முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காத்தவராயரின் கசுமாலக் காதல் க(வி)தைகள்

அன்பே!

என் குளிர்கால
குமுட்டி அடுப்பே!


சுகமாகத்தான் இருக்கிறது
ஒரு பொட்டலம் சுண்டலில்
விரல்கள் துழாவி
பஞ்சப்பனாதியாய் பகிர்ந்துண்னுவதும்

சகிக்கத்தான் முடிவதில்லை
சுண்டலுக்கு காசு கொடுக்கும்
அற்ப(புத) தருணங்களில்
மட்டும்
நீ
வெட்கம் மேலிட
கடற்கரை மணலில்
முகம் புதைக்கும் மர்மம்

கற்றுக்கொண்டது
காதலில்
செலவினம் அதிகம்

பெருமைதான் எனக்கும்
பொட்டலத்தின்
அடிநுனியில் மாட்டிய
கடைசி சுண்டலுக்கான
அடிதடியில்
உன் வெற்றி

அதையும் மீறிய வலிகள்
என் கையில் விழுந்த
உன் கடைவாய்ப் பற்களின்
கடிதடங்கள்

கற்றுக்கொண்டது
காதலென்றால்
வலிகள் தாங்கனும்

ரோஸ்கலர் பிடிக்குமென்றே நம்பினேன்
நீ
ஒன்றுக்கு இரண்டாய்
பஞ்சுமிட்டாய் கேட்டபோது

அதிர்ந்துதான் போனேன்
பஞ்சுமிட்டாய் குச்சிகளை
நீ மட்டுமே
சாயம் போக
சப்பிய போது

கற்றுக்கொண்டது
காதலில்
விட்டுக் கொடுக்கனும்


சிலிர்க்கத்தான் செய்கிறது
விரலோடு விரல் கோர்த்து
முகமோடு முகம் வைத்து
வாயோடு உறவாட
உடலோடு விளையாட

குமட்டலே மிச்சம்!
சிக்கெடுக்காத தலையில்
விரல்கள் சிக்க
விளக்காத வாயின்
கப்பு தாக்க
கம்மாங்கூட்டின்
வீச்சம் தூக்க

கற்றுக்கொண்டது
காதலில்
காமமும் இருக்கனும்



பதவிசாகத்தான் இருக்கிறது
காதலியுடன்
டாஸ்மாக் சந்தில்
கமுக்கமாய் இருப்பது

பத்தும் பறந்தது
ஓல்டுமாங்க் ஆஃபும்
மீன்வருவல் பிளேட்டும்
போதவில்லையென
பக்கத்து டேபிளின்
மிச்ச ஊறுகாய் கவரை
உள்வெளி திருப்பி
நீ
சுத்தமாய் நக்கியபோது

கற்றுக்கொண்டது
காதலில்
சம உரிமை இருக்கனும்


சில்வியா குண்டலகேசியே...

எனக்கொரு சந்தேகம்!

காதலித்தே தீர வேண்டுமா என்ன?
காதலில்
இத்தனை கற்ற பின்னும்


அடைக்க முடியாதது அன்பு!
பரந்து விரிந்தது உலகம்!!
எல்லைகளற்றது பிரபஞ்சம்!!!
இதில்
காதலென்பது
ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமா?

அதனால்தான் கேட்கிறேன்...

நீயே இம்புட்டு அழகெனில்
உன் தம்பி எப்படி?!

ஹிஹி...

கருத்துகள்

  1. கலகிட்டிங்க, காதலர்நாளில் வந்த இடுகைகளில் இது தான் எனக்கு best ஆக தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  2. வாத்தி, இவிங்களுக்கும் இந்த நாள்தானா?

    பதிலளிநீக்கு
  3. செம கலக்கல்!!!

    மிகவும் பிடித்து இருக்கு

    பதிலளிநீக்கு
  4. காசி சொன்னதுக்கு - ரிப்பீட்டேய்!

    பதிலளிநீக்கு
  5. //தருமி said...
    காசி சொன்னதுக்கு - ரிப்பீட்டேய்!//

    அப்ப நான் தருமி சாருக்கு ரிப்பீட்டே :))

    பதிலளிநீக்கு
  6. 'பின்னால'இப்படி ஒரு முடிச்சு வைப்பீங்கண்ணு யோசிக்கவேயில்ல..

    எப்படியெல்லாம் காதலிக்குறாங்கப்பா..

    :)

    பதிலளிநீக்கு
  7. கோவி,

    // இது தான் எனக்கு best ஆக தெரிகிறது. // இது என்ன? நல்லா எயிதுன மத்த பதிவருங்க எல்லாம் என்னை ரவுண்டு கட்ட ஏற்பாடா? :)

    ஏழையின் சிரிப்பில், குசும்பன்,

    நன்றி!

    இளா,

    // இவிங்களுக்கும் இந்த நாள்தானா? // யாருக்கு தெரியும்? காதல் என்பது அனைத்துலக ஜீவராசிகளுக்கானது என்ற என் பரந்த மனப்பான்மையின் வெளிப்பாடு இது.. (ஸ்ஸ்ப்பா..... )

    காசியண்ணே,

    நகைக்குறிக்கு நன்றி! நேர்ல இருந்திருந்தா இந்த ப்பிச்சுக்கு தமிழுக்கு என் நடுமண்டைல ஒரு கொட்டு வைச்சிருப்பீங்கன்னு நினைக்கறேன்! :)

    தருமிசார், சென்ஷி,

    காசிக்கு நான் சொன்னதுக்கு ரிப்பீட்டே! ( பழிக்குப் பழி.. )

    சிறில் அண்ணாச்சி,

    'பின்னால' - ஹிஹி...

    வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. \\ குசும்பன் said...
    செம கலக்கல்!!!

    மிகவும் பிடித்து இருக்கு\\

    வழிமொழிகிறேன்...;))

    பதிலளிநீக்கு
  9. :-)

    குமுதத்தில் கவிஞர் காத்துவாயன் போஸ்டிங் காலியா இருக்குதாமே? அப்ளை பண்ணி வைக்கலாம் இல்லை? அங்கே ஞானி கூட இருக்காரு....

    பதிலளிநீக்கு
  10. கோபிநாத்,

    நீங்களுமா? அதுசரி! :)

    லக்கி,

    // அப்ளை பண்ணி வைக்கலாம் இல்லை? அங்கே ஞானி கூட இருக்காரு....//

    ஏய்யா இப்படி?

    அவரு சும்மாவா குமுதத்துக்கு போனாரு? ஆவில ஆப்படிச்சதால போனாரு! நீங்களும் என்னை வலையுலகத்துல இருந்து ஆப்படிச்சு அங்க அனுப்ப போறீங்களா?! :)

    பதிலளிநீக்கு
  11. ஓ, நீங்க 'அந்த மாதிரி' ஆளா?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு