முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேறவழி? கொஞ்சநாளைக்கு பொழச்சுபோங்க மக்கா!


Image hosted by Photobucket.com

புது வேலை! புது ஊரூ!! கலக்கறே இளவஞ்சி!!!

ஆமாங்க.. நமக்கு வேற ஊருக்கு மாத்தலு ஆயிருக்கு. என்ன ஒரு அநியாயம் பாருங்க! ஒரு கம்பெனியவிட்டு போனா அவங்க கொடுத்த பொருளுகளையும் திரும்பக்கொடுக்கனுமாம். அந்த பழக்கம் நம்ப பரம்பரையிலயே இல்லைன்னு எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். காதுல போட்டுக்காம லேப்பு-டாப்ப புடுங்கிட்டாங்க! நான் செஞ்ச ஆபீசு வேலைய மதிக்கலன்னாலும் தமிழு எலக்கியத்துக்கு தமிழ்மணம் மூலமா( சாருவோட அந்த மூலம் இல்லைங்க..!) நான் செஞ்ச சேவைய மதிச்சாவது விட்டுருக்கலாம்... சரிவிடுங்க... போற எடத்துல நம்பள நம்பி எப்ப அந்த மடிக்கணினிய குடுக்கறாங்களோ அந்த அவருல இருந்து மறுபடியும் ஆரம்பிக்கபோது நம்ம பங்களிப்புன்னு இந்த எடத்துல சொல்லிக்கொள்ள விரும்பறேன்! (என்னடா இழுவை.. மேட்டருக்கு வாடா!!)

அதனால நம்ப தலை கொஞ்சநாளைக்கு இங்க தெரியாது! (இல்லைன்னா மட்டும் தெனமும் இங்க தெரியுதான்னு எதிர்கொரலு விடாதிங்க...! சும்மா ஒரு பில்டப்பு! )

நிம்மதியா நல்ல நல்ல பதிவுகளை போடுங்க..
சந்தோசமா நல்ல நல்ல பதிவுகளை படிங்க... (என்னோடதை சொல்லலீங்க... ஹிஹி...)

கருத்துகள்

  1. இளவஞ்சி, ஆபிஸ் லேப் டாப்பை விடுங்க. சொந்தமா ஒரு டெஸ்க் டாப்பு/லேப் டாப்பு வாங்கிட்டு அப்பப்போ இந்த பக்கம் வாங்கய்யா. புது வேலையும் புது இடமும் உங்களுக்கு நல்ல ஒரு உத்வேகத்தையும்,வாய்ப்புகளையும்,நலனையும் அள்ளித் தரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. புது வேலையில்,'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு' வாழ
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் இளவஞ்சி.

    சீக்கிரமா வந்துசேருங்க.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் .. விரைவில் மீண்டும் வருக !!

    உங்கள் வலைப்பூ டிஸைன் மிக அருமை... ரசித்தேன்.. !!


    வீ. எம்!!
    வலைப்பூவிற்கு புது வரவு !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது

கல்யாணமாம் கல்யாணம்! - ஒரு முன்னுரை!

" மா ப்ள.. வீட்டுல பொண்னு பாக்கறோம்னு ஒரே தொல்லைடா... மனசே சரியில்லை! ஒரு தம் போட்டுட்டு வருவமா?" "மாம்ஸ்.. இந்த பொண்னு பார்க்கற மேட்டரைப்பத்தி என்ன நினைக்கற?! ஒரே கொழப்பமா இருக்கு.." "டேய் மக்கா.. கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீக! அப்பறம் என்ன மாதிரி குத்துதே குடையுதேன்னு பொலம்பாதீக.. சொல்லிட்டேன்" "வீட்டுல நிம்மதியா ஒரு 5 நிமிசம் இருக்க முடியலைடா! இம்சை தாங்கலை! இவளை கட்டிவைச்ச எங்க அப்பன் மட்டும் இப்ப கைல கெடைச்சா.." "டேய்.. என்னடா இது.. ஆறு மாசம்கூட ஆகலை.. அதுக்குள்ள டைவர்சு கீவர்சுன்னு பெரிய வார்த்தையெல்லாம் விடற? கிறுக்கா புடிச்சிருக்கு?!" மக்கா! இதெல்லாம் கூட்டாளிக கூட பொங்க போடறப்ப அடிக்கடி கேக்கறமாதிரி இருக்கா? இந்தக் காலத்துல வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கூட கல்யாணம் நடந்து அதை ஒலகமே சேர்ந்து கூடிக் கும்மியடிச்சு கொண்டாடுது! ஆனா பயபுள்ளைங்க நாம கல்யாணம் கட்டறதுன்னா மட்டும் எத்தனை கொழப்பம்? எத்தனை சிக்கல்! ஏண்டாப்பா இப்படி? கை நெறைய சம்பாதிக்க தெம்பிருக்கு! ஆபீசு அரசியல்ல பிண்ணிப் பிணைஞ்சு போராடி மேல வர