முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அனுக்கி தேவை



பூவையர்க்கோர் விண்ணப்பம்...

அன்பாய் அணைத்து முத்தம் கொடுத்து
இதமாய் தட்டி எழுப்பிவிடவும்
எண்ணை தேய்த்து உடம்பு பிடித்து
தலையை அலசி குளித்துவிடவும்
துணிகளை துவைத்து உலர்த்தி மடித்து
காலையில் அனைத்தும் செட்டாய் வைத்தும்
வெண்ணிற சோறு கோழி வருவலை
நாக்குக்கு ருசியாய் பொங்கிப்போடவும்
குறுக்கிடாமல் நான் பேசக்கேட்டும்
கேட்கும்போது மட்டும் பேசியும்
வாரஇறுதி தம்மு தண்ணியை
புலம்பல் இன்றி மகிழ்வாய் ஏற்றும்
அம்மா அப்பாவை கண்போல் பார்த்தும்
மாமா மாமியை அண்டவிடாமலும்
எனக்கு மட்டும் அழகாய் தெரிந்தும்
இரவின் ஆட்டத்தை சொல்லி மகிழ்ந்தும்
தினப்படி செலவை சொல்லாமல் மறைத்தும்
கூடி வாழவோர் அனுக்கி தேவை...
அகவை ஒரு இருபதுக்குள்...

ஒரு கூடுதல் தகவல்...!
மேற்தகுதிகள் இருப்போர் சமமாய் வாழ
அனுக்கன் தேட எண்ணம் இருக்கும்
அப்படியொருவன் உலகில் இல்லை..
தேடுதல் அலைச்சல்... கால விரையம்...
அரிய வாய்ப்பு... மகிழ்வுடன் ஏற்பீர்...!

கருத்துகள்

  1. காருக்கு விளம்பரம் கொடுக்கலாமா வேண்டாமான்னு தயங்கி தயங்கி கொடுத்துட்டு இங்க பாத்தா....

    உண்மையிலேயே உலகம் ரம்ப பெர்சு மாமே :-)

    பதிலளிநீக்கு
  2. மூக்கன் சார்...

    காரு வாங்கத்தான் குழம்பனும்... இதுக்கெல்லாம் ஒரு கொழப்பமும் வராது... :)

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  3. இளவஞ்சி!

    உங்க பேர் நல்லா இருக்குங்க!. கவிதையும் நல்லாத்தான் இருக்கு..., நீங்க கேட்ட எல்லாம் கிடைக்கும், உகாண்டாவில போய் நம்ம மொழியே தெரியாத பொண்ண எடுத்திங்கன்னா., அதுவும் கூட,

    அம்மா அப்பாவை கண்போல் பார்த்தும்
    மாமா மாமியை அண்டவிடாமலும்

    இந்த 2 வரிக்கு ஒத்து வராது... ஏன்னா எந்த நாட்டிலயும் பெத்தவங்கள அண்ட விடாத பெண்கள் கிடைக்கமாட்டாங்க!... பெத்தவங்களையே அண்ட விடாதது... நம்ம தலையில அண்டாவத்தான் போடும்! எனவே உங்க வரிகளைத்தான் இதுக்கு பதிலாத்தரணும்.

    அப்படியொருத்தி உலகில் இல்லை..
    தேடுதல் அலைச்சல்... கால விரையம்...!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு