முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொங்கலைப்பற்றி ஒரு பொங்கல்!

பொங்கச்சொல்லி பிரகாசரும் சோழன் எம்.எல்.ஏவும் கேட்டுக்கொண்டதாலும் மேட்டரு கொசுவத்திதுறையின்கீழ் வருவதால் என்னால் வாயை அடக்கமுடியாதென்பதாலும் இங்கே! அப்பாவின் காவல்துறை வேலையாக தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு வருடாவருடம் பெட்டிதூக்கி கடைசியாக கோவையில் கூடாரம் அடித்திருந்தாலும் என் சொந்த ஊர் தருமபுரி மாரண்டாஹள்ளியை சுற்றியிருக்கும் பலகிராமங்கள். அதெப்படி பலகிராமங்கள் சொந்த ஊராக இருக்கமுடியும்? எங்க தாத்தாபாட்டி பெற்ற 13ல் 2 தவற தக்குன மீதி 11ல் ஒரே ஒரு பெண் எங்க அத்தை! 10 பயகள்ல எங்கப்பாருதான் கடைக்குட்டி. இந்த ஆலமரத்துல பலவிழுதுகள் பலதிசைகளில் வேர்பரப்பினால் நான் எந்த ஊரை சொந்த ஊருன்னு சொல்லிக்க? கடைக்குட்டிங்கற ஒரே தகுதியால் வயக்காட்டுக்கு களிதூக்கிக்கொண்டு வேலைக்கு போகாமல் கவருமெண்டு ஸ்கூலுக்கு அரிசிச்சோறு கட்டிக்கொண்டு படிக்கப்போய் வேலையாகி டவுனுக்கு வந்துவிட்டவர் அப்பா. அப்போதெல்லாம் தீவாளி ஃபேமசாகாமல் பொங்கபண்டிகை முன்நின்ற காலகட்டம். சிறுவயதில் பொங்கல் பண்டிகை எனக்கு எங்கள் கிராமங்களில் வாய்த்திருக்கிறது. பண்டிகை 3 நாட்கள் எப்படியும் நடக்கும். 7நாள், 10நாள் வகை பண்டிகையெல்லாம்

The Science of Stock Market Investment - செல்லமுத்து குப்புசாமி

நீங்கள் அந்தக்கால பதிவராக இருந்திருந்தால் செல்லமுத்து குப்புசாமியை ஷேர்மார்க்கெட் பற்றி புத்தகம் எழுதும் எழுத்தாளராக முதன்முதலில் அறிந்திருக்கமாட்டீர்கள். ( வரலாற்றை தேடினால் அவரின் கும்மாச்சுகதை ஒன்று மாட்டலாம்! ) இப்பொழுதும் ஒன்றும் தகவல்குறையில்லை. இரவல் காதலியின் எழுத்தாளர்தான் இழக்காதே எழுதியவரும்கூட. இதற்கு நடுவில் பிரபாகரன் மற்றும் எல்டிடிஈ பற்றியும் இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்! அவரது எழுத்தின் வீச்சு அப்படி. ஆனால் பாருங்கள் எனக்கு அவரை இன்னமும் வலைப்பதிவர் குப்ஸ்சாகத்தான் நெருக்கமாய் அறிவேன். அதை என் பெருமைன்னும் அவர் கெரகம்னும் வைத்துக்கொண்டாலும் எனக்கும் அவருக்கும் பாதகமில்லை. ஒன்று கவனித்திருக்கின்றீர்களா? எழுத்தாளர்கள் நல்ல வாசகர்களாக இருக்கிறார்கள். ஆனால் வலைப்பதிவர்கள் நல்ல வாசகர்களை பொறுக்கியெடுத்துவிடலாம். தமிழில் நாலுவரி டைப்படித்தால் அதைப்படிக்க நாலேபேர் இருப்பதை அறிகையில் புத்தி பத்திபத்தியாய் எழுதப்போய்விடுகிறது. கொஞ்சநாளில் அடேடே.. இப்பவர்ற புத்தகங்களுக்கு நம் நூறுபதிவுகளை எடுத்து புத்தகமாய்ப்போட்டால் எழுத்தாளர

மாதொருபாகனும் இணைய இந்துத்துவ எதிர்ப்பும்

சென்னையில் வேலை பார்த்த காலத்தில் எனக்கொரு அலுவலக நண்பர் இருந்தார். சென்னையிலேயே பிறந்து சென்னையிலேயே வளர்ந்தவர். பள்ளி கல்லூரி சுற்றுலாவுக்கு சிலவெளியூர்கள் சென்றுவந்ததோடு சரி. சொத்தங்களும் வேலூர். கல்லூரியும் சென்னையை ஒட்டி. பேசுவதெல்லாம் சென்னை மற்றும் அதன் உயர்வுகள் பற்றியே இருக்கும். அவர் பார்வையில் கோவை மதுரையில் இருந்து வேலைக்கு சென்னை வந்த நாங்களெல்லாம் ஏதோ பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்றே எண்ணம். எங்கள் வாழ்க்கைமுறைகள் எதுவும் அவருக்கு தெரியாது. அறிந்துகொள்ளும் ஆர்வமுமில்லை. பொள்ளாச்சி எனில் மசக்கவுண்டனுங்க வேட்டியும் பெண்கள் கண்டாங்கியும் கட்டிக்கொண்டு வாழ்பவர்கள் என்கிற சினிமா கொடுத்த சித்திரம் தவிர வேறு அறியாதவர். கூட வேலைபார்த்த நண்பரின் திருமணத்திற்கு என அனைவரும் ஈரோட்டுக்கு கிளம்பினோம். ஏற்காடு எக்ஸ்பிரஸ் சென்று சேரும்வரை அவருக்கு புது ஊரைப்பார்க்கும் ஆர்வம் தாளவில்லை. எங்கேயோ கேள்விப்பட்ட ஈரோடுபோய் திருச்சிவரு ஜோக்கையெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார். ரயில் நிலையத்தில் இறங்கி பஸ்ஸ்டாண்டு ஒட்டிய லாட்ஜில் அறையெடுத்து செட்டிலாகி மண்டபத்துக்கு போக ரெடியாகிக்கொண்டிருக்கும் ப