முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெறுமை

Image hosted by Photobucket.com

பொசுக்கும் வெயிலில்
ஆளரவமற்ற தெருவில்
பொங்கும் வியர்வையுடன்
மெல்ல கூவியபடிசெல்லும்
பழைய பேப்பர்காரனின்
குரலில்

சாலையோர நெரிசலில்
கடந்துசெல்லும் வாகனங்களை
சலனமின்றிப் பார்க்கும்
குருட்டுப் பிச்சைக்காரனின்
முகத்தில்

இருசக்கர வாகனத்தில்
கணவனை பிடித்தபடி
குழந்தையை அணைத்தபடி
எங்கோ வெறிக்கும்
இளம் மனைவியின்
பார்வையில்

பாதாளச் சாக்கடையில்
மனசை இரும்பாக்கி
உடம்பையே கருவியாக்கி
அடைப்பை நீக்குபவன்
அசைவுகளில்

கையில் மஞ்சள்பையுடன்
நெற்றியில் யோசனையுடன்
முன்பதிவு வரிசையில்
களைத்த முதியவரின்
முகத்தில்

உணர்வுகள் செத்துப்போய்
பேச்சையே உணர்வாக்கி
எப்போது முடிப்பானென
படுத்துக்கிடக்கும் விலைமகளின்
தேகத்தில்

வெறுமைகளால் என்றும்
வெறுமைகளைமட்டுமே
உணர்த்தமுடிவதில்லை

கருத்துகள்

  1. இளவஞ்சி! வெறுமை பதிவு அருமை.தொடர்ந்து எழுதவும்.

    பதிலளிநீக்கு
  2. * பேப்பர்காரனின் குரலில், எதிர்பார்ப்பு
    * பிச்சைக்காரனின் முகத்தில் எதிர்பார்ப்பு
    * மனைவியின் பார்வையில் எதிர்பார்ப்பு
    * அடைப்பை நீக்குபவன் அசைவுகளில் எதிர்பார்ப்பு
    * முதியவரின் முகத்தில் எதிர்பார்ப்பு
    * விலைமகளின் தேகத்தில் எதிர்பார்ப்பு

    பதிலளிநீக்கு
  3. அருணன், அனானிமசு: உங்கள் ஊக்கங்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. உயிரோட்டமாய் இருக்கிறது கவிதை உண்மையும் கூடவோ.?

    பதிலளிநீக்கு
  5. nalla kavithai iLavanji
    unga blog paththina munnuraiyai
    koncham maaththunga en intha
    pammaaththu :-)


    enRum anbakalaa
    maravantu

    பதிலளிநீக்கு
  6. இளவஞ்சி சார்

    அது என்ன சார் எல்லா கவிதைகளிலும்
    முடிவு கொஞ்சம் conventional_ஆ இருக்க மாட்டேங்குது.

    கவிதை அருமை.....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

க.க:5 - காதலிக்க நேரம் உண்டு! காத்திருக்க இருவர் உண்டு!!

எ ன்னது?! ஒரு வார கேப்புல சன்னமா பொண்ணை பேசி முடிச்சிட்டீங்களா? நிச்சயம் வரைக்கும் போயாச்சா? ரெண்டு வீட்டுலையும் கைய நனைச்சிட்டீங்களா?! கல்யாண தேதிக்கு இன்னும் அஞ்சாறு மாசம் இருக்கா? என்னப்பு... சொல்லவேல்ல? சரி விடுங்க.. சொந்த பந்தங்க மட்டும் கூடி மேட்டரை முடிச்சிருப்பீங்க... கல்யாணத்துக்காவது மறக்காம பத்திரிக்கை வைங்க! நமக்கெல்லாம் அடிக்கடி இந்த கல்யாணவீட்டு போட்டோவுலையும் வீடியோவுலையும் லைட்டா பல்லைக்காட்டிக்கிட்டு, 101 ரூவா வைச்ச கவரை கமுக்கமா மாப்ளை கைல அழுத்திட்டு, நமக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலீசு வாழ்த்தான "Many more Happy returns of the Day" அப்படிங்கறதை ஜாக்கிரதையா தவிர்த்து, கேனத்தனமா "மச்சி! கடைசில நீயும் கவுந்துட்டயா"ங்கற மாதிரி ஏதாவது பெனாத்தி, வீடியோல விழுகறதெல்லாம் நமக்கு சர்வசாதாரணங்கற மாதிரி ஒரு லுக்கோட, கொஞ்சம் முறுக்கிக்கிட்டு வெரைச்சா மாதிரி நின்னு வந்ததுக்கான எவிடென்சு காட்டலைன்னா சமுதாயத்துல திடீர்னு நம்ம பெரபலம் கொஞ்சம் கொறைஞ்சுட்டாப்புல ஒரு நெனைப்பு வந்துரும்! அதுக்காகத்தான்! மத்தபடி மூனுவேலை மூக்குப்பிடிக்க மொசுக்கறதுக்கு இல்லைங்...! ஆக ம