முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சில பட்டாம்பூச்சிகளின் பருவகாலங்கள்...

Image hosted by Photobucket.com


சிறகடிச்சுக்கிட்டுதான் இருந்தோம்!
கொரங்குபெடல் சைக்கிளிலும்
ரைட்டாதப்பா கட்டங்களிலும்
படிக்கட்டு சறுக்கலிலும்

கோணமூக்கனின் காக்காகடிக்கும்
தெருப்பயகளுடம் ஐஸ்பாய்க்கும்
அம்மாப்பா விளையாட்டுக்கும்
இதுக்குமுன்னால
யாருமே திட்டுனதில்ல

தம்மு தும்முன்னு நடக்காதே...
அடக்க ஒடுக்கமா ஒக்காருடி..
எப்பப்பாரு என்னடி இளிப்பு?
அத்தனை அசைவுகளுக்கும்
திருத்தம் சொல்லறாங்க
நாங்க
இதுவரை பறந்ததை ரசிச்சவங்க

டீவிசானலை திடீரென மாத்தறதும்
நான் தலைகுனிந்து
விரல்நகம் கடிப்பதும்
எங்க வீட்டின் புதுப்பழக்கம்

ச்சே! அம்மாதான் இப்படின்னா
இந்த அண்ணனுக்கென்ன?
முன்னமாதிரி விளையாடவராம
தள்ளித்தள்ளிப்போறான் கொரங்கு...

பசங்ககூட சேரக்கூடாது சரி..
அப்பாவின் கழுத்தையுமா
பிடிச்சு தொங்கக்கூடாது?

இப்போதெல்லாம் பழகிக்கொண்டோம்
சட்டையை முன்னால் இழுத்துப்பிடித்துக்கொள்ள
சில பார்வைகளை தாண்டிவரும்போது

யாரு கேட்டா இந்த சனியனை
இப்போ வரலேன்னு?

அய்யயோ அங்க்கிள்! நாங்க போறோம்...
அம்மா சொல்லியிருக்காங்க
I should not talk to Strangers!

கருத்துகள்

  1. நீங்க நல்லா எழுதிருக்கீங்க. கலக்கல் இளவஞ்சி

    பதிலளிநீக்கு
  2. ம்..ம்..ம்ம்..கொஞ்சம் விஷயம் இருக்கு. ஆனா இளவஞ்சியின் 'முத்திரை'..? அது சரி, எல்லாத்திலயும் அது கட்டாயம் இருக்கணுமா, என்ன? அப்புறம்,இது வெறும் போஸ்ட் ஆஃபீசா ஆயிடுமே!

    பதிலளிநீக்கு
  3. ம்..ம்..ம்ம்..கொஞ்சம் விஷயம் இருக்கு. ஆனா இளவஞ்சியின் 'முத்திரை'..? அது சரி, எல்லாத்திலயும் அது கட்டாயம் இருக்கணுமா, என்ன? அப்புறம்,இது வெறும் போஸ்ட் ஆஃபீசா ஆயிடுமே!

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. இளவஞ்சி அற்புதமான கவிதை.

    //யாரு கேட்டா இந்த சனியனை
    இப்ப வரலைன்னு//

    நுட்பமான உணர்வுகளை துல்லியமாக சொல்லியிருக்கிறீர்கள்....

    வாழ்த்துகள்.

    உங்கள் படைப்புகளில் இதைத்தான் மிகச் சிறந்ததாக கருதுகிறேன்

    பதிலளிநீக்கு
  6. சிவா, ஞான்ஸ், தருமி, ராசா, முத்துகுமரன்

    உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது

கல்யாணமாம் கல்யாணம்! - ஒரு முன்னுரை!

" மா ப்ள.. வீட்டுல பொண்னு பாக்கறோம்னு ஒரே தொல்லைடா... மனசே சரியில்லை! ஒரு தம் போட்டுட்டு வருவமா?" "மாம்ஸ்.. இந்த பொண்னு பார்க்கற மேட்டரைப்பத்தி என்ன நினைக்கற?! ஒரே கொழப்பமா இருக்கு.." "டேய் மக்கா.. கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீக! அப்பறம் என்ன மாதிரி குத்துதே குடையுதேன்னு பொலம்பாதீக.. சொல்லிட்டேன்" "வீட்டுல நிம்மதியா ஒரு 5 நிமிசம் இருக்க முடியலைடா! இம்சை தாங்கலை! இவளை கட்டிவைச்ச எங்க அப்பன் மட்டும் இப்ப கைல கெடைச்சா.." "டேய்.. என்னடா இது.. ஆறு மாசம்கூட ஆகலை.. அதுக்குள்ள டைவர்சு கீவர்சுன்னு பெரிய வார்த்தையெல்லாம் விடற? கிறுக்கா புடிச்சிருக்கு?!" மக்கா! இதெல்லாம் கூட்டாளிக கூட பொங்க போடறப்ப அடிக்கடி கேக்கறமாதிரி இருக்கா? இந்தக் காலத்துல வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கூட கல்யாணம் நடந்து அதை ஒலகமே சேர்ந்து கூடிக் கும்மியடிச்சு கொண்டாடுது! ஆனா பயபுள்ளைங்க நாம கல்யாணம் கட்டறதுன்னா மட்டும் எத்தனை கொழப்பம்? எத்தனை சிக்கல்! ஏண்டாப்பா இப்படி? கை நெறைய சம்பாதிக்க தெம்பிருக்கு! ஆபீசு அரசியல்ல பிண்ணிப் பிணைஞ்சு போராடி மேல வர