முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெறுமை

Image hosted by Photobucket.com

பொசுக்கும் வெயிலில்
ஆளரவமற்ற தெருவில்
பொங்கும் வியர்வையுடன்
மெல்ல கூவியபடிசெல்லும்
பழைய பேப்பர்காரனின்
குரலில்

சாலையோர நெரிசலில்
கடந்துசெல்லும் வாகனங்களை
சலனமின்றிப் பார்க்கும்
குருட்டுப் பிச்சைக்காரனின்
முகத்தில்

இருசக்கர வாகனத்தில்
கணவனை பிடித்தபடி
குழந்தையை அணைத்தபடி
எங்கோ வெறிக்கும்
இளம் மனைவியின்
பார்வையில்

பாதாளச் சாக்கடையில்
மனசை இரும்பாக்கி
உடம்பையே கருவியாக்கி
அடைப்பை நீக்குபவன்
அசைவுகளில்

கையில் மஞ்சள்பையுடன்
நெற்றியில் யோசனையுடன்
முன்பதிவு வரிசையில்
களைத்த முதியவரின்
முகத்தில்

உணர்வுகள் செத்துப்போய்
பேச்சையே உணர்வாக்கி
எப்போது முடிப்பானென
படுத்துக்கிடக்கும் விலைமகளின்
தேகத்தில்

வெறுமைகளால் என்றும்
வெறுமைகளைமட்டுமே
உணர்த்தமுடிவதில்லை

கருத்துகள்

  1. இளவஞ்சி! வெறுமை பதிவு அருமை.தொடர்ந்து எழுதவும்.

    பதிலளிநீக்கு
  2. * பேப்பர்காரனின் குரலில், எதிர்பார்ப்பு
    * பிச்சைக்காரனின் முகத்தில் எதிர்பார்ப்பு
    * மனைவியின் பார்வையில் எதிர்பார்ப்பு
    * அடைப்பை நீக்குபவன் அசைவுகளில் எதிர்பார்ப்பு
    * முதியவரின் முகத்தில் எதிர்பார்ப்பு
    * விலைமகளின் தேகத்தில் எதிர்பார்ப்பு

    பதிலளிநீக்கு
  3. அருணன், அனானிமசு: உங்கள் ஊக்கங்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. உயிரோட்டமாய் இருக்கிறது கவிதை உண்மையும் கூடவோ.?

    பதிலளிநீக்கு
  5. nalla kavithai iLavanji
    unga blog paththina munnuraiyai
    koncham maaththunga en intha
    pammaaththu :-)


    enRum anbakalaa
    maravantu

    பதிலளிநீக்கு
  6. இளவஞ்சி சார்

    அது என்ன சார் எல்லா கவிதைகளிலும்
    முடிவு கொஞ்சம் conventional_ஆ இருக்க மாட்டேங்குது.

    கவிதை அருமை.....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது

எடின்பரோ கோழி வறுவல்

இது என் முதல் சமையல் குறிப்பு பதிவு ! இந்த களத்தில் பழம் தின்று கொட்டை போட்ட அதாவது சாதனை படைத்து வருங்கால சிஷ்யர்களுக்கும் வித்திட்ட பதிவர்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டு ஆரம்பிக்கிறேன். இது நாடு கடத்தப்பட்டு (அ) நாடு கடத்திக்கொண்டு, தானே சமைத்து தானே உண்டு வாழும் பாவப்பட்ட பேச்சிலர்களுக்கான எளியவகை சமையல் குறிப்பு ( கடினவகை தெரிஞ்சா சொல்ல மாட்டமா?! ) தேவையான பொருள்கள்: அடுப்பு மற்றும் பற்றவைக்க தீப்பெட்டி (அ) காஸ் லைட்டர் வாயகன்ற வாணலி ( வாயகன்றாலே அது வாணலிதாம்ல! )மற்றும் ஒரு கரண்டி/கத்தி கொட்டிக்கொண்டு வக்கணையாய் சாப்பிட ஒரு பெரிய மற்றும் சிறிய தட்டு நிஜமாகவே தேவையான பொருள்கள்: கோழிக்கறி - 1/2 கிலோ ( தலை மற்றும் இறக்கைகள் நீக்கி தோலுரித்தது ) பெரிய வெங்காயம் - 3 (சாலட் வெங்காயம் இருந்தால் சிறப்பு ) தக்காளி - 3 இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - 10 பற்கள் பட்டை, கிராம்பு -சிறிதளவு சோம்பு - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லி தழை - ஒரு கொத்து பச்சை மிளகாய் - 6 கொத்தமல்லித்தூள் - 2 தேக்கரண்டி மிளகுத்தூள் - 1