முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டயட்டு அட்ராசிடிஸ்!


அடல்ட் வாழ்வில் உடம்புக்கு திருப்தியா செய்யவேண்டியது உணவும் உடலுறவும்.


இதில் இரண்டாவது ஏற்கனவே நம்ப நாட்டுல கடும் வறட்சில ஓடிக்கிட்டு இருக்கு. கிடைச்சதையெல்லாம் இல்வாழ்க்கை சமூகசூழல் ஒழுக்கவிதி பொருளாதாரம் சாதிமத கட்டுப்பாடுகள்னு ஆயிரத்தெட்டு கொடைச்சல்ல கிடைச்சும் கிடைக்காத குற்றவுணர்வுல பொதுப்புத்தி ( அதாங்... பெரும்பான்மை )வாழ்க்கைய ஏற்கனவே மருகலில் ஓட்டிக்கிட்டு இருக்கோம்.

இதுல முதலாவது உணவையும் குற்றவுணர்ச்சி தூண்டப்பட்டேதான் செஞ்சு அழியனுமா? சாப்பாட்டை சந்தோசமா அனுபவிச்சு சாப்பிடறதுல அப்படி என்னய்யா குற்றம்? வீகன் பேலியோ ஆர்கானிக்குன்னு விதவிதமா கெளப்பிக்கெளப்பி சும்மா இருக்கறவங்களை மருகிமருகி சாப்பிடவைச்சு அய்யோ முடியலயே தப்புசெய்யறோமோன்னு குற்றவுணர்ச்சிக்கு ஆட்பட்டு தவிக்கனுமாங்கறேன்?

நம்முடைய மனோபாவத்துக்கு ( Attitude ) பொருந்தாத தேவையில்லாத அவசியமில்லாத செயல்களை எல்லோரும் செய்யறாங்களேன்னு கடமையாய் செய்வது பின்பு செய்ய இயலாமல் போவது குற்றவுணர்வை மட்டுமே கொடுக்கும். ஸ்போர்ட்ஸ்மேனாக இருப்பதும் குறிப்பிட்ட டயட்டை கட்டுக்கோப்பாய் செய்வதும் அவரவர் தேர்வு. சுயதேர்வாக இருந்தால் மட்டுமே கிடைக்கும் பலன்கள் மகிழ்சியை அளிக்கும். இல்லைன்னா இருக்கறதையும் அழிக்கும்.


பருமனாக இருப்பது என் உடல்வாகு. உடலை பிட்டாக வைத்திருப்பது விருப்பம் எனில் அதற்கான சரியான முயற்சிகளே நன்மை தரும். ஒருவாரத்தில் 10கிலோ குறைப்போம், குகைமனுசனாட்டம் சாப்புடுவோம் இலைதழைய தின்னு இடுப்பை குமிட்டி அடுப்பாக்குவோங்கறதெல்லாம் நோவாம நோம்பிகும்பிட நினைக்கும் விருந்தும் மருந்தும் மூனுநாள் கேட்டகிரி. அதை சரியாகப்புரிந்துகொண்டு செய்பவருக்கு பலன் கிடைத்துவிட்டுப்போகட்டும். கோடிவீட்டு கோமலா செய்யறா எதுத்தூட்டு இஞ்சினியரு ஜிஎம் டையட்டறாரு மேனேஜர் ஆயிர்வேதிக்ல பாஞ்சேநாள்ள 20கிலோ கரைச்சாருன்னெல்லாம் கதகேட்டு அப்டியே செய்யப்போகி உடல்நலம் மனநலம் ரெண்டும் கெடுத்துக்காதிங்க.

வெற்றிக்கு குறுக்குவழி கிடையாது. அதேபோல் இன்றைய அவசர பொருளாதாரவழி வாழ்வியலில் ஓசிச்சோறு என்பது இல்லை எல்லாத்துக்கும் விலையுண்டு. நல்லதோ கெட்டதோ அதை மக்களிடம் விற்கவைக்கும் எளிய வியாபார தந்திரம் குற்றவுணர்ச்சியை தூண்டிவிடுதல்.


கருப்பா இருந்தா மாப்ள வேலை கிடைக்காது அந்த பீக்கீரீம் அப்பிக்கிட்டா ஒடனே கிடைக்கும், மண்டைல முடியில்லன்னா வாழ்வே போச்சு திங்க வாயிந்தொறக்காது குஞ்சுல மூச்சா பிரியாது அகவே அமேசான் காட்டில உம்ம மண்டைக்குன்னே ஆர்டர் செஞ்சு எடுத்தாந்த மருந்து, குண்டா இருந்தா இல்வாழ்க்கை உட்பட மொத்தவாழ்க்கையே நாசமாகிரும்னு பயமுறுத்தற விளம்பரங்கமேல மொதல்ல காறித்துப்புங்க. நம் உடல் பற்றி நம்மை நாமே கூனிக்குறுகச்செய்யும் எந்த கேடுகெட்ட வியாபாரதந்திரங்களுக்கும் அனுமதி அளிக்கல்கூடாது. எர்வாமாட்டின்ல முடிவந்துதான் அந்த முடியழகை பார்த்துத்தான் ஒரு பொண்ணு கட்டிக்குவான்னா அப்படியொரு மயிருகல்யாணம் எத்தனைநாளைக்கு நிலைக்கும்? நாளைக்கு குர்வாமாட்டின்ல இன்னும் நாளடி அதிகம் முளைக்கும்னா ஆளை மாத்திக்கனுமா? என் உடல் என் அளவு என் நிறம் என் மண்டை இதுல மசுரில்லன்னா மசுரே போச்சுன்னு இருக்கவானாமா? பத்தாயிரம் கட்டி யோகா போறேங்கறது நாப்பதாயிரம் கட்டி டிரெல்மில் வாங்கி துணிகாயப்போடறது குகைமனுசனாவறேன்னுட்டு வவுத்தை நாக்கை காயப்போட்டு வெம்பறது எல்லாம் ஏன் சொந்தக்காசுல சூனியங்கறேன்?

நமக்கு திருப்திதரும் வாழ்க்கைமுறைக்கு சிறப்புசேர்க்கும் அம்சங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மேம்படுவோம். பேலியோவின் நன்மை நம் சர்க்கரைவியாதிக்கு நல்லதெனில் கார்போஹைறேட் அளவைக்குறைத்து காய்கறிகளை டபுளாக்குங்கள். அவ்வளவுதான் நான் எடுத்துக்கொள்ளவேண்டியது. அதைவிட்டு தடால்னு வாங்கய்யா எல்லாரும் குகைக்கு போவோம்னுட்டு இலைதலையும் கறியுமா ரெண்டுவாரம் தின்னு முடியாம பம்பிப்பம்பி இட்லிக்கு வரனுமாங்கறேன்? என் உணவு என் உரிமை. அதுல நீயென்ன என் குற்றவுணர்வைக்கெளப்பி கொழப்பறது? உம்முடைய ஆட்டிடூட் பேலியோவெனில் செஞ்சு சந்தோசமா இருங்கய்யா. ஆனால் இந்த தகுதி அடுத்தவங்களை தப்புத்தப்பா வாழறங்கன்னு சொல்லும் தகுதியா மாறிடக்கூடாதுங்கறேன். ருசியே வாழ்வல்ல. "ருசி"யும் வாழ்வு.


புடிச்சதை செஞ்சு சாப்டு மகிழ்வாக இருப்பம்யா. உணவு என்பது கலாச்சாரம் பழக்கம் மற்றும் வாழ்வுமுறை. அதுல வியாபார அரசியலெல்ல நுழைச்சு அடிபடாதிங்க.


உணவாயினும் செய்யும் செயலாயினும் நமக்கு பிடிச்சதை பிடித்தால் மட்டுமே செய்வோம். அடுத்தவரை ஒப்புநோக்கி குற்றவுணர்வடையாமல் நம் எல்லை அறிந்து சுயம் தெளிந்து மகிழ்வாய் வாழ்வோம். சாப்பாடும் சம்பாத்தியமும் நாம் வாழ்வதற்கு இருக்கனும். நம் "வாழ்வு" எதுவென்ற தெளிவு நம்மிடமே இருக்கட்டும். அதை விளம்பர உலகுக்கு போலி வாழ்க்கைக்கு அடுத்தவர் விழைவுக்கு அடகுவைச்சுறாம உயிர்த்தலே நம் முன் இருக்கும் சவால்.


ஆகவே எதுக்கும் மடங்கீறாதீக! நாளைக்கு ஞாயிற்றுகெழம கோழியடிச்சு பிரியாணி போடறோம். ஒரு கட்டு கட்டிட்டு குடும்பத்தோட டிவில மொக்கபடம் பார்க்கறோம் :)smile உணர்ச்சிலை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு