முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புடிச்ச படமொன்னு போடனுமாமில்ல!?

என் நெஞ்சில் நிறைந்த அன்பு மருத்துவர் தம்பி இராமனாதனும், நச் கதையில் வெற்றிக்கனியை தட்டிப்பறித்த காதல்கோ அருட்பெருங்கோ அவர்களின் மனமுவந்த அழைப்பினை எனக்கு கொடுக்கப்பட்ட ராமனது காலடிகளாய் மகிழ்வோடு ஏற்று இந்த பதிவு. ( ஆஹா! என்னே ஒரு மேடைப்பேச்சு நாகரீகம்! குஸ்ச்ப்பு... கத்துக்கம்மா.... )

When was the last time you did something for the first time?



நேரமில்லாததாலும் பல டேக்குகளை சொதப்பி பல பதிவர்களிடம் துப்பு வாங்கியது படி இதனை செய்ய மனமில்லாததாலும் படம் மட்டும் போட்டுட்டேன். ஏன் பிடிச்சதுங்கற விளக்கம் சொல்லனுமாமில்ல?! அப்பாலிக்கா பின்னாடி வர்றேன். இப்பாலிக்கா சென்னை வண்டிக்கு ஓடறேன்!

====

இப்படம் பிடித்ததற்கான காரணமும் சொல்லிடறேன்...

படத்தில் இருப்பது முதன்முதலில் கடற்கரையை கண்டு மகிழ்ந்த என் அக்கா பையனும் என் பெண்ணும்.

அவர்கள் "எவ்ளோ தண்ணி!!!" என கண்கள் விரிய முகம் மலரக்கேட்ட அந்த கேள்விமட்டும் என் கண்ணில் இன்னும் இருக்கிறது. ஆனால், அதுபோன்றதொரு பரவசத்தை நான் கடைசியாக எப்போது கைக்கொண்டேனென யோசிக்கையில்.. ப்ச்... வளர்ச்சியில் ரசம் போன கண்ணாடியாய் மாறிவிட்ட மனசு எந்த உணர்வுகளையும் நியாயமாய் பிரதிபலிப்பதில்லை தான். அதற்காக குழந்தைகளாக நாம் மாறமுடியுமா என்ன?

ஆளை அடித்து அரைநாள் உட்கார வைக்கிற ஒரு சிறுகதையும், கண்ணோரம் நீர்துளிர்க்கச் செய்யும் ஒரு நல்ல கவிதையும், யாருமே கவனிக்கவில்லை என்றதொரு எண்ணத்தில் நம்மை நடனமிடச்செய்யும் பாடலும், சுருதி சுத்தமாய் நம் சுயம் மறந்து கதறியலும் சக மனிதரின் துக்கமும், உடலும் உள்ளமும் சிலிர்க்க வெடிச்சிரிப்பாய் சிரிக்க ஒரு விசயமும் இந்த உலகத்தில் காணக்கிடைக்காத அரிதான பொருட்களா என்ன? ரசனைகளைத் தொலைத்த நல்லன தேடல் மறந்த மனதோரம் வேலிகள் புதைந்த வாழ்வில் மேற்சொன்னவை நம் கண்களில் படாமல் இருப்பது நம் பார்வைக் கோளாறேயன்றி வேறென்ன? :)

ஆகவே, Life is calling, Where are you? நான் என் காதுகளை இன்னும் அகலமாக திறந்து வைத்திருக்க முயல்கிறேன் :)

=====


TAG விதிகள்:


1. கடந்த வருடத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை இடவேண்டும்.
2. எதுவாக இருந்தாலும் ஒகே. கலையுணர்ச்சி, PIT நுட்ப சிறப்பு, சொந்த ஃபீலிங்ஸ்... சரிதான்.
3. ஏன் அந்தப் படம் ரொம்ப இஷ்டம் என்பதை சொல்ல வேண்டும்.

3 பேரை கூப்பிடனுமாம்ல?

1. கைப்புள்ள
2. தீபா
3. திலகபாமா


அப்பீட்டேய்!!!!

கருத்துகள்

  1. புகைப்படம் நல்லாருக்கு

    /குஸ்ச்ப்பு... கத்துக்கம்மா.... )/

    கேப் ல வெட்டின நல்ல கெடா :)

    பதிலளிநீக்கு
  2. reactions super...

    இப்படி impromtuவா குழந்தைகள எடுக்கற படங்களோட அழகே அழகு..

    வஞ்சமில்லாம கலக்கிட்டீரு...

    நன்னி!

    பதிலளிநீக்கு
  3. //When was the last time you did something for the first time?//

    படமும் இந்த வரியும் ரொம்பப் பொருத்தமா இருக்கு

    பதிலளிநீக்கு
  4. இந்த புகைப்படத்திற்கு பின்னூட்டமிடாமல் செல்ல மனது வரவில்லை.

    பதிலளிநீக்கு
  5. குழந்தைங்க முகத்தில என்ன சதோஷம். ரொம்ப நல்லா இருக்கு இளவஞ்சி.

    பதிலளிநீக்கு
  6. நண்பர்களே,

    உங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி.

    இப்படம் பிடித்ததற்கான காரணமும் சொல்லிடறேன்...

    படத்தில் இருப்பது முதன்முதலில் கடற்கரையை கண்டு மகிழ்ந்த என் அக்கா பையனும் என் பெண்ணும்.

    அவர்கள் "எவ்ளோ தண்ணி!!!" என கண்கள் விரிய முகம் மலரக்கேட்ட அந்த கேள்விமட்டும் என் கண்ணில் இன்னும் இருக்கிறது. ஆனால், அதுபோன்றதொரு பரவசத்தை நான் கடைசியாக எப்போது கைக்கொண்டேனென யோசிக்கையில்.. ப்ச்... வளர்ச்சியில் ரசம் போன கண்ணாடியாய் மாறிவிட்ட மனசு எந்த உணர்வுகளையும் நியாயமாய் பிரதிபலிப்பதில்லை தான். அதற்காக குழந்தைகளாக நாம் மாறமுடியுமா என்ன?

    ஆளை அடித்து அரைநாள் உட்கார வைக்கிற ஒரு சிறுகதையும், கண்ணோரம் நீர்துளிர்க்கச் செய்யும் ஒரு நல்ல கவிதையும், யாருமே கவனிக்கவில்லை என்றதொரு எண்ணத்தில் நம்மை நடனமிடச்செய்யும் பாடலும், சுருதி சுத்தமாய் நம் சுயம் மறந்து கதறியலும் சக மனிதரின் துக்கமும், உடலும் உள்ளமும் சிலிர்க்க வெடிச்சிரிப்பாய் சிரிக்க ஒரு விசயமும் இந்த உலகத்தில் காணக்கிடைக்காத அரிதான பொருட்களா என்ன? ரசனைகளைத் தொலைத்த நல்லன தேடல் மறந்த மனதோரம் வேலிகள் புதைந்த வாழ்வில் மேற்சொன்னவை நம் கண்களில் படாமல் இருப்பது நம் பார்வைக் கோளாறேயன்றி வேறென்ன? :)

    ஆகவே, Life is calling, Where are you? நான் என் காதுகளை இன்னும் அகலமாக திறந்து வைத்திருக்க முயல்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  7. //நம் கண்களில் படாமல் இருப்பது நம் பார்வைக் கோளாறேயன்றி வேறென்ன?//
    கடல் மாதிரி உங்க கருத்தும் போக போக ஆழமாயிடுதுங்க...

    பதிலளிநீக்கு
  8. அழகான படங்கள். குழந்தையின் முகத்தைப் பாருங்கள். அடடா... என்ன ஒரு கும்மாளம்.

    புடிச்ச படம் போடச் சொன்னதுக்கு...

    காமரால புடிச்ச படம்...
    உங்களுக்குப் புடிச்ச படம்...
    பாத்த எங்களுக்கும் புடிச்ச படமால்ல போட்டுட்டீங்க! :)

    பதிலளிநீக்கு
  9. //ஆகவே, Life is calling, Where are you? நான் என் காதுகளை இன்னும் அகலமாக திறந்து வைத்திருக்க முயல்கிறேன் :)//

    அமர்க்களம்...

    பதிலளிநீக்கு
  10. //ஆளை அடித்து அரைநாள் உட்கார வைக்கிற ஒரு சிறுகதையும், கண்ணோரம் நீர்துளிர்க்கச் செய்யும் ஒரு நல்ல கவிதையும், யாருமே கவனிக்கவில்லை என்றதொரு எண்ணத்தில் நம்மை நடனமிடச்செய்யும் பாடலும், சுருதி சுத்தமாய் நம் சுயம் மறந்து கதறியலும் சக மனிதரின் துக்கமும், உடலும் உள்ளமும் சிலிர்க்க வெடிச்சிரிப்பாய் சிரிக்க ஒரு விசயமும் இந்த உலகத்தில் காணக்கிடைக்காத அரிதான பொருட்களா என்ன? ரசனைகளைத் தொலைத்த நல்லன தேடல் மறந்த மனதோரம் வேலிகள் புதைந்த வாழ்வில் மேற்சொன்னவை நம் கண்களில் படாமல் இருப்பது நம் பார்வைக் கோளாறேயன்றி//
    வணக்கம்.அற்புதமான வரிகள்,

    பதிலளிநீக்கு
  11. அண்ணே, கேட்டதுக்கு ச்சும்மா நச்சுனு ஒரு படத்தப் போட்டிருக்கீங்க…
    கொழந்தைங்க சிரிப்பும், கடல் பின்னணியும் கலக்கல்!!!

    பதிலளிநீக்கு
  12. இளா, ஜீரா, சுட்ஜீ, கண்ணன், அருட்பெருங்கோ, கோபி,

    வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  13. படம், குறிப்பு எல்லாம் சுத்த இளவஞ்சித்தனமா இருக்கு.
    ம்ம்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது

கல்யாணமாம் கல்யாணம்! - ஒரு முன்னுரை!

" மா ப்ள.. வீட்டுல பொண்னு பாக்கறோம்னு ஒரே தொல்லைடா... மனசே சரியில்லை! ஒரு தம் போட்டுட்டு வருவமா?" "மாம்ஸ்.. இந்த பொண்னு பார்க்கற மேட்டரைப்பத்தி என்ன நினைக்கற?! ஒரே கொழப்பமா இருக்கு.." "டேய் மக்கா.. கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீக! அப்பறம் என்ன மாதிரி குத்துதே குடையுதேன்னு பொலம்பாதீக.. சொல்லிட்டேன்" "வீட்டுல நிம்மதியா ஒரு 5 நிமிசம் இருக்க முடியலைடா! இம்சை தாங்கலை! இவளை கட்டிவைச்ச எங்க அப்பன் மட்டும் இப்ப கைல கெடைச்சா.." "டேய்.. என்னடா இது.. ஆறு மாசம்கூட ஆகலை.. அதுக்குள்ள டைவர்சு கீவர்சுன்னு பெரிய வார்த்தையெல்லாம் விடற? கிறுக்கா புடிச்சிருக்கு?!" மக்கா! இதெல்லாம் கூட்டாளிக கூட பொங்க போடறப்ப அடிக்கடி கேக்கறமாதிரி இருக்கா? இந்தக் காலத்துல வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கூட கல்யாணம் நடந்து அதை ஒலகமே சேர்ந்து கூடிக் கும்மியடிச்சு கொண்டாடுது! ஆனா பயபுள்ளைங்க நாம கல்யாணம் கட்டறதுன்னா மட்டும் எத்தனை கொழப்பம்? எத்தனை சிக்கல்! ஏண்டாப்பா இப்படி? கை நெறைய சம்பாதிக்க தெம்பிருக்கு! ஆபீசு அரசியல்ல பிண்ணிப் பிணைஞ்சு போராடி மேல வர