முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓர் இரவுச்சுயம்வரம்




கூட்டிவந்த விலைமகளை
நண்பன் கூடிக்களித்திருக்க
எம் முறை வருமென்று
நாங்கள்

உள்ளிருக்கும் உக்கிரம் தாங்காது,
அக்குளிள் உணரும் வியர்வையின்
கசகசப்பாய் எங்கள்
மனசு

"உன்னோடு ஐவரானோம்!"
நண்பனின் கூற்றின்
இலக்கியத்தரம் உணராது
"அப்போமேல ஐநூறு ஆகும்!"
என்றதில் வெளிப்படுகிறது
அவள் வாழ்வின்
விலை

"இன்னைக்குநா போடுரபோடுல
இனி ஃப்ரீயாவே வருவாபாரு...!"
குடையும் புண் எருதுக்கும் இன்பம்
என்கிறது ஒரு
காக்கை

"பாவம்டா இவ... இவபுருசனே
கஜாக்கா கிட்ட வித்துட்டானாம்..."
உள்ளிருக்கும் காமத்தை
கழிவிரக்கத் தோலால்
போர்த்தியபடி இன்னொருவனின்
இரங்கற்ப்பா

வீட்டைக் கரையேற்ற
இளமையை விலைகொடுத்த
ஆறாறு வயது முதிர்கண்ணனுக்கு
ஓயமறுக்கும் தவிப்பை ஆள
தேடிவந்த விடமுறிவாய்
இவள்

அவர்களாவது தேவலாம்!
காரியத்தில் கண்ணாய்
நானோ அவர்களையிங்கே
கடையனாய் காட்டிக்
கொடுத்தபடி

உணர்ச்சிகளின் வெறியென்
உள்ளுணர்வை மிதித்துநசுக்க
கையறு நிலையில்
கவிதை செய்தபடி
மனது

விரைத்தவைகள் துவண்டபின்னாவது
அவள் கைப்பையிலிருக்கும்
ரெஜஸ்ட்ரோன் மாத்திரையும்
ஆறாம்வகுப்பு சமூகஅறிவியலும்
எதற்கென அறிய
முயலுமா எங்கள்
பகுத்தறிவு?

கருத்துகள்

  1. நன்றாக இருக்கிறது. கொஞ்சம் நீளமாய் எனக்குத் தெரிகிறது, இருப்பினும், மிக நல்ல முயற்சி.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப அருமையான கவிதை. சுருக்கென இருக்கிறது கடைசி வரி.

    பதிலளிநீக்கு
  4. லக்ஷ்மி,

    உங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  5. அருமையா எழுதிருக்கீங்க‌ சார் :)

    உணர்ச்சிகளின் வெறியென்
    உள்ளுணர்வை மிதித்துநசுக்க
    கையறு நிலையில்
    கவிதை செய்தபடி
    மனது

    விரைத்தவைகள் துவண்டபின்னாவது
    அவள் கைப்பையிலிருக்கும்
    ரெஜஸ்ட்ரோன் மாத்திரையும்
    ஆறாம்வகுப்பு சமூகஅறிவியலும்
    எதற்கென அறிய
    முயலுமா எங்கள்
    பகுத்தறிவு?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு