முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிம்போமேனியாக் ( Nymphomaniac )



நிம்போமேனியாக்குனு ( http://www.imdb.com/title/tt1937390 ) இரு பாகங்கள் கொண்ட ஐந்துமணிநேர ஒரு மெச்சூர்ட்ட் ஆடியன்ஸ் படம். காமத்தை வாழ்வாக கொண்ட ஒரு பெண்ணின் கதையை வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் சொல்வதாக செல்லும் கதை. சிறுவயது சுய இன்பம், பதின்ம அதீத காமவேட்கை, அடங்காக்காமம், வலியின்பம், பலதார உறவுன்னு கட்டுக்கடங்காத வாழ்க்கையை கட்டுக்கோப்பாக சொல்லும் கதையோட்டம். ஆரம்பத்தில் சீனுக்காக பார்க்க ஆரம்பித்து பின்பு ஒவ்வொரு கட்டத்திலும் அதை பிரித்து ஆராய்ந்து உண்மையை பட்டவர்த்தனமாக உணரவைக்கையில் அதிர்ச்சிமதிப்பீடுகள் எல்லாம் பின்னால் போய் முகத்தில் அறையும் உணர்வுகளின் நிஜங்களில் அடிபட்டு படம் முடியமுடிய வெறுமையுள் இழுபட்டு தேமேன்னு பார்க்கவைக்கும் கதை.



ஒரு கட்டத்தில் சுய கருக்கலைப்பு அதிகுரூரமாக காட்டப்படுகிறது.அதாவது மக்கள்பேறு என்பதை அதி உன்னதமான உணர்வாகவும் வாழ்வின் கொடையாகவும் உணர்ந்துவாழும் வாழ்க்கையில் அதை வெறும் கருஅழிப்பாக சொல்லும் காட்சி. நானே செய்துகொண்டதால்தானே இத்தனை அதிர்ச்சி.. இதுவே மருத்துவர் எப்படி எப்படி செய்வார் தெரியுமா சிசுவின் தலையைப்பிடித்து இழுக்கும் கருவிக்கு பெயர்தெரியுமா என வசனங்கள் வருகையில் அதிர்வுக்காட்சியில் கிடைத்த உலுக்கல் வெறும் மிகைமதிப்பாக பார்க்கவும் வாய்ப்புண்டு என போகும் படம். சுருங்கச்சொன்னால் சிறுபத்திரிக்கை எழுத்துமொழியில் நம் விமர்சகர்கள் பக்கம்பக்கமாக ஆயிரத்தெட்டு நேம்டிராபிக்கோடு பிரித்துமேய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் திரைக்காவியம். எனனசெய்ய... எல்லா அறிவாளி விமர்சகர்களுக்கும் மசாலாபடங்களை பிச்செரியத்தான் சமீபத்தில் ஆர்வம். பின்ன சுபா ராஜேஷ்குமாரெல்லாம் தொடர்ந்து திரைவாய்ப்பு பெறுகையில் எவ்வளவு காலம்தான் அம்பதுபேர்களுக்கு ஆராய்ச்சிகட்டுரைகளை படைத்துக்கொண்டிருப்பது?


சொல்லவந்த மேட்டரு அதுவல்ல. முதல் பாகத்தில் Mrs. H என்றொரு பகுதி வருகிறது. பலகாதலர்களோடு... சரிசரி.. பல கள்ளக்காதலர்களோடு வாழும் காலத்தில் ஒரு காதலன் காமத்தை தாண்டி உணர்வுவயப்பட்ட காதலில் இப்பெண்ணோடு விழுகிறான். திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தகப்பன். பதின்மத்தில் எட்டாக்காதல் நாற்பதில் கிட்டியதில் தடம் புரளும் கட்டம். அவளோ உன்னோடு முழுக்க வாழமுடியாது. உன் குடும்பம் இருக்குன்னு துரத்தி விடுகிறாள். காதலை குடும்ப அமைப்பில் தொலைத்து மீட்டெடுக்க வழியில்லாமல் மூச்சுத்திணறலில் இருக்கும் அந்த அம்மாஞ்சி குடும்பத்தை பிரிந்து இவளோடு வாழலாம் என பெட்டியோடு கிளம்பி வருகிறான். அடுத்துவரும் பதினைந்து நிமிடங்கள் அதகளம். மெத்தர்ட் ஆக்டிங்னா இதுவான்னு தெரியலை. ஆனா உமா தர்மன் திறமையில் பேயாட்டம் ஆடியிருக்கும் காட்சி.




அந்த ஆளின் மனைவியான உமாதர்மன் அவனை இவளது வீட்டில் விட்டுவிட்டு போக குழந்தைகளோடு வருகிறாள். மாடிப்படிக்கட்டின் சைடில் ஒளிந்துகொண்டு குசுகுசுப்பாய் உங்கப்பா உள்ளபோயிட்டாரா பாருன்னு ஆரம்பிக்கும் காட்சி. குழந்தைகளின் குரல்கேட்டு இவள் அவர்களை வீட்டினுள் அழைக்க அவள் வாழ்வில் ஏமாற்றப்பட்ட கணவனால் இல்வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்ட எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கி வீட்டினுள் வந்து அமர்கிறாள். அறிமுகம் செய்துகொள்கிறாள். வீட்டினை பார்க்க விரும்புகிறாள். அவர்கள் வீட்டில் தோற்றுப்போன படுக்கையறையை இந்த வீட்டில் வெற்றிபெற்ற படுக்கையறையோடு ஒப்பிட்டுப்பார்க்கிறாள். இந்த அறையில் தான் உங்க அப்பாவை நாம் இழந்தோம்னு குழந்தைகளுக்கு சொல்கிறாள். இனிமே அப்பாவை பார்க்க முடியாது அப்பாவிடம் எதையும் எதிர்பார்க்காதீங்கன்னு தேற்றுகிறாள். அந்த நேரம் பார்த்து இவளின் இன்னொரு காதலன் பூங்கொத்தோடு வர நிலமை சூடுபிடிக்கிறது. எனக்கும் இதுமாதிரி தகுதியான ஆளை தேர்ந்தெடுக்கும் அறிவில்லாம போயொருச்சேன்னு குத்துகிறாள். அப்பான்னு அழுதுகொண்டு ஓடும் பையனை அடித்து பிரித்திழுக்கிறாள். கணவனை அறைந்துவிட்டு கார்சாவியை வீசிவிட்டு குழந்தைகளை இழுத்துக்கொண்டு ஆற்றாமையின் வலியின் அனைத்துக்குமாக சேர்ந்து வீட்டிவிட்டு பெரிய அகவலோடு போகிறாள்.


எனக்கு இதைக்கண்டு முடிக்கையில் ஈரக்குலையெல்லாம் அறுந்துவிட்டது. அவள் செய்யும் ஒவ்வொரு செயலும் சொல்லும் குடும்ப அரசியலை அல்லது குடும்ப அமைப்புக்கு தேவைப்படும் காய்நகர்த்தல்களை முன்னிருத்தும் செய்கைகள் தான். வஞ்சிக்கப்பட்ட பெண்ணாக குழந்தைகளுக்காக வாழ்வை அம்மா ஸ்தானத்தில் மட்டுமே வாழ்ந்து மனைவியின் ரோலை கைதவறவிட்ட பேதையாகத்தான் தன்னை காட்சிப்படுதுகிறாள். ஆனால் நடக்கும் இந்த நிகழ்வுகள் எதிலுமே சம்பந்தமில்லாமல் மலங்க மலங்க பாசமான அப்பாவை பிரிய இயலாமல் கதறும் குழந்தைகளைப்பார்க்கையில் வாழ்வில் ஒருகட்டத்தில் ஆண்கள் சுயத்தை முன்னிருத்தாமல் மனைவி அம்மாவானதைப்போல கணவனும் அப்பாவாக வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்துவிடுதல் மிகநலம் என்று தோன்றியது. மிடில்க்ளாஸ் மோரானாக இருப்பதுதானே தவறு. மிடில்க்ளாஸ் மாதவனாக வாழ்ந்து தீர்வதில் நம்மைத்தவிர நம்மை நம்பிச்சாரும் எத்தனை உயிர்களுக்கு எத்தனை நன்மை?


பிரட்சனை அள்ள அள்ளத்தீராத குறையாத ஆண்களின் கடும்புனல் காமம்தானே? ஊரெல்லாம் சுற்றிவந்தாலும் தீர்ந்து தேய்ந்து அழிந்து தொலையாத அறுத்தெறிய இயலாத அந்த காமக்காதல் உடலுக்குள்ளேயே அப்பாவேடத்தின்கீழ் அமுங்கி நாறி சீப்பிடித்து மனமுள் வாழ்ந்து களித்துதீரும் வக்கிரம் ( உண்மையில் உக்கிரம் ) வாழ்வின் பகுதியாக மாறித்தொலையட்டுமே. குழந்தைகள் பாதிப்பின்றி வாழ்ந்து மலரட்டும்.


ஆகவே நாற்பதில் இல்லறத்திலும் பொருளாதாரத்திலும் "செட்டிலா"கிவிட்டதாய் வரும் நினைப்பில் கிடைக்கும் அதிகாரத்தில் மீண்டும் பதின்மத்தில் ஏமாந்த இழந்த காதல்களை செய்துபார்க்க வரும் துளிர்ப்பினை அறுத்தெறிந்து தன்கையே தனக்குதவின்னு மனதினுள் வாழ்ந்து கடத்தல் உத்தமம் என்கிற தெளிவினைக்கொடுத்த உமா தர்மனுக்கு நன்றி :)



கீதப்ப்ரியனின் அருமையான பதிவு -


கருத்துகள்

  1. //அந்த ஆளின் மனைவியான உமாதர்மன் அவனை இவளது வீட்டில் விட்டுவிட்டு போக குழந்தைகளோடு வருகிறாள்.//

    அதான ... எப்பவோ இந்த வரிகளை ஏற்கெனவே வாசித்திருக்கிறோமென ஒரு மணி அடித்ததே....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு