இன்றய(23-03-05) தினமலரில்(www.dinamalar.com) "இது உங்கள் இடம்" பகுதியில் சி.ராதாகிருஷ்ணன் என்பவர் "தமிழை ஏன் அசிங்கப்படுத்த வேண்டும்?" என்ற தலைப்பில் எழுதியதில் ஒரு பகுதி.
"சலூன் கடை என்பதை சவரக்கடை என்று மாற்றினாலும், உள்ளே முடிவெட்டுதலும் முகமழித்தலும்தான் நடைபெறும்.அதே போல தமிழ் சினிமாக்கள் பெயரில் மட்டும் தமிழாக மாறினாலும், உள்ளே கற்பழிப்பு, ஆடை அவிழ்ப்பு, ஆபாசம், வன்முறை, விரசம் என்று கதைக்கு பதிலாக சதை தான் வீறு நடை போடும்."
முகச்சவரமும் கற்பழிப்பும் ஒன்றா? ஒப்பிட்டு எழுத வேறு உதாரணமே இல்லையா? இதில் நான் சாதியை இழுக்கவில்லை. ஆனால் ஒரு தொழிலை இப்படியா கேவலப்படுத்துவது? இது ஒரு வாசகர் கடிதமாக இருந்தாலும் பிறர்மனதை புண்படுத்தும் என்றால் அதை பத்திரிக்கை ஆசிரியர் அனுமதிக்கலாமா?
"சலூன் கடை என்பதை சவரக்கடை என்று மாற்றினாலும், உள்ளே முடிவெட்டுதலும் முகமழித்தலும்தான் நடைபெறும்.அதே போல தமிழ் சினிமாக்கள் பெயரில் மட்டும் தமிழாக மாறினாலும், உள்ளே கற்பழிப்பு, ஆடை அவிழ்ப்பு, ஆபாசம், வன்முறை, விரசம் என்று கதைக்கு பதிலாக சதை தான் வீறு நடை போடும்."
முகச்சவரமும் கற்பழிப்பும் ஒன்றா? ஒப்பிட்டு எழுத வேறு உதாரணமே இல்லையா? இதில் நான் சாதியை இழுக்கவில்லை. ஆனால் ஒரு தொழிலை இப்படியா கேவலப்படுத்துவது? இது ஒரு வாசகர் கடிதமாக இருந்தாலும் பிறர்மனதை புண்படுத்தும் என்றால் அதை பத்திரிக்கை ஆசிரியர் அனுமதிக்கலாமா?
கண்டிக்கதக்கது.
பதிலளிநீக்கு//இதில் நான் சாதியை இழுக்கவில்லை.//
நல்ல வேளை disclaimer போட்டீங்க. இல்ல சொல்ல வந்த கருத்தை விட்டுவிட்டு நம் வாசக கண்மணிகளால் இங்கே திரும்ப சாதி இழுப்பட்டிருக்கும்.
//இது ஒரு வாசகர் கடிதமாக இருந்தாலும் பிறர்மனதை புண்படுத்தும் என்றால் அதை பத்திரிக்கை ஆசிரியர் அனுமதிக்கலாமா? //
தினமலர் ஆசிரியர்கிட்ட கேட்கிறீருங்களா? :-)
ஒரு உதாரணத்துக்கு அப்படி சலூன்னு சொல்லீருக்கரு பா ! பாவம் மன்னிச்சு உட்டுடுங்கோ
பதிலளிநீக்குசங்கு மணி
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. தினமலருக்கு ஒரு மெயில் அனுப்பியிருக்கேன்!
பதிலளிநீக்குஇளவஞ்சி, ராதாகிருஷ்ணன் ஏதோ ஒரு சாம்பிள்க்கு போட்டுருகார்ன்னு நெனைக்கிறேன். பாவம் விடுங்க.
பதிலளிநீக்குவேணுன்னா இப்படி வெச்சுக்கலாம், "ஆர்.டி.ஓ ஆஃப்பீஸை வட்டார போக்குவரத்து அலுவலகம்ன்னு மாத்தினாலும் கூட அங்கெ லஞ்ச லாவண்யம் குறையவா போகுது?"
இது எப்படி இருக்கு? ஓகேயா? :-)
எம்.கே
எம்.கே...
பதிலளிநீக்குஇது டபுள் ஓகே.. :)
indhu onnum perisa alattikka vendiya vishayamillai enbadhu ennoda thazhmayana karuthu.....
பதிலளிநீக்குThirumalaisamy
ஒண்ணுமில்லாத விஷயம். ஒரு உதாரணத்துக்கு சொல்லி இருக்காங்க. வேற எதாவது சொல்லி இருக்க கூடாதான்னா, அதை சொன்னா மட்டும் சரியான்னு கேட்க ஆட்கள் வருவாங்க.
பதிலளிநீக்குஇதை எல்லாம் பரபரப்பாக்காம இக்னோர் பண்ணுங்க ப்ளீஸ்.
வாத்தி, மீண்டும் ஒரு முறை படிச்சேன். வேண்டாம் சாமி, இந்த பதிவை எடுத்திடுங்க. ப்ளீஸ்.
பதிலளிநீக்குமக்கா இளவஞ்சி
பதிலளிநீக்குசாதி சமாச்சாரமெல்லாம் ஒரு பக்க்ம் இருக்கட்டும். 'சலூனை சவரக்கடைன்னு மாத்துனாலும் உள்ள நடக்குறதுதானே நடக்கும்'னு எழுத வச்சு, 'தமிழ்ல பேரு மாத்துறதெல்லாம் வெட்டி வேலைப்பா'ன்னு ஒரு பொதுவான கருத்தியலை அப்படியே உள்ள புகுத்துற்தை கவனிக்கலையா?
சத்யமேவ ஜெயதேன்னாதான் நமக்கெல்லாம் உறைக்கும். சத்தியமே வெல்லும்னா எவன் கேக்குறான்?
சாத்தான்குளத்தான்
அப்போ, தினமலரெல்லாம் வாசிச்சிக்கிட்டு இருக்கீங்க ..?!
பதிலளிநீக்குநண்பர்களே வருகைக்கு நன்றி!
பதிலளிநீக்குயாருமே தேதியை கவனிக்கவில்லையா?!
இது 2 வருசத்துக்கு முன்னாடி எழுதுனது. இன்னைக்கு புதுசா எழுதுனது இது.
காணாமல் போன சின்னஞ்சிறுசுகள்...
"இடுகைகளைப் புதுப்பிக்க" பகுதியில் என் பிளாக் அட்ரசை குடுத்தா அது பழசையெல்லாம் தோண்டுது. :)
இகோ, இது இன்னைக்கும் சரி அன்னைக்கும் சரி.. பரபரப்புக்காக எழுதலை... இனிமே தூக்கி என்ன ஆகப்போகுது? இருந்துட்டு போகட்டுமே! :)
'வாசகர் பகுதி' என்பது தினமலரைப் பொறுத்த அளவில் அதன் அரிப்புகளைத் தீர்த்துக் கொள்ளும் பகுதியாகும். ஆகையால் இதை எதோ வாசகர் கருத்து என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். தின மலத்தின் கருத்து தான் அது.! இன்றைகு அடித்துக் கொண்டும், ஊத்திக் கொடுத்து ஆள் பிடித்துக் கொண்டும் இருக்கும் காலைக்கதிரிலும், தினமலரிலும், ஒரே கடிதங்கள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு பதிப்புகளில் பயன்படுத்தப்பட்டிருப்பது வெளிப்பட்டதே நினைவிருக்கிறதா?
பதிலளிநீக்குசரி, அது கிடக்கட்டும்...
அடப் பாவிகளா? இப்பத்தான் பார்க்கிறேன்... இது 2005-ல எழுதின பதிவா? சரி...சரி... விசயத்துக்கு வருவோம்.
//சலூன் கடை என்பதை சவரக்கடை என்று மாற்றினாலும், உள்ளே முடிவெட்டுதலும் முகமழித்தலும்தான் நடைபெறும்.//
சரிங்க வெண்ணைகளா... சவரக்கடைங்கிறதை சலூன்-னு சொன்னாலும், அங்க முடிவெட்டுதலும், முகமழித்தலும் தானடா நடக்கப்போகிறது. விளங்காதவங்களா?
எடுத்துக்காட்டுக்கு அவர்கள் காட்டிய தொழில், முடிதிருத்தும் தொழில் என்று நல்ல எண்ணத்தோடு எடுத்துக் கொள்வோம்.ஆனாலும் ஏற்கனவே ஒருமுறை 'தினத்தந்தி' பேப்பரைக் காட்டி, இது சவரம் செய்த நுரையைத் தேய்க்கத்தான் லாயக்கு என்ற பொருளில் விளம்பரம் எடுத்து, வாங்கிக் கட்டிக்கொண்டதும், இன்னுமொருமுறை முடிதிருத்துவோர் குறித்து எழுதி, வாங்கிக்கட்டிக்கொண்டதும் நினைவுக்கு வந்துவிடுகிறது.
(இப்பின்னூட்டம் தனிப் பதிவாக இடம்பெற்றுள்ள இடம்:
http://princenrsama.blogspot.com/2007/05/blog-post_23.html)
//சாதி சமாச்சாரமெல்லாம் ஒரு பக்க்ம் இருக்கட்டும். 'சலூனை சவரக்கடைன்னு மாத்துனாலும் உள்ள நடக்குறதுதானே நடக்கும்'னு எழுத வச்சு, 'தமிழ்ல பேரு மாத்துறதெல்லாம் வெட்டி வேலைப்பா'ன்னு ஒரு பொதுவான கருத்தியலை அப்படியே உள்ள புகுத்துற்தை கவனிக்கலையா?
பதிலளிநீக்கு//
தொழிலை இழுத்ததை விட இது தான் கண்டிக்க வேண்டிய கருத்துத் திணிப்பு
PRINCENRSAMA,
பதிலளிநீக்குவருகைக்கும் ஆதரப்பூர்வமான உங்கள் நீண்ட பதிலுக்கும் நன்றி!
அண்ணாச்சி, ரவிசங்கர்,
நீங்க சொல்லறது சரிதான்!
இந்த வாசகர் கடிதம் எழுதப்பட்டதே ஏன் அனைத்து வார்த்தைகளையும் தூயதமிழில் மாற்றவேண்டும் என்ற கேள்வியோடுதான்! பா.ம.க பெயர்ப்பலகைகளை மாற்றிய காலத்தில் எழுதப்பட்டது. சரி! அவரவருக்கு அவரவர் கருத்து! ஆனால் சவரக்கடையை கொலை கொள்ளை கற்பழிப்போடு தொடர்புபடுத்தி எழுதியது உறுத்தியதாலேயா அந்தக்காலத்தில் போட்ட பதிவு.
இந்த வாசகர் கடிதத்திற்க்கான சுட்டி கிடைத்தால் சேர்க்கிறேன்.
கொத்தனார் மட்டும் தினமலத்திற்கு சப்போர்ட்.ஸ்ஸ்ப்பா கல்லறைக்கே போனாலும் :))
பதிலளிநீக்கு