முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேறவழி? கொஞ்சநாளைக்கு பொழச்சுபோங்க மக்கா!


Image hosted by Photobucket.com

புது வேலை! புது ஊரூ!! கலக்கறே இளவஞ்சி!!!

ஆமாங்க.. நமக்கு வேற ஊருக்கு மாத்தலு ஆயிருக்கு. என்ன ஒரு அநியாயம் பாருங்க! ஒரு கம்பெனியவிட்டு போனா அவங்க கொடுத்த பொருளுகளையும் திரும்பக்கொடுக்கனுமாம். அந்த பழக்கம் நம்ப பரம்பரையிலயே இல்லைன்னு எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். காதுல போட்டுக்காம லேப்பு-டாப்ப புடுங்கிட்டாங்க! நான் செஞ்ச ஆபீசு வேலைய மதிக்கலன்னாலும் தமிழு எலக்கியத்துக்கு தமிழ்மணம் மூலமா( சாருவோட அந்த மூலம் இல்லைங்க..!) நான் செஞ்ச சேவைய மதிச்சாவது விட்டுருக்கலாம்... சரிவிடுங்க... போற எடத்துல நம்பள நம்பி எப்ப அந்த மடிக்கணினிய குடுக்கறாங்களோ அந்த அவருல இருந்து மறுபடியும் ஆரம்பிக்கபோது நம்ம பங்களிப்புன்னு இந்த எடத்துல சொல்லிக்கொள்ள விரும்பறேன்! (என்னடா இழுவை.. மேட்டருக்கு வாடா!!)

அதனால நம்ப தலை கொஞ்சநாளைக்கு இங்க தெரியாது! (இல்லைன்னா மட்டும் தெனமும் இங்க தெரியுதான்னு எதிர்கொரலு விடாதிங்க...! சும்மா ஒரு பில்டப்பு! )

நிம்மதியா நல்ல நல்ல பதிவுகளை போடுங்க..
சந்தோசமா நல்ல நல்ல பதிவுகளை படிங்க... (என்னோடதை சொல்லலீங்க... ஹிஹி...)

கருத்துகள்

  1. இளவஞ்சி, ஆபிஸ் லேப் டாப்பை விடுங்க. சொந்தமா ஒரு டெஸ்க் டாப்பு/லேப் டாப்பு வாங்கிட்டு அப்பப்போ இந்த பக்கம் வாங்கய்யா. புது வேலையும் புது இடமும் உங்களுக்கு நல்ல ஒரு உத்வேகத்தையும்,வாய்ப்புகளையும்,நலனையும் அள்ளித் தரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் இளவஞ்சி :-).

    பதிலளிநீக்கு
  3. புது வேலையில்,'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு' வாழ
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் .. விரைவில் மீண்டும் வருக !!

    உங்கள் வலைப்பூ டிஸைன் மிக அருமை... ரசித்தேன்.. !!


    வீ. எம்!!
    வலைப்பூவிற்கு புது வரவு !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு