முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜிம்மியும் சில நிகழ்வுகளும்...


ஒவ்வொருமுறை உதைபட்டாலும்
ஜிம்மிதான் கழற்றுமென் காலுறையை
அதில் எனக்கொரு வரம்புமீறலும்
அதற்கொரு ஆத்மதிருப்தியும்

தளைகலற்ற அன்பின்
சிறந்த சான்றை
தெரியாதவைகளாகவே இருக்கின்றன
நாயில்லா வீடுகள்

ஞாயிறு வாங்கும் ஒருகிலோ கறியும்
ரெண்டுரூபாய் எலும்பும்
சரிசம குதூகலம்
எங்களுக்கும் அதற்கும்

உணவிற்கே அது
உண்மையாய் நடப்பினும்
நேர்மையுண்டு அதில்
நாம் அப்படியா என்ன?

சாதம் பற்றாத
கடைசி கல்யாணபந்திபோல
ஒரு குறையாகத்தான் இருக்கிறது
ஜிம்மிக்கொரு நிழற்படம் இல்லாததும்

அன்பு மறுதலிக்கப்பட
எப்பொழுதும் வாய்ப்பில்லை
அம்மாவிடமும் ஜிம்மியிடமும்
டேக் இட் பார் கிரான்டடுகள்

அனைவருக்கும் பார்த்துச்செய்ய
வீட்டுக்கொரு அம்மா
அம்மா மட்டும் பார்த்துக்கொள்ள
வீட்டுக்கொரு ஜிம்மி

அம்மாவும் ஜிம்மியும் ஒரேவகையில்
இருக்கும் வரை உதாசீனப்பட்டும்
போனபிறகு அங்கலாய்ப்பாய்
பேசப்பட்டும்

வண்டியில் மாட்டிய ஜிம்மி
கூழாய் போனபோது
கதறித்தீர்த்தார்...
அக்கா ஓடிப்போனபோது
"ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்"
என்றதோடு நின்ற அப்பா

இப்பொழுதும் போகிறது வாழ்க்கை
ஆளுக்கொரு அறையிலும்
அதில் டிவியும் ஃபோனுமாய்

வெட்கமாகத்தான் இருக்கிறது
ஜிம்மியைபற்றி கவிதையெழுதி
பெயர் வாங்கவும்

கருத்துகள்

  1. உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. உங்க கவிதை ஒவ்வொண்ணா படிச்சிக்கிட்டே வரேன். இன்னைக்கு தான் உங்க பதிவு படிக்கவே ஆரம்பிச்சுருக்கேன். எல்லாமே அருமையான பதிவுகள். ஜிம்மி கவிதை ரொம்பவே அருமை.

    //ஞாயிறு வாங்கும் ஒருகிலோ கறியும்
    ரெண்டுரூபாய் எலும்பும்
    சரிசம குதூகலம்..
    எங்களுக்கும் அதற்கும்..//

    இந்த வரிகளை ரொம்பவே ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. சூப்பர்.

    உங்கூட்டு ஜிம்மி மேரி எங்கூட்லயும் ஒரு மணிப்பய இருந்தான்.

    அன்பு காட்டுறதுல சில சமயம் தாயையும் மிஞ்சுவான்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு