முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ப்ரே பண்ணுவேன்! நானும் ப்ரே பண்ணுவேன்!!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவின் ப்ரேயர் சாங் கேட்டேன்!

லவ் பண்ணி விட்டுட்டு போன பெண்ணை வாழ்த்தி ப்ரே பண்ணனுமாம்ல ப்ரே! ஆண்களின் காதல் தோல்வியின் வலி அவ்வளவு எளிதில் கடந்துவரக் கூடியதா என்ன? அப்பறம் இவ்வளவு நாள் வசந்தமாளிகை சிவாஜி ரத்தம் கக்கியதற்கும், நெஞ்சில் ஓர் ஆலயம் கல்யாண்குமார் உயிரையே விட்டதுக்கும், வைதேகி காத்திருந்தாள் விஜயகாந்த் கோவில் மண்டபத்துல ஊமையாகி குடியேறியதற்கும், மூன்றாம் பிறை கமல் அடிவாங்கி ப்ளாட்பாரம் முழுக்க உருண்டத்துக்கும், மைக் மோகன் படத்துக்கு படம் பன்னு சாங்ஸ்சா பாடித் தள்ளினதுக்கும், காதலிக்கு கல்யாணமே செய்துவைக்கும் பூவே உனக்காக விஜய்யின் தியாகத்துக்கும், சுப்ரமணியபுரம் ஜெய் குத்து வாங்கி செத்ததுக்கும் அர்த்தமே இல்லையா என்ன?!

உண்மையில் சொல்லப்போனால் இப்படி தன்னையும் வருத்திக்கொண்டு வாழ்வையும் கெடுத்துக்கிட்டு எல்லோரையும் சிரமப்படுத்தறதுக்கு பதிலா இப்படி வெகு இலகுவாக இந்த வலியை கடந்து வருவது சாலச்சிறந்ததுன்னு தோணுது. எப்படியும் பின்னாடி எவளையாவது கண்ணாலம் கட்டி புள்ள குட்டியோட சந்தோசமாத்தான் இருக்கப் போறோம். இந்த ஃபீலிங்ஸ் எல்லாம் பின்னாடி நமக்கே நமக்குன்னு கமுக்கமா சிரிச்சுக்கற தமாசாத்தான் ஆகப்போகுது.

இதாச்சும் அவனவன் உணர்வுகள் அவனவன் அளவில். ஆனா ஒருதலைக் காதலி முகத்துல ஆசிட் வீசறதும், நமக்கு கிடைக்காதவ வேற எவனுக்கும் கிடைக்கக் கூடாதுன்னு கழுத்தை அறுத்து கொலை செய்யறதும், அவ எங்கனையும் வாழ்ந்துறக் கூடாதுன்னு அந்தரங்கத்தை எல்லாம் வலைல ஏத்தறதும்னு வன்மமும் பழிவாங்கலுமாக நடந்து கொண்டிருக்கும் சமூகவியாதிகளை அறவே ஒழித்துக் கட்டவாவது இப்படி காதல் தோல்வியை ஜஸ்ட் லைக் தட் தட்டி விட்டுட்டு ஒரு வித செல்லக் கோபமும், கால் இடி எரிச்சலும், ப்ரெண்ட்லி பொறாமையும் கொண்டு “உங்கப்பா பேண்ட்டு டர்ர்ர்ரு...”ங்கற மாதிரியான சின்னப்பசங்க சண்டையின் பஞ்சாயத்து தீர்ப்புகளாக முடித்துக் கொள்வது உண்மையில் அருமையா இருக்கு!பாடல் முழுக்க ஒரு சின்ன குழந்தைத்தனத்தின் வீம்பு விரவியிருக்கும் இந்த ப்ரேயர் பாட்டை மனதார வரவேற்கிறேன்.

ஆகவே,

உங்கப்பா வெஸ்பா உன் காலேஜ் கேட்டில் பஞ்சராகனும்!

வெள்ளரி ஃபேசியலுக்கு பிறகு உம்மூஞ்சி வெளிரிப் போகனும்!

ரிசப்சன் போட்டோஸ்ல உன் தலைக்குமேல நானே கொம்பு வைக்கனும்!

கொடியில காயப்போட்ட உன் ஜட்டிமேல காக்கா கக்கா போகனும்!

உன் மாமியாரும் நீயும் ஒன்னா மருமக கொடும சீரியல் பார்க்கனும்!

உன் கல்யாண பொடவைல உன் புருசனே காஃபியை தவறி கொட்டனும்!

சீயக்கா குளியல் நடுவால பாத்ரூம்ல தண்ணி நிக்கனும்!

உம்புருசனின் முன்னால் லவ்வரு உன்னைவிட வெகு அழகா இருக்கனும்!

ஹனிமூன் மொதநாளே அவனுக்கு பரோட்டா தின்னு நைட்டுபுல்லா பேதியாகனும்!

பாத்ரூமே இல்லாத இடத்துல உனக்கு அர்ஜெண்ட்டா மூச்சா வரணும்னும்


ப்ரே பண்ணுவேன்!  நானும் ப்ரே பண்ணுவேன்!!

உங்க ப்ரேயர் என்னங்கப்பு? :)


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு