முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை!

Source: http://www.bigbrother.net/~heather/pictures/ButterflyArt1.gif

பேசுவதே புரியும் பொழுது
முகத்திலிருக்கும் இரு பட்டாம்பூச்சிகளுக்கு
ஏனிந்த விளக்கவுரை வேலையென
கேட்டபோது மனசிலொரு கிறுகிறு

விடுமுறையில் தூதாக
பட்டாம்பூச்சிகள் வீடுவரைவருமா
எனக்கேட்டு அனுப்பிய
பட்டாம்பூச்சி வாழ்த்துஅட்டை
புடவைகளுக்கடியில் பத்திரமாய்

என்னைவிட மாநிறமா
எனக்கையோடு கையொற்றி
முதன்முதலில் தொட்டபொழுது
முன்உணராத பட்டாம்பூச்சிகள்
என் அடிவயிற்றில்

பிறந்தநாள் பரிசென
நீ பிடித்துவந்து
நாம் பறக்கவிட்ட
விரல்நுனிக்கு வர்ணம்கொடுத்த
நீலம்தெளித்த பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சிகளும் இப்படித்தான்
கலவிக்கொண்டே பறக்குமென
நீ சொன்னதை உணர்ந்ததினம்
நம் கலவியின் உச்சகணம்

சிலநாட்களே வாழ்ந்துமடியும்
பட்டாம்பூச்சிகளுக்குள்
பிரிவுத்துயர் இல்லையென
விட்டுச்சென்ற கசந்த
அந்த கடைசி முத்தம்

மன்னிக்கவும்,
நான் இப்பொழுது
பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை

கருத்துகள்

  1. ம்ம்...ம்..ம்
    வீட்டம்மாவுக்கு என்று தனியா ஒரு பொழிப்புரை தயார்தானே..?

    பதிலளிநீக்கு
  2. கவிதை சூப்பர், போட்டோவும் அருமை.

    அதையெல்லாம் விட, தருமியின் கமெண்ட் சூப்பரோ சூப்பர்!

    பதிலளிநீக்கு
  3. கவிதை சூப்பர், போட்டோவும் அருமை.

    அதையெல்லாம் விட, தருமியின் கமெண்ட் சூப்பரோ சூப்பர்!

    பதிலளிநீக்கு
  4. பிரிவின் கனம்
    உண்மையின் வேதனையினை உணர்த்தும் கணம்

    உணர்வுகளின் வலி
    காணும் காட்சிகளிலும் தொடரும்
    தன் பதிவினை நிகழ்த்தி
    தவிர்க்கவே இயலாதபடி

    கவிதை நன்று இளவஞ்சி

    பதிலளிநீக்கு
  5. தருமி, சுரேஷ், எல்லோரும் ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல.. ஆஹா... ஒரு குரூப்பாத்தான் அலையறாய்ங்கப்பா...

    மதுமிதா, உங்கள் ஊக்கங்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  6. நல்ல நிழற்படம். இளவஞ்சி உங்கள் பதிவின் urlஐ தினமலரில் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா... அவிங்க என்னையும் விட்டுவைக்கலையா?? :)

    தகவலுக்கு நன்றி பத்மா அரவிந்த்!

    பதிலளிநீக்கு
  8. :-) தவறே செய்யா பட்டாம்பூச்சிகளின் மேல் கோபமா ..

    கவிதைத்துவமான சிந்தனைதான்...

    பதிலளிநீக்கு
  9. இளவஞ்சி கலக்கியிருக்கீங்க...... எப்படிய்யா உம்மால மட்டும் முடியுது..... ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  10. கவிதை அருமை இளவஞ்சி.

    தியாகராஜன் (THYAG)

    பதிலளிநீக்கு
  11. இனிமை . நன்று 11G அவர்களே ...:)
    shivatma

    பதிலளிநீக்கு
  12. //விடுமுறையில் தூதாக
    பட்டாம்பூச்சிகள் வீடுவரைவருமா

    பிறந்தநாள் பரிசென
    நீ பிடித்துவந்து
    நாம் பறக்கவிட்ட
    விரல்நுனிக்கு வர்ணம்கொடுத்த
    நீலம்தெளித்த பட்டாம்பூச்சி


    சிலநாட்களே வாழ்ந்துமடியும்
    பட்டாம்பூச்சிகளுக்குள்
    பிரிவுத்துயர் இல்லையென
    விட்டுச்சென்ற கசந்த
    அந்த கடைசி முத்தம்

    மன்னிக்கவும்,
    நான் இப்பொழுது
    பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை//

    மேலே உள்ள வரிகள் நன்று. ரொம்ப ரசிச்சேன்

    பதிலளிநீக்கு
  13. தங்கள் வலைப்பூவைப் பார்த்தேன். அருமை. உங்கள் வலைப்பூவை தினமலரில் பிரசுரித்துள்ளோம். இரண்டாம் பக்கம் வெளியாகி உள்ளது. தினமலர் வெளிநாடுகளில் ஓரிரு இடங்களில் மட்டுமே கிடைக்கும் என்பதால், இன்டர்நெட்டிலும் நீங்கள் அதைப் படிக்கலாம்.
    http://www.dinamalar.com/2005oct07/flash.asp

    தினமலர், மதுரை.

    பதிலளிநீக்கு
  14. மக்களே! உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    shivatma - 11G யா? சீக்கிரமே உங்களுக்கு Dr & திருமா சந்திப்பு அமையக்கடவது! :)

    Nagarathinam,

    பிரசுரித்தமைக்கும் தகவலுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  15. //நான் இப்பொழுது
    பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை//
    இறுதிவரியில் கவிதையின் உச்சம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு