முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Aftershock - 2010



"மாஸ்டர் டீச்மி குங்க்பூ"

"நோ மை சன்!"

"மாஸ்டர், ப்ளீஸ் டீச்மீ குங்பூ!!

"நோமைசன்... நோ..."

"வை மாஸ்டர் வை???"

"பிகாஸ் ஐ டோண்ட் நோ குங்பூ!!"


இந்தக்காமெடிக்கு தலைகீழா டைவடிச்சு சிரிக்கற அளவுக்குத்தான் எனக்கெல்லாம் சீனப்படங்களை பத்தி தெரியும். ஏன்னா பார்த்துவைச்ச படங்க எல்லாம் எண்டர்த டிராகன்ல இருந்து க்ரோச்சிங் டைகர் ஜெட்லி ஒன் தானே! ஜாக்கிபடங்கள் ஒருவகைன்னா இந்த பழங்கால அரசர் துரோகம் வெண்தாடி குரு மொட்டைல புள்ளிவைச்ச சிஷ்யனுங்க அப்பறம் பறந்துபறந்து அடிச்சும் வேலைக்காவாம கடைசில துணிய கத்தியாக்கி ஏமாந்த ஒருநொடில சொருவி வில்லனைக்கொல்லும் யாஹூசூ படங்கதானே.


அதனாலதான் ஆரம்பத்துல இது சீனப்படம்னு தெரிஞ்சதும் ஒரு அசூயையா பார்க்க ஆரம்பிச்சோம். ச்சோம்னா வீட்டுல பொண்டுபுள்ளைங்க எல்லாமும். பார்த்துமுடிக்கையில் எவ்வளவு மனக்கிளர்ச்சி மற்றும் மனஅமைதி ஆனோம்னு சுருக்க சொல்லிமுடியாது! சீனப்படங்கள் பற்றிய தவறான மாயையை சுத்தமா தொடைச்செடுத்தது நிச்சயம் பலன் தான்.


கதையை சொல்வதில் ஒன்னும் பாதகமில்லை. ஆண் பெண் குழந்தைகள் இருவர் என குடும்பமாக வாழும் தம்பதியர் ஒரு பெரும் நிலநடுக்கத்தில் சிதருண்டு போகின்றனர். கணவனைப்பறொகொடுத்த அந்த தாய்க்கு இடிபாடுகளைத்தோண்டி மக்களை தேடியெடுக்கும் நேரத்தில் ஒரு காங்கிரீட் தூணின் இருபக்கங்களில் அழுத்தப்பட்டிருக்கும் மகன் அல்லது மகள் இருவரில் ஒருவரை மட்டுமே விரைவாக முடிவெடுத்தால் காப்பாற்றமுடி நிர்ப்பந்தம். ஏற்கனவே கணவனை இழந்து ஊரே அழிவின் பிடியில் இருக்கும் நிலையில் அவசரத்தில் அவள் மகனை காப்பாற்றும் முடிவை எடுக்கிறாள். காங்க்ரீட்டுக்கு அடியில் மாட்டிக்கிடக்கும் மகள் இதைக்கேட்டுவிடுகிறாள். மீட்புக்குழுவின் கணிப்புத்தவறாக அவள் பாதிக்கப்படாமல் பிழைத்துக்கொள்கிறாள். மீட்கப்பட்ட மகனுடன் பாதி உயிராக தாய் ஒருபுறம் செல்ல பிழைத்துக்கொண்ட மகள் வேறொருபுறம் அழைக்கிழிக்கப்பட்டு பின்பு ஒரு தம்பதியரால் தத்தெடுக்கப்படுகிறாள்.


இந்த மூன்றுபேரும் அடுத்த முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு எப்படி சேர்கிறார்கள் என்பதுதான் கதை. இதன்பிறகாக நடக்கும் நிகழ்வுகள் சம்பவங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு உணர்வுபூர்வமானவை. மகளை காவுகொடுத்துவிட்டேனே என மருகிமருகி வாழும் தாய் ஒருபக்கம். அம்மாவே தன்னை கைவிட்டு தம்பியை மட்டும் காப்பாற்றிசென்றாளே என அபலையுணர்வில் வாழ்வை குறுக்கி குறுகிக்கொள்ளும் மகள் ஒருபுறம். இந்த ஊசலாட்டத்துக்குள் நிச்சயம் நாலைந்துமுறையாவது பொங்கிவரும் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கதறிவிட்டேன். விட்டோம். கண்களில் நீர் வழிந்தோட உணர்வுச்சுழியில் தத்தளித்தபடி ஒரு சீனை சொல்லியே ஆகமும்னுதான் இந்த பத்தி. அந்த டைரக்டரை நேரில் கண்டால் நிச்சயம் காலில் விழுந்துவிடுவேன். இழப்பை உணர்வதை நம் கட்டுக்குமீறி வெளிப்படுத்துகையில் எந்தவித புறகாரணிகளும் கருத்தில் கொள்ளாமல் காட்டாற்றுவெள்ளமென அதை கொட்டித்தீர்க்கும் வாய்ப்பு எத்தனைமுறை அமையும்? எதற்கு இந்த பில்டப்பு? நேராக்கேக்கறேன். கடைசியா எப்ப மனசுவிட்டு அழுதீங்கன்னு நினைவிருக்கா?


கனடாவில் மருத்துவ செவிலியாக கணவன் குழந்தைகளோடு வாழ்ந்துவரும் அந்தப்பெண் முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்து மீட்புக்குழுவில் சேர்ந்து உதவிபுரிய விரைகிறாள். பலவருடங்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு நிகழ்வில் தான் தன் தாயால் கைவிடப்பட்ட ஆறாக்கோபம் இன்னமும் இருக்கிறது. அந்த குழுவில் ஒருவன் முன்னர் நடந்த பழங்கதையை விளக்கிக்கொண்டிருக்கிறான். மெல்ல விசாரித்தறிகையில் அது ஊனமான அவன் தம்பி. அவளால் நம்ப முடியவில்லை. ஆனாலும் அவன்மேல் பெரிய ஒட்டுதல் வரவில்லை. அவனோ காணாமல்போன அக்கா கிடைத்ததில் உருகிப்போய் அவளை தொலைதூரத்தில் இருக்கும் அம்மா வீட்டுக்கு பிடிவாதமாக அழைத்துச்செல்கிறான். பிடிப்பின்றி ஆறாக்கோவத்தில் அவள். அந்த ஒரு சீன் முடிகையில் நெஞ்சைப்பிசைந்துவிட்ட வலியில் மனம்கரைந்த அழுகை.


இத்தனை வருடங்கள் கழித்து பார்க்கும் அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்கிற பதைப்பு நமக்கு.


அம்மா வீட்டிற்கு வெளியே பாத்திரங்கள் துலக்கிக்கொண்டிருக்கிறாள். இவள் தம்பியோடு தயங்கித்தயங்கி வர அம்மாவோ பார்வையை மாற்றாமல் உள்ளே சென்று அமரும்படி வேண்டிக்கொள்கிறார். வீட்டினுள் சென்ற பெண் சுவறில் தன் சிறுவயது புகைப்படத்தை பார்க்கிறாள். அதன்முன் ஒரு நீர் நிரம்பிய ஒரு சிறு பாத்திரத்தில் தக்காளிகள். இது அவள் சிறியவளாக இருக்கும்பொழுது சமையலுக்கு வைத்திருக்கும் தக்காளியை ஆசையாகத்தின்ன தூக்கிக்கொண்டு ஓடும் தினப்படி செயலை நினைவுபடுத்துகிறது. பின்னாலிருந்து அம்மாவின் குரல். உன்னை பறிகொடுத்தநாளில் இருந்து தவறாமல் உன் நினைவாய் தினமும் உன் படத்தின்முன் தக்காளிகளை வைப்பதுவழக்கம் என. மகளுக்குள் சட்டென எதுவோ ஒன்று உடைகிறது. அம்மாவிம் குற்றவுணர்வை இதுவரையிலான அலைக்கழிப்பை ஒரு நிமிடத்தில் புரிந்துகொள்கிறாள். இதுவரை கரையவிடாமல் ஊதியூதி வளர்த்த கோவக்கணலும் நாளும் மறுகிமறுகி வளர்த்துவந்த குற்றவுணர்வும் இருவருக்கும் ஒரு நிமிடத்தில் உடைந்து நொறுங்குகிறது.


எவ்வளவு எளிய சீன். எந்தவித ஆரவார தம்பட்ட நடிப்பும் இன்றி மிக எளிய வசனங்களால் உடல்மொழியால் அழியாக்காட்சி ஆகிவிட்டது. நடிப்பு என்பது தோடா நாம் எப்படி தெறமையா நடிக்கறேன்னு நொடிக்குநொடி பார்வையாளனுக்கு காட்டிக்கொண்டே இருப்பதல்ல. எந்த நொடியில் அந்த நடிகர் காணாமல்போய் அந்த கதாபாத்திரம் நம்மை நம்மையறியாமல் அவர்கள் திரைக்குள்காட்டும் வாழ்க்கைக்குள் இழுத்துக்கொள்வது. இந்த ஒரு சீன் போதும். இனி ஜென்மத்துக்கும் சீனாப்படம்னா சடையனுங்க காத்துல கத்திக்கிட்டு சண்டைபோடற படம்னு சொல்லமாட்டேன்.


நானெல்லாம் சும்மா சிக்ப்ளிக்ஸ்குக்கே க்ளைமாக்ஸ்ல கண்ணுல தண்ணி வச்சுக்கறவந்தான். இந்த படத்தின் இயக்குனருகூட சீனாவின் சேரனாக இருக்கக்கூடும். ஆனால் உன்னதம் என்கிறவகையில் இந்தக்காட்சியை நம்பாளு யாரால செஞ்சிருக்க முடியும் யோசிச்சதுல அது ராதிகாவா ஊர்வசியான்னு இன்னமும் தெளிவா சொல்ல ஏலலை. எளியகாட்சிகளை எளிமைகெடாமல் செய்துகாட்டத்தான் இமாலயதிறமை இயல்பாய் தேவைப்படுகிறது.


முழுப்படம் யூடியூப்லயே நல்ல குவாலிடில இருக்கு. நீங்க சேரனின் தவமாய்த்தவமிருந்து படத்தை உணர்ந்துபார்த்தவரெனில் இப்படத்தை ஒருமுறை பார்த்து பொம்பள ராஜ்கிரனின் உணர்வுக்கடத்தல்களை அனுபவியுங்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு