முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2005 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனசுக்கு நேர்மையாய்...

கூ ரான் அப்படிங்கறதுதான் அவனோட பேருங்க. எனக்கு பத்தாவது படிக்கறதுல இருந்து பழக்கம். அவனுக்கு ஏன் கூரான்னு பட்டப்பேரு வந்ததுன்னு இன்னைக்கு வரைக்கும் தெரியாது. எங்க காலனி கிரிக்கெட் டீம் பக்கத்து காலனி கிரிக்கெட் டீமோட ஒருமுறை கார்க்பால் பெட்மேட்ச் வைச்சபோது ஆன பழக்கம். அவன் படிச்சதும் எங்க பள்ளிக்கூடத்துலயேதான். நல்லா பேட்ஸ்மேன்னு சொல்ல முடியாதுன்னாலும் காட்டடி மன்னன். மிடில் ஆர்டர்ல இறக்கிவிட்டா குறைஞ்சபட்சம் 25 ரன்னு கேரண்ட்டி! நல்ல கீப்பிங்கும் செய்வான். ஆனா இதையெல்லாம் மிஞ்சி அவன்கிட்ட இருந்த திறமைன்னா ஸ்கோரு ஏத்தறதும், டீமு தோத்தே ஆகனும்ற நிலமைல எதயாவது சொல்லி சண்டை போட்டு மேட்சையே கலைக்கறதுதான். அவன் இருந்தானாவே மேட்சுக்கு 2 சண்டை உறுதி! மேட்சுல தோத்துட்டா ஒரு புது கார்க்பாலை தோத்த டீம் ஜெயிச்ச டீமுக்கு தரனும். அதை கூட சகிச்சுக்கலாம். ஆனா தோத்த டீம் கேப்டன் ஸ்கோர்கார்டுல கையெழுத்து போடனும். அதுதான் தாங்க முடியாத அவமானமா இருக்கும். ஜெயிச்சவனுங்க சுத்தி நிக்க தோத்தவனுங்க மொகத்துல கடுப்போட எதுனால தோத்தோம்னு ஒரு அனாலிசிஸ்ல இருக்க கேப்டன் போய் கையெழுத்து போடனும். போட்டுட்டு

ஒரு வேளை உணவு

த கவல் தொழில்நுட்பத்துறையில் எல்லோரும் எங்கே போவார்கள்? அமெரிக்கா? இங்கிலாந்து? சிங்கப்பூர்? எனக்கு முதன்முதலில் வாய்த்தது போட்சுவானா!! என்னது? உங்களை திட்டறேனா?! இல்லைங்க... தென்னாப்ரிக்காவின் மேல்பகுதியில் நிஜமாகவே இப்படி ஒரு நாடு இருக்குதுங்க... எனக்கு இந்த வேலை கிடைத்ததும் முதலில் செய்தது அட்லசை எடுத்து போட்சுவானா எங்கே இருக்கிறது என தேடியதுதான். நமக்கும் ஒரு வீராப்புங்க.. அதென்ன.. எல்லோரும் போற ஊருக்கே நாமும் போறது? புதுசா ஒரு நாட்டுக்குத்தான் போவமேன்னு கெளம்பிட்டேனுங்க... நாட்டோட மொத்த சனத்தொகைல 90% ஆப்ரிக்க இன மக்கள். மத்தவங்க எல்லாம் பக்கத்து நாட்டிலிருந்து வந்தேரிகள்! முக்கிய தொழில் மாட்டிறைச்சி மற்றும் வைரச்சுரங்கம். மொத்த வைரச்சுரங்கங்களையும் ஏமாந்து போய் பிரிட்டீஷ் கிட்ட மொத்தமா குத்தகைக்கு விட்டதில் அவர்கள் வெட்டியது போக தரும் கொஞ்ச பணத்திலேயே நாட்டோட பட்ஜெட்டு சர்பிளஸ்ல ஓடுதுன்னா பார்த்துக்கங்க. இன்னும் தோண்டப்படாத சுரங்கங்கள் மட்டுமே 70% க்கு மேல். சமீபத்தில்கூட சுரங்கம் தோண்டுவதற்காக பழங்குடியினரை அவர்கள் ஊரை விட்டு துரத்திய பிரச்சனையை செய்தியாக படிச்சிருப்

ஒரு உதவின்னு கேட்டு வந்துட்டா..

உ ங்களுக்கு போபால் எங்கே இருக்கிறது என தெரியுமா? எட்டாம் வகுப்பு படிக்கும்போது வரலாற்றுப்பரிச்சையில் மடகாஸ்கரை ஆந்திராவுக்கு நடுவிலும் போபாலை கன்னியாகுமாரி முனையிலும் இந்திய வரைபடத்தில் குறித்து வைத்து நடேசன் வாத்தியாரிடம் தொடையில் நிமிட்டாம்பழம் வாங்கியபோதிருந்து போபால் என்ற ஊரின் பெயர் மூளையின் ஒரு மூலையில் தங்கி விட்டது. அதன் பிறகு விஷவாயுக்கசிவு விபத்தின்போது அந்த ஊரைப்பற்றி வந்த செய்திகள் சில பொதுஅறிவு விசயங்களாக மனதில் பதிந்தது. அவ்வளவே அந்த ஊருக்கும் எனக்கும் இருந்த தொடர்பு போன வருடம் வரை! என்றாவது ஒருநாள் போவோம் என்று நினைத்துக்கூட பார்த்திராத ஒரு ஊருடன் திடீரென்று ஒரு உன்னதமான உறவு மலரும்போது என்றென்றும் நினைத்து மகிழும்படியான ஒரு இனிமையான தருணங்களாக நிலைத்துவிடுகிறது! போபாலுக்கு எல்லாம் போயிருக்கிறேன் என்பதால் எனக்கு இந்தி தெரியுமென்றா கேட்கிறீர்கள்? எனக்கு தெரிந்த இந்தியெல்லாம் "கயாமத் சே கயாமத் தக்", "தேசாப்", "கிலாடியோன் கா கிலாடி" மற்றும் " மே அமிதாப்பச்சன் போல் ரஹான்ஹூன்"!!! இதை விட்டால் தொலைக்காட்சி புண்ணியத்தில் &quo

அழுத கணங்களே உன்னதமானவை

இப்போ வந்துபோன ஆடியோட எனக்கு 32 வயசு முடிஞ்சதுங்க... "ஆடாம வந்தாலும் அதேதான்... அதுக்கு என்னா இப்போ..?"ன்னு கொரலு உடாதிங்க... யோசிச்சுப்பார்த்தா இந்த 32 வருச வாழ்க்கைல நினைவு தெரிஞ்ச நாள்ள இருந்து கெக்கே பிக்கேன்னு சிரித்து சிரித்தே 25 வருடங்களை ஓட்டியிருக்கிறேன்! சின்ன வயசுல அம்புலிமாமா, பாலமித்ரா, பூந்தளிர், கோகுலம்னு நல்ல புத்தகங்கள் படிச்சிருந்தாலும் முத்து, லயன் காமிக்ஸ்ல் வந்த ஸ்பைடரும் லக்கி லுக்கும் தான் நம்ப ஸ்பெஷல்! ஒரே காமிக்சை 10 தடவைக்கும் மேல் படித்துவிட்டு அந்த கதையை அப்படியே பள்ளியில் சககூட்டாளிகளுக்கு சிரிக்க சிரிக்க சொல்லிமுடிப்பதற்குத்தான் என்னுடைய மதிய சப்பாட்டுநேரம் சரியாக இருக்கும். வீட்டிலும் அதே கதைதான். அப்பா மட்டும் வீட்டில் இல்லையென்றால் என் அண்ணன் அக்காவோடு சேர்ந்துகொண்டால் வீடு தூள் பரக்கும். வகுப்பில் நடந்தவை, வாத்தியார் செய்தவை என்றுசொல்லி சிரித்து சிரித்து வயிறு வலிக்கும். எல்லாம் அப்பாவினுடைய புல்லட் சத்தம் கேட்கும்வரைதான். அவர் வீட்டுக்குள் நுழையும் போது வீடு அப்படியே சென்னை கன்னிமரா நூலகம் மாதிரி அமைதியாகி ஆளுக்கு ஒரு புத்தக