முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ஒத்துமையின் உச்சக்கட்டமாக சட்டமே கிடைச்ச பின்னாடியும் ஃபினிசிங் சரியில்லப்பாங்கற மாதிரி எல்லாத்தையும் ஊத்தி மூடிட்டமே :( நடந்ததைக்கண்ட வெறுப்புல மீண்டும் மனம் சுனங்கியது தான் மிச்சம்.

இந்த நிகழ்வு சரியான தலைமையில்லாமல் தோற்றிருக்கலாம். உள்ளடி குழப்பங்களால் முடிவு சிதைந்திருக்கலாம். கடைசிக்கட்ட வன்முறை சம்பந்தமில்லாத ஒரு மக்களுக்கு திருப்பி விடப்பட்டிருக்கலாம். ஆனால் கூடிய கூட்டத்தின் அந்த உணர்வு உண்மை. அந்த உணர்வு இன்றைக்கு போஸ்ட்மார்டம் அனாலிசிஸ் ஆக “அதான் அன்னைக்கே சொன்னமே” கோஷ்டிகளாலும் “அரசியல் தெரியாத கத்துக்குட்டிக” எனும் வாய்ப்புக் கிடைத்தற்காக அரசியல் வகுப்பெடுக்கும் ஆட்களாலும், ”மொதல்ல தமிழை ஒழுங்கா எழுதுங்கடே”ன்னு சிரிச்ச குபீர் தமிழ்வாத்தியார்களாலும், வீதிக்கு வாங்க மக்களேன்னு காலங்காலமாய் அநியாயத்தை எதிர்த்த பத்தி எழுத்தாளர்கள் இதென்ன கூத்துன்னு தாம் வழக்கமாய் செய்யும் எதிர்நிலை கட்டுரைகளால் அடித்ததும், ஏன்... மெரினால ஆணுறைகள் வழக்கத்தைவிட கூடுதல் என எண்ணி அறிவித்த ஆராய்ச்சி மன அரசியல் அல்லக்கைகளை கூட ஆல்வேஸ் மாற்றுக்கருத்து மகான்கள் என்கிற அளவில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அடித்தட்டு மக்களின் குரலாக ஒலித்த பல இணைய புரட்சியாளர்கள் ஆரம்பத்தில் இருந்து இந்த நிகழ்வை மிடில்க்ளாஸ் கொண்டாட்ட காமெடின்னு சுருக்கியதுதான் மிக வருத்தம். அந்த உணர்வினை கொச்சைப்படுத்துவதுதான் ஆராத்துயரம் தரும் செயல் :(

போகட்டும் மக்களே. மூனுநாளைக்கு மேல ஒன்னா சேர்ந்திருக்க துப்பில்லாத தமிழன் ஏழுநாளைக்கு ஒன்னா நின்னதே சாதனை. அதுவரை மகிழ்ச்சி.

வேற ஊர்க்காரன் கதையொன்னு... கேட்டா நம்ப ஏழுநாள் கதைமாதிரியே இருக்கும். ஆனா அங்க 93 நாள் ஏகப்பட்ட உயிரிழப்போட நடந்து முடிஞ்ச நிகழ்வு.

உக்ரைன்னு ஒரு நாடு. 1991லதான் விடுதலை அடைஞ்சது USSRல் இருந்து. அந்தக்காலத்துல ஜிவில வந்த பெரஸ்த்ராய்கா கட்டுரைகள் நியாபகம் வந்தால் நல்லது. கூட்டு ரஷ்யா சிதறிய பிறகும் அரசியல் குழப்பங்களிலேயே இருந்த நாடு. அங்க மக்கள் 93 நாட்கள் ஒத்துமையா இருந்து ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்காங்க. 2013ல் அதன் அதிபர் தன்னிச்சையாக ஒரு முடிவை எடுக்கறதா செய்தி பரவுது. அது கிழக்கால இருக்கற ரஷ்யாவுடன் மீண்டும் சேர்ந்துக்கறது. மக்களுக்கு மேற்கால இருக்கற யூரோபியன் யூனியனுடன் கூட்டு வைச்சுக்கனும்னு ஆசை. திரும்பவும் புடினின் ரஷ்யாகூட இயைந்தால் வருங்காலம் மொத்தமாக காணாமப் போயிரும்னு பயம்.

அதிபரை எதிர்த்து குரல் கொடுக்கலாம்னு ஒரு நபர் பேஸ்புக்கில் தலைநகரின் மையத்தில் இருக்கும் மைதான் எனும் இடத்தில் கூடச்சொல்லி மெசேஜ் விடறார். கூடச்சொல்லிய தினத்தில் முதலில் 200 பேர் இருக்கிறார்கள். அடடா இவ்வளவுதானான்னு ஏமாத்தமடைய நேரமாக ஆக மக்கள் எல்லா வழிகளிலும் வந்து சேர ஆரம்பிக்கிறார்கள் ஆயிரம் பத்தாயிரமாகி கூடும் மக்களின் எண்ணிக்கை உயந்துகொண்டே போகிறது. எல்லோருக்கும் ஒரே குரல் ரஷ்யாவோடு சேராதே ஐயோப்பிய யூனியனோடு இணை என்று. இந்த கூட்டம் 9 நாட்களுக்கு கலையவேயில்லை. வெளியிலோ பனிப்பொழிவுடன் கூடிய கடுங்குளிர். மக்கள் அரசியல்வாதிகளின் ஆதரவை நிராகரிக்கிறார்கள். இந்த போராட்டத்தில் எந்த அரசியல் மத மொழி பிரிவுகளுக்கும் இடமில்லை என அறிவிக்கிறார்கள். அவர்களுக்குள்ளாகவே குழுக்கள் அமைத்து உணவு, தகவல் தொடர்பு, போக்குவரத்து என பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள். உக்ரைனின் கலாச்சார கலைகளை நிகழ்த்தி ஆட்டம் பாட்டமாக கொட்டும் பனியில் ஒரு குரலாக நிற்கிறார்கள். கொண்டாட்டமான போராட்டம். இதுவரை உலகம் காணாத ஒரு போராட்ட வடிவம். மக்கள் கூடுகையில் கிடைக்கும் எதிர்மறை அழிவு சக்திக்கு மிகமாறானதாக பொங்கிவழியும் நேர்மறை எண்ணங்கள். யூதர், கிருத்துவர், முஸ்லிம் என பல மதங்களை மொழிகளை கொண்ட உக்ரைன் மக்கள். ஒரே இடத்தில் ஒரு குரலில் ஒரே கோரிக்கைக்காக. அனைவரையும் இணைத்தது இணையம்.


ஒன்பதாவது நாளில் அதிபர் அவரது அஜண்டாவுக்காக எடுத்த ரஷ்யாவோடு சேரும் முடிவை கூட்டம் அறியவருகிறது. மக்களின் எதிர்ப்புக்குரல் வலுக்கிறது. இந்தக் கூட்டத்தை கலைக்கச்செய்ய அரசு போலிசை களமிருக்கிறது. இதுவரைக்கும் கூடநின்று வேடிக்கை பார்த்த அதே போலிஸ் கூட்டம். ப்ளாஸ்டிக் தடிகளுக்கு பதிலாக இரும்புக்கழிகள். கூட்டத்தில் புகுந்து கிடைத்த மக்களையெல்லாம் சவட்டியெடுக்கிறது. இரும்பில் அடிவாங்கி மண்டை உடைந்து கண்கள் பிதுங்கி முகமெல்லாம் ரத்தமாக மக்கள். பெண்கள், வயதானவர், குழந்தைகள் என்கிற வித்தியாசமெல்லாம் இல்லை. குழம்பிய மக்களின் ஓலக்குரல் “உங்களுக்கும் சேர்த்துத்தானே நம் நாட்டுக்காக போராடறோம். ஏன் அடிக்கிறீர்கள்?” சாலைகளெல்லாம் ரத்தம்.

கூட்டம் பின்வாங்கவில்லை. மருத்துவர்களும் ரெட்க்ராசும் ஓய்வுபெற்ற ராணுவ ஆட்களும் இதை எதிர்கொள்ள களமிறங்குகிறார்கள். நாளாக ஆக போராட்டத்துக்கு ஆதரவு நாட்டின் எல்லாத்தரப்பில் இருந்து வலுத்துக்கொண்டே போகிறது. எதிர்க்கட்சிகளின் குரல்கள் ஜஸ்ட் அரசியல் பஞ்சாயத்து என நிராகரிக்கப்படுகின்றன. மைதானின் பக்கத்தில் இருக்கும் கட்டிடத்தை மருத்துவ முகாமாக மாற்றுகிறார்கள். பார்லிமெண்ட் செல்லும் வழியை அடைத்து தடையேற்படுத்துகிறார்கள். கற்களால் இருபுறமும் தாக்கிக்கொள்கிறார்கள். பாட்டிலில் பெட்ரோல் குண்டுகள் செய்து வீசுகிறார்கள். அரசுதரப்பில் இருந்து போலீசுடன் சேர்ந்து நிற்க கூலிப்படையை இறக்குகிறது. தலைநகர் ரத்தக்களறி. அடிபட்ட பொதுமக்கள் மருத்துவ உதவி பெறும் கட்டிடத்துக்கு காவல்துறை தீவைக்கிறது. உள்ளிருக்கும் மக்கள் கருகி சாகிறார்கள். கைக்குக் கிடைத்த தனியாக மாட்டிய போலிஸ்களை பொதுமக்கள் புரட்டியெடுக்கிறார்கள். துப்பாக்கியில் ரப்பர் தோட்டாக்களுக்கு பதிலாக நிஜதோட்டாக்கள் அளிக்கப்படுகிறது. பொதுமக்களை சுட்டுத்தள்ளும் போலிஸ்!

93 வது நாளின் கடைசிபோராட்டம். இறந்த மக்களை அடக்கம் செய்ய எடுத்துச்செல்வதில் இருந்து காயப்பட்டவர்களை உயிரைப்பணயம் வைத்து இரத்தம் ஒழுக இழுத்துவருவது வரை எல்லாமும் மக்களால் அவர்களுக்குள் அமைத்துக்கொண்ட குழுக்களால். மக்களின் ”இங்கு வந்திருப்பதே சாகத் தயாராகத்தான் எனவே உயிர்பயமில்லை” எனும் அறிவிப்பு. உண்மையான உணர்வுகள் கொடுக்கும் புரிதல். இந்த கடைசிக்கட்ட துப்பாக்கிச்சூட்டின் இரவில் எதிர்க்கட்சித்தலைவர் போராட்டத்தின் வெற்றியாக வரும் டிசம்பரில் தேர்தல் என அறிவிக்கிறார். இந்த ஏமாற்றை ஏற்காத மக்கள் கூச்சலிடுகிறார்கள். ஒரு பொதுஜன நபர் மேடையேறி மைக்கைப்பிடுங்கி நாளை காலை 10மணிக்குள் அதிபர் ராஜினாமா அதுமட்டுமே கோரிக்கை என கூக்குரல் இடுகிறார். அன்றைய இரவு அதிபர் ரஷ்யாவுக்குள் தஞ்சம் புக ஹெலிகாப்டரில் தப்பியோடுகிறார். அடுத்தநாள் உக்ரைனின் அதிபரின் பதவியிழப்பு அறிவிக்கப்படுகிறது. மக்களின் ஐரோப்பிய யூனியனில் சேரும் முடிவு பார்லிமெண்டில் ஏகமனதாக ஏற்கப்படுகிறது. தீயினால் கருகி சிதிலடமைந்திருக்கும் மைதானில் போராடிய மக்கள் ஒருவரை ஒருவர் மகிழ்வில் வாழ்த்திக்கொள்கிறார்கள்.

இந்த 93 நாட்கள் போராட்டத்தில் 125 பொதுமக்கள் இறப்பு. 65 பேரை காணவில்லை. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம். இந்த மக்கள் போராட்டம் ரொம்ப காலத்துக்கு முன்னாடியெல்லாம் நடக்கவில்லை. ஜஸ்ட் 3 வருடங்களுக்கு முன்! நாம் இணையத்தில் உழண்டுகொண்டிருக்கும் இதே காலகட்டத்தில் தான். எகித்தைப்போலவேதான்.

* நடந்த நிகழ்வுகள் அனைத்தும் செய்தியாளர்களின் விடியோவிலும் பொதுமக்களின் வீடியோவிலும் பதிவு செய்ததை கோர்த்து Netflix Original documentary "Winter on fire" என 2015ல் வெளியிட்டது. இதில் இருக்கும் அனைத்துக்காட்சிகளும் களத்தில் உண்மையில் நிகழ்ந்தவை. நிஜமக்கள்!

* இது ஒரு சார்பானது எனவும் பொதுமக்களின் அராஜகத்தை சரியான முறையில் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உண்டு. உக்ரைனில் போர் இந்த நிகழ்வுக்கு பிறகும் ஓயவில்லை. ரஷ்ய ஆதரவு படைக்கும் உக்ரைனின் அரசுக்கும் இடையே இன்னமும் நடைபெறும் உள்நாட்டு கலவரத்தில் 2015 வரை 6000 மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் :(

டாகுமெண்டரியின் ட்ரைலரை இணைத்துள்ளேன். முழுபடமும் இந்த நிகழ்வை ஆதரிக்கும் எதிர்க்கும் மாற்றுக்கருத்து கட்டுரைகளும் இணையம் முழுக்க உண்டு. தேடிக்கண்டடையுங்கள். நீங்கள் எந்த சார்புநிலையில் இருந்தாலும் உலகில் இன்றைக்கும் மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் நிஜ உலகில் நடக்கிறது என்கிற உண்மையை உணர உதவும்.

நான் அரசியல் கட்டுரையாளன் இல்லை. இருபக்க ஆழ்ந்த அரசியல் ஆய்வுகளையும் புரிந்துகொள்ளும் அளவுக்கெல்லாம் எனக்கு அறிவும் பத்தாது. ஆனால் ஒரு மாற்றம் வேண்டும் என்கிற ஒருமித்த குரலில் சேர்ந்த எல்லாத்தரப்பு மக்களுடைய உணர்வு போலித்தனமானதில்லை என ஆழமாக நம்புகிறேன். தமிழர்களின் 7 நாள் போராட்ட உணர்வு உக்ரைனின் 93 நாள் புரட்சிக்கு கொஞ்சமும் குறைவுபட்டதில்லை என்பது என் உறுதியான எண்ணம்.

வெற்றி தோல்விகளுக்கு அப்பால் அந்த உணர்வுகளை தத்தம் சார்புநிலைக்காகவும் அரசியல் விளையாட்டுகளுக்காகவும் கேவலப்படுத்தி பேசிக்கொள்வது உலகின் ஏனையோர் முன் நம்மைநாமே சிறுமைப்படுத்திக்கொள்ளும் செயல் :(

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு