணம் மெதப்புல இருக்கயில மப்புன்னா சூப்பர்தாம்லன்னு சொல்லறதும் ஒன்னுதான். ரெண்டுமே மொதமொதல்ல காணாததை கண்டுட்ட பிரமிப்பாத்தான் அனுபவிக்கயில தெரியும். வெளில சொல்லி அந்த சொகத்த எப்படி வெளக்கறது? சொல்லதேவையும் இல்லீல்ல? இருந்தாலும் அந்த திருட்டு சொகத்தை, தப்பை மறைச்சு செய்யற த்ரில்லை, நாசூக்கு மசிருமட்டைன்னு ஏதுமில்லாம தேங்காயொடச்ச மாதிரி சொல்லற நேர்மைய நாம அனுபவிக்கறதை கொஞ்சமா வெளீல சொல்லி பீத்திக்கறது தப்பில்லங்கறதால இந்த ரெண்டு பத்தி... நாவல்னுதான் அட்டைல போட்ருக்காப்ல.. எனக்கென்னவோ பன்ணெண்டு சிறுகதைகள எழுதிவைச்சுட்டு வரிசைய மாத்திமாத்தி எந்த பத்திரிக்கை அனுப்பலாம்கற கொழப்பத்துல எல்லாஞ்சேத்தி ஒரு புக்கா போட்டுட்டாப்லனுதான் படிக்கயில தோனுச்சு. எந்த அத்தியாயத்துல ஆரம்பிச்சு படிச்சாலும் தனிக்கதைதான். மொத்தமா படிச்சா நாவல்மாதிரிதான் தெரிது. எல்லாகதைலயும் சாமிநாதன் வர்ற

என் பேச்சுமொழியும் பிழைப்புமொ(வ)ழியும்

என் தாய்மொழி தமிழ். அதாவது என் நினைவுதெரிந்த நாளில் இருந்து எங்கள் வீட்டில் அனைவரும் பேசும் மொழி.  பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் தமிழ்வழிக்கல்வி. அதிலும் ஒன்பதாம் வகுப்புவரைக்கும் அரசுப்பள்ளிதான். ஆங்கிலம் கல்லூரி முடியும் வரைக்குமே கோர்வையாக பேசவராது. தக்கிமுக்கி முதல் ஆண்டு எழுதிப்பழகினாலும் கடைசிவருடம் முடிக்கையில் 35 மதிப்பெண்கள் வாங்கி தேறும் அளவுக்காவது கோர்வையாக வந்திருந்தது.  முதல்வகுப்பில் தேறினாலும் முதலில் கிடைத்தது விற்பனை பிரதிநிதியாக மருத்துவ உபகரணங்கள் விற்கும் வேலைதான். கூச்சமும் பிரத்தியாரிடம் பழகுவதற்கும் கூச்சம் சிறிதளவுக்கேனும் நீக்கியது இந்த வேலைதான்.  இந்த வேலையில் நான்கு மாநிலங்களுக்குள் இரண்டுவருடங்கள் இரவுபகலாக அலைந்திருக்கிறேன். நெல்லூர் மங்களூர் திருநெல்வேலி கொச்சின் நகரங்களில் நான் தமிழும் உடைந்த ஆங்கிலமும் கொண்டுதான் நிறைய உபகரணங்களை பலமாநில மருத்துவர்களிடம் விற்றிருக்கிறேன். எந்த இடத்திலும் மொழிப்பிரச்சனையால் பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டதில்லை. சில வேடிக்கையான குழப்பங்கள் மட்டுமே நடந்ததுண்டு ( கேரளாவில் எடப்பால் செல்வதற்கு பதிலாக எடப்