முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருவகை இந்தியா

நினைவு தெரிந்த நாளில் இருந்து எனக்கு தெரிந்த இந்தியா என்றால் அது கீழே உள்ளது தான். எந்த நாட்டிற்க்கும் இல்லாத அமைப்பாய் ஒரு அன்னையின் உருவகமாக இரு கைகளையும் நீட்டி வாரியணைக்க அழைக்கும் படியாய் இருக்கும்.


Source :http://www.indempan.org/image/india-map.jpg

ஒவ்வொரு நாட்டும் ஒவ்வொரு இந்தியா இப்போது. அன்னாட்டுக்கும் இந்தியாவுக்கும் உள்ள அரசியல் உறவுகளைப்பொறுத்து!


Source: http://www.infoplease.com/atlas/country/india.html

ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ வரைபடத்தையே மற்றநாடுகள் பயன்படுத்தவேண்டும் என்ற வரையரைகள், சட்டதிட்டங்கள் ஏதாவது உள்ளதா?

ம்... என்னவாயிருந்தாலும் தலையில்லாத தாயைப்பார்க்க கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது!

கருத்துகள்

  1. 'ஆட்டுத்தாடி' இந்தியா என்று வலைப்பதிவில்தான் எங்கோ படித்த ஞாபகம்.

    பதிலளிநீக்கு
  2. தலை இல்லா நிலை, தாயின் தலையெழுத்தாகிவிட்டதோ?

    பதிலளிநீக்கு
  3. //ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ வரைபடத்தையே மற்றநாடுகள் பயன்படுத்தவேண்டும் என்ற வரையரைகள், சட்டதிட்டங்கள் ஏதாவது உள்ளதா?//


    இளவஞ்சி,
    வருத்தப்படாதீங்க நாம தலைய இழந்து ரொம்ப நாளாச்சு.

    நமது அதிகாரபூர்வ மத்திய அரசாங்க தேர்தல் ஆணையத்தின் J&K Assembly Constituencies க்கான வரைபடமே அவ்வாறுதான் உள்ளது. இது maps.com -ன் தவறு அல்ல.

    உண்மயைத்தான் அவர்கள் சொல்கிறார்கள்.

    பார்க்க:
    http://archive.eci.gov.in/Septse2002/background/J&K.htm

    பதிலளிநீக்கு
  4. தலையின் வலது பகுதி:
    "Borders of Kashmir are in dispute. India,Pakistan and China have differing claims"
    நமது தேர்தல் ஆணையத்தின் ஆவணப்படி அது நமக்குச் சொந்தமானதுதான்...ஆனால் maps.com சொல்வது போல் அதற்கு நம் பங்காளிகளும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. கசப்பான உண்மை, மற்ற நாடுகளின் பார்வையில் கஷ்மீர் ஒரு ப்ரச்சினைக்குரிய பகுதி. சில வருடங்களுக்கு முன், மைக்ரோஸாப்ட் நம்மூருக்கு அனுப்பிய ஆன்கார்ட்டா (MSN Encarta)CDயில (இல்ல வேற என்சைக்ளோபீடியாவான்னு ஞாபகம் இல்ல) இதே மாதிரி படத்த போட்டிருந்தாங்க. அப்போ நடந்த ஆர்ப்பாட்டத்துனால, இந்தியாவுக்கு அனுப்பின CDயில மட்டும் மாற்றினார்கள்.

    இதைவிட முக்கியமானது,

    1. POKயில உள்ள கில்ஜிட் மற்றும் வடக்குப் பகுதிகள் (Northen Areas) எப்போதோ பாக்-குடன் இணைக்கப்பட்டுவிட்டன.

    2. 62-ஆன் ஆண்டு போருக்கான முக்கிய காரணம். வடகிழக்கு பக்கமுள்ள அக்சாய் சின் (Aksai Chin) சீனா எடுத்துக்கொண்டது.

    பதிலளிநீக்கு
  6. காஷ்மீரில் பாதி நம்மிடம் இல்லை என்பதை கல்லூரி சென்ற பின் தான் தெரிந்து கொண்டேன். இந்த உண்மையை நம்மிடமிருந்து மறைக்கும் வண்ணம் பள்ளிகளில் நமக்கு பாடம் சொல்லித்தருவது கண்டனத்திற்குறியது. இப்படி போலி வரை படம் போட்டுத்தான் நாட்டுப் பற்றை வளர்க்க வேண்டுமா என்ன?

    பதிலளிநீக்கு
  7. endless number of these wonderful finds, what with the Internet being a vast network of constantly evolving ideas and all!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு